உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜல்லிக்கட்டு காளை பொம்மை பரிசு; மோடியின் மனம் கவர்ந்த நயினார்: டில்லி உஷ்ஷ்...!

ஜல்லிக்கட்டு காளை பொம்மை பரிசு; மோடியின் மனம் கவர்ந்த நயினார்: டில்லி உஷ்ஷ்...!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தமிழக பா.ஜ., தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நயினார் நாகேந்திரன், சமீபத்தில் டில்லி வந்து பிரதமர் மோடியைச் சந்தித்தார். அப்போது, ஜல்லிக்கட்டு காளை மாடல் ஒன்றை பிரதமருக்கு பரிசாக வழங்கினார்.இதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த மோடி, 'இதை பிரதமர் அருங்காட்சியகத்தில் வைப்பேன்' என்றாராம். பின், தமிழக அரசியல் நிலை குறித்து அவரிடம் விவாதித்தாராம். 'தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டுவந்தது நாம்தான் என, தமிழகம் முழுதும் பிரசாரம் செய்யுங்கள். அத்துடன், காங்கிரஸ் எப்படி ஜல்லிக்கட்டை எதிர்த்தது, 'ஜல்லிக்கட்டு ஒரு காட்டுமிராண்டி விளையாட்டு' என, அப்போதைய காங்., அமைச்சர் ஒருவர் கூறியதையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்' என, நாகேந்திரனிடம் கூறினாராம் மோடி.ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டுவர பன்னீர்செல்வமும், பழனிசாமியும் எப்படி உதவினர் என்பதையும் நினைவு கூர்ந்தாராம் மோடி. காங்கிரஸ் ஆட்சியின்போது அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ், ஜல்லிக்கட்டை எதிர்த்து பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Iniyan
மே 04, 2025 20:20

எடப்பாடி கையில் இவரே ஒரு பொம்மை. இந்த பொம்மை ஒரு பொம்மையை பரிசு அளித்தாராம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 04, 2025 10:43

காளையை அடக்குற மாதிரி அண்ணாமலையை அடக்கி அனுப்புனதுக்கு தாங்க்ஸ் ...... இதைத்தான் நயினார் மோடி ஜி க்கு சொல்லாமல் சொன்னாரா ??


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 04, 2025 14:06

அப்போ அண்ணாமலை சிம்ம சொப்பனமாக பலருக்கு இருந்து பலரது தூக்கத்தை கெடுத்திட்டாருன்னு ஒப்புக்கிறீங்கோ சரிங்கலா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை