உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 94% வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை : அமலாக்க துறை இயக்குநர் பேச்சு

94% வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை : அமலாக்க துறை இயக்குநர் பேச்சு

புதுடில்லி, “அமலாக்கத் துறை விசாரித்தவற்றில், 94 சதவீத வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்துள்ளோம்,” என, அதன் இயக்குநர் ராகுல் நவீன் தெரிவித்தார். நாடு முழுதும் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பான குற்றங்களில் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்கிறது.

விமர்சனம்

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டம், வெளிநாடுகளுக்கு தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளுக்கு எதிரான சட்டம், 'பெமா' எனப்படும் அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம் ஆகியவற்றின் கீழ் வரும் குற்றங்களை அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறது. அமலாக்கத் துறை வசம் அதிக அளவில் அரசியல்வாதிகள் சிக்கும் நிலையில், வெறும் சோதனை மட்டுமே நடப்பதாகவும், வழக்கு முடிந்து யாருக்கும் தண்டனை கிடைத்தது போல் தெரியவில்லை என்றும் விமர்சனங்கள் எழுகின்றன.இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், அமலாக்கத் துறை இயக்குநர் ராகுல் நவீன் நேற்று பேசினார். கடந்த 1956 மே 1ல் அமலாக்கத் துறை அமைப்பு துவக்கப்பட்டது. அமலாக்கத் துறையின் 69ம் ஆண்டு நிறைவு விழா டில்லியில் நேற்று நடந்தது. அதில், ராகுல் நவீன் பேசியதாவது:சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வசம் மொத்தம் 1,739 வழக்குகள் விசாரணை கட்டத்தில் இருக்கின்றன. பண மோசடி குற்றங்களில் அமலாக்கத் துறையினர் வழக்குத் தொடருவதில் ஏற்படும் தாமதத்துக்கு, நாட்டின் நீதித் துறையில் ஏற்படும் பொதுவான தாமதமே காரணம். நிறைய வழக்குகளில் விசாரணைகள் நிலுவையில் உள்ளன. சில வழக்குகளில், நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு அமலாக்கத் துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

தண்டனை

குற்றங்கள் தொடர்பான விசாரணையில், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் தடயவியல் பரிசோதனைகளை அமலாக்கத் துறை பயன்படுத்துகிறது. இதுவரை, அமலாக்கத் துறை தொடர்ந்த 47 வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது; அதில் மூன்று வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர். 94 சதவீத வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Suresh Velan
மே 14, 2025 19:53

உள்ளே வைப்பதோடு , அவனுக ஊழல் பணம் 100 கோடி அல்லது 200 கோடி பணத்தை முடக்கினாலே போதும் அவனுக சுளுக்கு எடுத்து விடலாம் அல்லவா ? அதை செய்தால் ஊழல் பண்ணவன் பேய் பிடித்த மாதிரி அலைவான் , அது அவனுகளுக்கு மரண தண்டனை...


Nagarajan D
மே 02, 2025 17:59

இவர் வேற காமெடி பண்ணிக்கிட்டு இருக்கார் எவர் குற்றவாளியா தண்டனை அனுபவிச்சிக்கிட்டிருக்கின்றனர். இந்த அமலாக்க துறை நீதிமன்றம் சிபிஐ எல்லாம் நம் நாட்டில் கேவலங்களின் கூடாரம்... பொழுது போகாதவன் எவருக்காவது பதவியை பணத்திற்கு வித்து அந்த பணத்தில் உயிர் வாழும் பிறவிகள் அதிகாரத்தில் இருக்கும் வரை எதுவும் நடக்காது.


venugopal s
மே 02, 2025 16:22

அவனா நீ?


Mani . V
மே 02, 2025 13:02

இதை நாங்க நம்பணும்? அனைத்து ஊழல் பேர்வழிகளும் வெளியில்தான் இருக்கிறார்கள் - அதில் பலர் மந்திரிகளாக.


J.Isaac
மே 02, 2025 11:38

பாதுகாப்பு மிக்க எல்லை பகுதியில் அப்பாவிகள் 26 பேர் தீவிரவாதிகளால் கொலை. பாதுகாக்கப்பட வேண்டிய ஈடி ஆபிசில் தீவிபத்து ஏற்பட்டு முக்கிய ஆவணங்கள் தீக்கிரையாயின


Muthukumaran
மே 02, 2025 10:00

இதற்கு முன்பு மொத்த வழக்குகளில் இரண்டு வழக்காடு என ஒரு புள்ளி விவரம் வெளியிடப்பட்டது. தன்னாட்சி அதிகாரம் பெற்ற நிர்வாகமாயிருந்தும் தாமதங்களுக்கான விபரங்களை பொதுமக்கள் அறிய வழியில்லை. இது நம்பகத்தன்மைக்கு பங்கம் விளைவிக்கிறது தமிழக காவல்துறை போன்று செயலாற்றுகிறது. தங்களுக்கு வழங்கப்பட்ட சட்ட செயல்பாடுகளை எளிமையாக்க திருத்தம் கோரி அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும். இன்றைய தமிழக வழக்குகள் கேலிக்கூத்தாக்கப்படுவது அவமானமாகவோ செயலற்ற நிர்வாகமெனவோ கருதத் தோன்றவில்லையா.


J.Isaac
மே 02, 2025 11:41

தன்னாட்சி நிர்வாகமா?


pmsamy
மே 02, 2025 07:18

என்ன ஆதாரம் இருக்கும் உன்கிட்ட


D.Ambujavalli
மே 02, 2025 06:32

அமலாக்கத்துறை படாத பாடு பட்டு குற்றத்துக்கு ஆதாரங்கள் சேர்க்கும் கோர்ட் cool ஆக ஜாமீன் வழங்கி அவரையே மீண்டும் அமைச்சராக்கி ‘விட்டதை’ இன்னும் வேகமாகப் பிடிக்க வசதி செய்து கொடுக்கும், அமலாக்கமாவத் ஒன்றாவது என்று வெறுப்படைவார்கள் சாமானியர்கள். அமலாக்கத்துறை அலுவலகத்தில் பெரிய தீ விபத்து ஆவணகளல்லாம் அழிந்து விட்டது, கேஸ்கள் எல்லாம் முடிந்துவிட்டது போதும் போதும் இந்த அ . ஆ நாடகம்


Kasimani Baskaran
மே 02, 2025 03:52

நீதிமன்றம் வழக்குகளை வாய்தா மூலம் ஜவ்வாக இழுக்கும் முறையை மூட்டை கட்டி வைத்தால் அதிகப்பேரை தண்டிக்கலாம்.


Rajan A
மே 02, 2025 03:43

The balance 6% must be in billions of crores


முக்கிய வீடியோ