உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிஎம்ஸ்ரீ பள்ளிகளுக்கு தமிழக அரசின் ஒப்புதல் கடிதத்தை வெளியிட்டார் தர்மேந்திர பிரதான்

பிஎம்ஸ்ரீ பள்ளிகளுக்கு தமிழக அரசின் ஒப்புதல் கடிதத்தை வெளியிட்டார் தர்மேந்திர பிரதான்

புதுடில்லி: பிஎம்ஸ்ரீ பள்ளிகளுக்கு ஒப்புதல் அளித்து தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டு உள்ளார்.'எக்ஸ்' சமூக வலைதளத்தில் இந்த கடிதத்தை வெளியிட்டு அவர் கூறியுளளதாவது: பிஎம்ஸ்ரீ பள்ளிகளுக்கு தமிழக அரசு ஒப்புதல் தொடர்பாக கூறி நான் பார்லிமென்டை நான் தவறாக வழிநடத்துவதாக முதல்வர ஸ்டாலின் குற்றம்சாட்டினார். பார்லிமென்டில் நான் சொன்னதில் உறுதியாக இருக்கிறேன். கடந்த 2024 மார்ச் 15ல் தமிழகபள்ளி கல்வித்துறை அனுப்பிய ஒப்புதல் கடிதத்தை பகிர்கிறேன்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qxycje7r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தி.மு.க., எம்.பி.,க்கள் மற்றும் முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு வேண்டுமானாலும் பொய்களை அடுக்கி வைக்கலாம். ஆனால், உண்மை சரிந்து விழும்போது தட்டிக் கேட்பது கிடையாது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு மக்களுக்கு நிறைய பதில் சொல்ல வேண்டி உள்ளது. மொழிப் பிரச்னையை திசைதிருப்பும் தந்திரமாக பேசி தங்கள் வசதிக்கு ஏற்ப உண்மைகளை மறுப்பது என்பது அவர்களின் நிர்வாகத்தை காப்பாற்றாது.தேசிய கல்விக் கொள்கை மீதான இந்த திடீர் நிலைப்பாடு ஏன்? தி.மு.க.,வின் அரசியல் செல்வாக்கை மீட்டெடுப்பதற்காகவே இந்த மாற்றம். தி.மு.க.,வின் இந்த பிற்போக்குத்தனமான அரசியல், தமிழகத்திற்கும் அதன் மாணவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கும் அவமானம்.தேசிய கல்விக் கொள்கையை அரசியல் பார்வையில் பார்க்க வேண்டாம். அரசியல் ஆதாயங்களைவிட தமிழகத்தில் உள்ள நமது குழந்தைகளின் நலனுக்கு முன்னுரிமை கொடுங்கள். இவ்வாறு அந்த பதிவில் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

தி.மு.க.,வின் வெற்றுப் பேச்சுகள்

தொடர்ந்து மற்றொரு பதிவில் தர்மேந்திர பிரதான் கூறியதாவது: மொழித்திணிப்பு மற்றும் தேசிய கல்விக் கொள்கை குறித்த தி.மு.க.,வின் சமீபத்திய கூச்சல், அக்கட்சியின் பாசாங்கு தனத்தை வெளிப்படுத்துகிறது. தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு என்பது, தமிழ் மொழி , கலாசாரம் மற்றும் பெருமையை பாதுகாப்பதற்கு எந்தத் தொடர்பும் இல்லை. அரசியல் ஆதாயத்திற்காக தான் எதிர்க்கிறது.தமிழ் மொழியை மேம்படுத்த போராடுவதாக தி.மு.க., கூறுகிறது. ஆனால், உண்மையில் தமிழ்மொழி, கலாசாரம் மற்றும் இலக்கிய சிந்தனைகளை ஊக்கப்படுத்தவும், மேம்படுத்தவும் எதுவும் செய்யவில்லை.ஆனால், தரவுகளின்படி, 2018 - 19 கல்வியாண்டில் தமிழ் வழிக்கல்வியில் 65.87 லட்சம் ஆக இருந்த மாணவர் சேர்க்கை 2023-24 ல் 46.83 லட்சமாக குறைந்துள்ளது. ஐந்து ஆண்டுகளில் 19.05 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது.67 சதவீத மாணவர்கள் ஆங்கில வழி பள்ளியில் படிக்கின்றனர். அதேநேரத்தில் தமிழ் வழியில் மாணவர் சேர்க்கை 54 சதவீதத்தில்(2018 -19) இருந்து 36 சதவீதம்(2023- 24) ஆகக் குறைந்துள்ளது.அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஐந்தாண்டுகளில் 3.4 லட்சத்தில் இருந்து 17.7 லட்சமாக ஐந்து மடங்கு அதிகரித்து உள்ளது.அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 7.3 லட்சமாக குறைந்துள்ளது.இது தமிழகத்தில், தமிழ் வழியில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருவதை காட்டுகிறது. இது மொழி விருப்பத்தில் ஏற்பட்ட மாற்றமல்ல, காலனித்துவ மனநிலையின் மாற்றமாகும். வேலை மற்றும் அந்தஸ்துக்கு ஆங்கிலம் நுழைவு வாயிலாக கருதப்படுகிறது. இந்திய மொழிகள் பின்தங்கிய நிலையின் அடையாளமாக காணப்படுகின்றன.தாய் மொழிக் கல்வியை ஊக்குவிப்பது என்பது தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய மான அம்சங்களில் ஒன்றாகும். இளம் மனங்களில் விமர்சன சிந்தனையை வளர்ப்பதற்கும், இந்திய மக்கள் தொகையின் முழு திறனையும் வெளிக் கொண்டு வருவதற்கும் இது மிகவும் உறுதியான பாதையில் ஒன்றாகும்.தேசிய கல்விக் கொள்கை மற்றும் மொழித்திணிப்பு குறித்த தி.மு.க.,வின் வெற்றுப் பேச்சுகள் மூலம் அவர்களின் தோல்வியை மறைக்க முடியாது. தமிழகத்தின் எதிர்காலத்தை பணயம் வைத்து அதிகாரம் செலுத்துவது என்ற அவர்களின் அரசியல் திட்டம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 212 )

M.Jeeva
ஏப் 08, 2025 12:56

yeen magal tamil medium padithuvittu velaiku chella interview-ill english pathil cholla mudiyamal veelai vaipuu paripoki veetaathu


ஜெய்ஹிந்த்புரம்
மார் 21, 2025 08:00

அப்போ மோடிஜி பைனஞ்சி லட்சம் தர்றேன்னு சொன்னதுக்கு வியாக்கியானம் சொல்லுதீரே. கடிதத்தில் "based on the recommendation from the committee" ன்னு கொக்கி வெச்சிருக்காளே, புரியல்லியா மண்டு.


sethu
மார் 21, 2025 10:12

200...


sethu
மார் 21, 2025 10:17

based on the committee recommendation will be nu இல்லையே என்ன செய்ய


மூர்க்கன்
மார் 21, 2025 12:24

இதெல்லாம் அறிவு இருக்குறவனுக்குத்தான் புரியும்.


Sivak
மார் 24, 2025 13:47

அடேய் இன்னுமா அந்த பாஞ்சி லட்சம் கதையை வெச்சி உருட்டிட்டு இருக்க? உன் ஓனர் ல்லாம் அந்த உருட்டு எல்லாம் வேலைக்காகாது என்று மும்மொழி தொகுதி பிரச்னை என அடுத்த 100 உருட்டு உருட்டியாச்சி... தூக்கத்துல இருந்து முழிச்சிக்கோ ... 200 "ரூ"


நல்லதை நினைப்பேன்
மார் 27, 2025 21:58

"based on the recommendation of the committee" க்கும் "based on the recommendation from the committee" கும் நிரம்ப வித்தியாசம் உள்ளது.


Ranganathan
மார் 16, 2025 09:22

DMK encouraging freebie an indirect way of corruption to gain votes. They believe in raising language issue to win the Election. This is nothing but making mockery of democracy. This is one nation and uniform education rules should be followed.


Sivagiri
மார் 13, 2025 12:58

ஆக, தமிழ்நாட்டில், தமிழோ, தெலுங்கோ, ஹிந்தியோ, மலையாளமோ, எந்த மொழியும் தெரியாத, அதோடு கொஞ்சூண்டு ஆங்கிலம் மட்டும், அதுவும் தத்தக்காபித்தக்கா-ன்னு, எழுதவும் தெரியாத சரளமான பேசவும் தெரியாத, அடுத்தவர்கள் பேசினாலும் புரிந்து கொள்ள முடியாத, ஒரு காலி-தகரடப்பா - போல, ஆக்கி வச்சிருக்காய்ங்க... தமிழனை , தமிழனாகவோ , இந்தியனாகவோ , வாழ விட மாட்டாய்ங்க போல . . . .


ஜெய்ஹிந்த்புரம்
மார் 21, 2025 07:58

ஒழுங்கா பள்ளிக்கூடம் போயி படிச்சிருக்கணும்லே.


abdulrahim
மார் 13, 2025 12:15

சங்கிகளே உங்களை விட உழைத்து சாப்பிடும் நான் மேலானவன் தாண்டா....


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 13, 2025 23:51

என்ன உழைப்பு ??


kannan
மார் 15, 2025 03:41

தர்மராஜுக்கு உழைப்பு என்ற வார்தையே தெரியவில்லை..


Sivak
மார் 24, 2025 13:51

திருட்டு கழக உறுப்பினர்...?? உழைத்து சாப்பிடறதுன்னா என்னன்னு தெரியுமா?


பல்லவி
மார் 13, 2025 02:44

எத்தனையோ முறை தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதியும் பலனில்லாத கடிதங்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது போல தோணுது தானே


Kumar
மார் 13, 2025 01:15

உனக்கும் ஆங்கிலம் வராதா? படைத்தவனிடம் இந்த கடிதத்தை காண்பித்து, படிக்கச் சொல்லி புரிந்து கொள்ளவும்.


Bala
மார் 12, 2025 23:45

தர்மேந்திர பிரதான்ஜி நாங்க எங்கள் தாய் மொழியிலேயும் ஆங்கிலத்திலேயும் கொஞ்சம் வீக் . உங்கள் கடிதத்தை தப்பாக புரிந்துகொண்டோம். பார்த்து படிப்பதற்கே எங்களுக்கு கொஞ்சம் தடுமாறும். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க


சிவா. தொதநாடு.
மார் 12, 2025 23:37

உங்களுக்கு எதுக்கு வெள்ளே... வடிவேல் தான் ஞாபகம் வருகிறார்


ES
மார் 12, 2025 23:11

Stop this bullahit drama we don't need a 3rd language to burden kids. Tamil and English for link language that's more than enough


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை