உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எதிர்க்கட்சிக்கே துணை சபாநாயகர் பதவி: அகிலேஷ் விருப்பம்

எதிர்க்கட்சிக்கே துணை சபாநாயகர் பதவி: அகிலேஷ் விருப்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: எதிர்க்கட்சிகள் துணை சபாநாயகர் பதவியை பெற விரும்புகின்றன என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார்.இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, முதன்முறையாக சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தே.ஜ., கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், எதிர்க்கட்சியான ‛இண்டியா' கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷூம் வேட்புமனு தாக்கல் செய்தனர். இது தொடர்பாக நிருபர்கள் சந்திப்பில் அகிலேஷ் யாதவ் கூறியதாவது:லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சிக்கு துணை சபாநாயகர் பதவியை வழங்க தே.ஜ., கூட்டணி மறுத்துவிட்டது. இதனால் தேர்தல் கட்டாயப்படுத்தப்பட்டது. எல்லாம் விரைவில் நமக்கு சாதகமாக வரும்..துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சியினர் வசம் இருந்திருக்க வேண்டும். இது தான் எதிர்க்கட்சிகளின் ஒரே கோரிக்கை. சபாநாயகர் பதவிக்கு இண்டியா கூட்டணி போட்டியிடுவதால், எதிர்க்கட்சிகள் துணை சபாநாயகர் பதவியை பெற விரும்புகின்றன. இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

sankaranarayanan
ஜூன் 25, 2024 21:19

கேட்டதும் கொடுத்துவிட்டால் அல்லது கிடைத்துவிட்டால் கிருஷ்ணா கீதையின் நாயகனே என்று பாடிக்கொண்டே செல்லலாமே


Anand
ஜூன் 25, 2024 18:53

கேட்கிறது தான் கேட்கிறாய் பிரதமர் பதவி கேட்ககூடாதா? இதிலும் அல்பத்தனமா?


Duruvesan
ஜூன் 25, 2024 18:01

இண்டி கூட்டணி சபாநாயகர், எதிர் கட்சி துணை.


என்றும் இந்தியன்
ஜூன் 25, 2024 17:39

அப்போ நீ முதலமைச்சராக இருந்தாயே அப்போது அப்படித்தானே செய்தாய் தொட்டில் குழந்தையே???


Bala Paddy
ஜூன் 25, 2024 17:26

நீங்க ஊ பி மக்களை ஏமாத்தி ஜெயிச்சதுக்கு ஒரு பதவியும் கிடையாது. அஞ்சு வருஷம் காஞ்சி கிடங்கடா.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை