உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அம்பானி மகன் திருமணம்; அத்தனையும் மக்கள் பணம்; ஆதங்கப்படுகிறார் ராகுல்!

அம்பானி மகன் திருமணம்; அத்தனையும் மக்கள் பணம்; ஆதங்கப்படுகிறார் ராகுல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பகதுர்கார்க்: '' அம்பானி மகன் திருமணத்தில் செலவழிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் அத்தனையும் உங்களுடையது'', என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசினார்.ஹரியானா சட்டசபை தேர்தலை முன்னிட்டு பகதுர்கார்க் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: மாநிலத்தில் போதைப்பொருள் பிரச்னை பெரியதாக உள்ளது. அதானி வசமுள்ள முத்ரா துறைமுகத்தில் ஆயிரகணக்கான கிலோ எடை கொண்ட போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட போது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என பிரதமர் மோடியிடம் கேட்க விரும்புகிறேன். அம்பானி மகன் திருமணத்திற்கு கோடிக்கணக்கில் பணம் செலவு செய்யப்பட்டது. இது அனைத்தும் மக்கள் பணம். உங்களது குழந்தைகளுக்கு திருமணம் செய்ய வங்கிக்கடன் வாங்கி உள்ளீர்கள். ஆனால், மோடி ஒரு கட்டமைப்பை உருவாக்கி உள்ளார். இதன் கீழ் தேர்வு செய்யப்பட்ட 25 பேர் திருமணத்திற்கு கோடிக்கணக்கில் திருமணம் செய்யலாம். ஆனால், விவசாயி கடன் வாங்கி மட்டுமே நடத்த முடியும். இது அரசியல் அமைப்பு சட்டத்தின் மீதான தாக்குதல். இவ்வாறு ராகுல் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 86 )

karthik
நவ 01, 2024 08:50

எந்த வேலையும் செய்யாமல் இத்தனை கழுதை வயசு வரைக்கும் கோடிகோடியாக செலவழித்துக்கொண்டு ஊர் சுற்றிக்கொண்டு திரிகிறாயே இது யார் பணம்? காங்கிரஸ் அலுவலகம் பல கோடி செலவழித்து பிரமாண்டமாய் கட்டப் பட்டிருக்கிறதே அது யார் பணம்? மக்களிடத்தில் பொறாமையையும் பிளவையும் உங்க கூட்டம் காலம் காலமாய் வித்தைத்துக்கொண்டே இருக்கிறது. கடவுள் நல்ல வேலையாக உண் பாரத பிரதமராக வர விடாமல் மக்களை நாட்டை காத்துக் கொண்டிருக்கிறார். கடவுளுக்கு கோடி நன்றிகள்


palaniswami
அக் 31, 2024 20:12

Instead of strengthening his party, he gives lose talk about Adani ,Ambani and others in India and whenever he goes abroad addresses people talks about our nation in a worst way which damages our reputation and image across the world. He is not a s and matured person brings down our respect and dignity.


Sivasankaran Kannan
அக் 29, 2024 14:35

இந்த கரப்பான் பூச்சி 70 வருஷமா மக்கள் பணத்தை திருடி வெளி நாடுகளில் பதுக்கி ஒரு பெருச்சாளி போல வாழ்ந்து வருகிறது.. இது அம்பானி பற்றி பேசுகிறது..


Ramalingam Shanmugam
அக் 16, 2024 09:43

பட்டையா போய் வருவது யார் வீட்டு பணம் பப்பு


ரெட்டை வாலு ரெங்குடு
அக் 15, 2024 07:26

ராவுளுக்கு "அதிகபட்ச வயித்தெரிச்சல் பிடிச்சான்" என்கிற கின்னஸ் புத்தகத்தில் இவரின் பெயர் இடம்பெற வேணும். வயித்தெரிச்சல் விஞானி என இவருக்கு ஒரு பட்டம் கொடுக்கலாம். ராவுளு ஊரிலேயே ஒருவேளை ஒருவேலை ஒருவெட்டி இல்லாமல் சுற்றிதித்திருந்து உழைக்கு மக்களின் வயித்தெரிச்சலை கொட்டிக் கொண்ட ஒரே தீசல் பேர்வழி சாஃஷாட் வேலைவெட்டி செய்யாத ராவுளு கான் தான் என்பது நிரூபணம். மக்களின் வெறுப்பை சம்பாதிப்பதே இவனின் முழுநேர வேலை


M Ramachandran
அக் 07, 2024 20:22

இந்த அமெரிக்கா சீன கை கூலியால், பொய் புளுகியால், அமெரிக்க்த்தான் ஒரு தனிநபரின் கிளிப்பிள்ளையால் பாவம் அதானி மற்றும் அத்வானி களுக்கு பெரு இழப்பு. இந்த ஆக்கம் கெட்டாகூவெக்கு தேர்தலுக்கு கொட்டி அழுதத்திற்கு கை மாறு. நாட்டின் திரோகி இந்த அயல் நாட்டான். கண்கூடாகா 2014 க்கு பிறகு யேற்பட்ட நாட்டின் முன்னேற்றம் நம் மக்கள் சொந்த கையால் உழைத்து முன்னேரியம் அரசின் கஜானா சூறையாட பாடாமல் கவனமாக இருப்பதால் நம் பொருளாதாரம் மிக சிறப்பாகா உள்ளது. உருப்புடா ஜென்மங்கள் அயல் நாட்டானுக்கு வியலிய்ய போரானது மல்லாமல் எலி போல் முடிந்த வரையில் கடித்து குதறி கொண்டு இருக்கு. மாக்களை ஏற்காமைந்தாள் நாம் அயல் நட்டான் சொல்வதைய்ய கேஆட்க வேண்டும் அவனிடம் கைய்யேந்தி அவன் பொருளையய அங்கி பொஆண்டியாகா வேண்டும். சில சில்லறைக்காக ஈன தொழில் செய்யும் ஜென்மங்கள்


Lion Drsekar
அக் 06, 2024 18:04

அம்பானி எந்த கட்சியில் அமைச்சர், எங்கு லஞ்சம் வாங்கினார், இவர் கொடுக்கும் இடத்தில இருக்கிறார், மேலும் வசதிபடைத்த வியாபாரிகள் மற்றும் தொழில் அதிபர்களிடம் பணம்பெற்று இன்றைக்கு அதற்குப் பெயர் தேர்தல் பத்திரம் அடித்துக்கொள்ள இரு கைகள் போதாது , பெற்றுவாழ்க்கை நடத்திவந்தவர்கள், வருபவர்கள் ,வரப்போபவர்கள் எல்லோருமே அரசியல் கட்சியினர்கள்தான், தங்களுக்கு ஆதாயம் இல்லை ஏங்கும்போது கூக்குரல் இடுவது மிகவும் தவறு, ஒரு காலத்தில் சாயாத வியாபாரி எத்தினை லட்சம் கோடி கொடுத்திருக்கிறார் அவர் பெயரை சொன்னாலே பிணமும் வாய்திறக்கும் , அந்த அளவுக்கு எல்லோருக்கும் வாக்கரசி போட்டிருக்கிறார், அவர் பெயர் விஜய் மல்லையா . இன்று அவர் நிலை, தற்போது அவர் அடுத்த வேலை சோற்றுக்கு வழி இல்லாமல் இல்லை, இராஜ வாழ்வுதான் இருந்தாலும் , இங்கு அவரது பெயருக்கு களங்கம் ,. நாடு கடத்தப்பட்டது , காரியம் முடிந்தவுடன் கழட்டி விடுவது என்பது இதுதான் , இந்த மாமன்னர் மிகப்பெரும் புள்ளிகளுக்கு பல லட்சம் கோடி வாங்கிக்க கடனை தள்ளுபடி செய்வதை கண்டித்திருந்தால் பாராட்டலாம் , மக்கள் பணம் என்பது தொழில் துறையினர் மற்றும் வியாபாரிகளை பொறுத்தவரையில் மக்கள் என்றோ அல்லது மக்கள் பணம் என்பதோ பொருத்தமே இல்லை மக்கள் ஒரு பொருள் வாங்குபவர்கள், வாடிக்கையாளர்கள், மக்கள் பணம் என்பது மக்கள் வரிக்கட்டி அதில் பிழைப்பு நடத்துபவர்களுக்குத்தான் மக்கள் பணம் பொருந்தும் . என்ன சொல்லி என்ன பயன் யார் திருதப்போகிறார்கள், இந்த உடலில் உயிர் இருக்கும்வரை தினமலரில் பகிர்ந்து கொள்கிறோம் , வாழ்க தினமலர் , என் உயிர் மூச்சு தினமலர் மட்டுமே, வளர்க உங்கள் சேவை, வந்தே மாதரம்


Mohan
அக் 06, 2024 11:25

"""கிறுக்குப்பயலுக ஊர்ல, கேனப்பய நாட்டாமை""", - இது கிராமங்களில் பேசப்படும் சொலவடை. அம்பானி ஒன்னும் தேச சேவைக்கு வந்தேன்னு சொல்ல வில்லை. அப்படி சொல்றவங்க நீங்களும் உங்க விடியல் கூட்டாளிகளும் தான் """என்ன மாதிரி தேச சேவை""" செய்வீங்கங்கறது உலகத்துக்கே தெரியும். உங்க அடிவருடிகள் சைடு இன்கமுக்காக உங்களுக்கு அல்லக்கை, நொள்ளக்கை களாக இருப்பாங்க. கை தட்டுவாங்க, காசு வாங்கி ஓட்டு போடுவாங்க, ""உள்ளேயும்"" சரக்கைப் போடுவாங்க. அவுங்க விசிலடிக்கறதுக்காக பப்பு பேசுவாரு. இப்ப கொடுமை என்னன்னா தலைவரே பேசுறாரு, நாம்மளும் அப்படியே பாலோ பண்ணுனா நம்ம பேச்சையும் கேப்பாங்கன்னு வட்டம், மாவட்டம்,குட்டித்தலை, பெருந்தலை, அந்தப்பிரிவுத்தலை, இந்தப்பரிவுத்தலை, கோஷ்டித்தலை, இப்படி எல்லாரும் ராகுலின் விதிமுறையற்ற பேச்சுகளை எதிரொலிக்கின்றனர், எதாவது பதவி கிடைக்குமோ என்று கஷ்டம்


Matt P
அக் 05, 2024 12:42

அந்த ஆளாவது தொழில் செய்தார் . அரசியல்வாதிகள் அமைச்சர்களா இருந்து கொண்டே எவ்வளவு ஆடமபரமா அவர்களுடைய மக்களுக்கு கல்யாணம் நடத்துகிறார்கள்.


xyzabc
அக் 05, 2024 10:33

ராகுல் bhaiya, நேற்று உண் அண்ணன் அம்பானி உடன் பேச்சு வார்த்தை நடத்தினான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை