உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லிக்கு கொடுக்க தண்ணீர் இல்லை: ஹிமாச்சல பிரதேச அரசு கைவிரிப்பு

டில்லிக்கு கொடுக்க தண்ணீர் இல்லை: ஹிமாச்சல பிரதேச அரசு கைவிரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛ டில்லிக்கு தண்ணீர் திறந்து விடும் அளவுக்கு தங்களிடம் உபரி நீர் இல்லை'' என உச்சநீதிமன்றத்தில் ஹிமாச்சல பிரதேச அரசு தெரிவித்துள்ளது.டில்லியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனை சமாளிக்க உ.பி., ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து கூடுதலாக நீர் திறக்க வேண்டும் என டில்லியை ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், சுமார் 137 கியூசெக்ஸ் நீரை கூடுதலாக திறக்க வேண்டும் என ஹிமாச்சல பிரதேச அரசுக்கு உத்தரவிட்டது. இது குறித்த தகவலை ஹரியானா அரசிடம் தெரிவிக்க வேண்டும் எனவும், அதனை வாஜிராபாத் அணை வழியாக வெளியேற்றுவதற்கான வசதிகளை ஹரியானா மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டது.இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் கோடைகால அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் பிரசன்னா வரலே ஆகியோர் முன்பு ஹிமாச்சல பிரதேச அரசு தாக்கல் செய்த மனுவில், டில்லி அரசுக்கு திறக்கும் அளவுக்கு தங்களிடம் 136 கியூசெக்ஸ் உபரி நீர் இல்லை என தெரிவித்துள்ளது.இதன் பின்னர் நீதிபதிகள் கூறுகையில், மாநிலங்களுக்கு இடையே யமுனை நீரை பகிர்ந்து கொள்ளும் விஷயம் சிக்கலானது. இது குறித்து முடிவு செய்ய நீதிமன்றத்திடம் தொழில்நுட்ப வல்லுநர்கள் இல்லை என்றனர். மேலும் இது குறித்து டில்லி அரசு, ‛ அப்பர் யமுனை நதிநீர் வாரியத்திடம்' மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

sankaranarayanan
ஜூன் 13, 2024 21:06

இன்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தோழமை கட்சியான காங்கிரசுக்கட்சி ஆளுகின்ற மாநிலமான ஹிமாச்சல் பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியே தலைநகரை ஆளும் ஆம் ஆத்மீ கட்சி மாநிலத்திற்கு தண்ணீர் கொடுக்க முடியாது என்று சொன்னபின் யார் என்னைய்யா செய்ய முடியும் அவர்களிடம் போய் முட்டி மோதி கொள்ளுங்கள்


உப்பிலி
ஜூன் 13, 2024 19:10

இந்தியாவுல எந்த ரெண்டு மாநிலங்கள் நட்போட இருக்குன்னு சொல்ல முடியுமா? நீதிபதிகள், மத்திய மந்திரிகள், ஜனாதிபதி வீடுகளுக்கு தண்ணீர் கட்பண்ணுங்க. இமயமலை என்ன, இடுக்கியிலிருந்து கூட தண்ணீர் சப்ளை ஆயிடும்.


Palanisamy Sekar
ஜூன் 13, 2024 15:54

நல்ல அரசு என்றால், வழக்கின் மூலம் மிரட்டி வாங்க முடியாது. நேரில் சென்று மக்களுக்காக அணுகி இருக்கவேண்டும். பரஸ்பர நட்புணர்வோடு அணுகியிருந்தால் நிச்சயம் நல்ல செய்தியோடு நீர் கிடைத்திருக்கும். வழக்கு போட்டால் கொடுத்துவிடுவார்களா என்ன? அவர்களுக்கும் தன்மான பிரச்சினையாக கருத இடமுண்டு. டெல்லி மக்கள் தங்கள் தலையில் தானே மண்ணள்ளி போடுவது போல கெஜ்ரிவாலுக்கு வாக்களித்தார்கள் இப்போது தவித்த வாய்க்கு தண்ணீர் தர முடியாமல் ஊழல் செய்து சிறையில் முதல்வகுப்பில் அமர்ந்துகொண்டு சேர்த்த சொத்துக்களை எப்படி பாதுகாப்பது என்று திராவிடர்களிடம் பாடம் படித்துக்கொண்டுள்ளார். இனியேனும் டெல்லியில் பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்ததை போல செய்து தங்கள் வாழ்வை செழுமையாக்கி கொள்ளவேண்டும்.


Vathsan
ஜூன் 13, 2024 14:54

டெல்லிக்கு 7 எம்பிக்களையும் கொடுத்த டெல்லி மக்களுக்கு ஹிமாச்சல் அரசு கொடுக்கும் பரிசு...


sethu
ஜூன் 13, 2024 15:21

58 எம் ல் எ களையும் டில்லிமக்கள்தானே கொடுத்துள்ளனர் . விடியல் அரசு ஒரு கற்பனை அதேபோல அணைத்து மாநிலங்களும் உசாராக மக்களை ஏமாற்ற ஆரம்பித்துள்ளனர் .


KavikumarRam
ஜூன் 13, 2024 18:13

40 எம்எல்் வச்ச்சுக்கிட்டும் உன் தயவுல காங்கிரஸ் இருக்கும் போதே காவிரி தண்ணி விடமாட்டிங்கிறார், ஆனா அவர் கூட கூட்டணியும் வச்சுக்கிட்டு பேசமாட்டிங்கிறீங்க


மேலும் செய்திகள்







புதிய வீடியோ