உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருமணத்துக்கு பின் மகள் ஓட்டம்; விரக்தியில் காரியம் செய்த தந்தை

திருமணத்துக்கு பின் மகள் ஓட்டம்; விரக்தியில் காரியம் செய்த தந்தை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் திருமணம் நடந்த பின், வேறொருவருடன் சென்று திருமணம் செய்த மகளுக்கு, அவருடைய தந்தை இறுதி காரியங்களை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ராஜஸ்தானில் பில்வாரா மாவட்டத்தின் சாரேரி பகுதியைச் சேர்ந்தவர் பாஹிருலால் ஜோஷி. இவர், தன் மகள் பூஜாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சய் திவாரி என்பவருக்கு கடந்த ஏப்ரலில் திருமணம் செய்து வைத்தார். இந்நிலையில், கடந்த மாதம் 29ம் தேதி பில்வாராவில் உள்ள கல்லுாரியில் எம்.ஏ., தேர்வு எழுதுவதாக தன் குடும்பத்தினரிடம் கூறிவிட்டு பூஜா சென்றார். அன்றிரவு நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், அவரது மொபைல்போனிற்கு பெற்றோர் தொடர்பு கொண்டனர். எனினும், பூஜா அழைப்பை ஏற்காததால், உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் அவரது குடும்பத்தார் தேடினர். எனினும், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து ஜோஷி, தன் மகளை காணவில்லை என போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பூஜா தன் கணவரின் உறவினர் சூரஜ் திவாரியை திருமணம் செய்ததை கண்டறிந்தனர். போலீசாரின் உத்தரவின்படி, பூஜா, கடந்த 4ம் தேதி மாவட்ட எஸ்.பி., முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, தன் முழு விருப்பத்தின்படி சூரஜை திருமணம் செய்ததாக தெரிவித்தார். அத்துடன், தன் குடும்பத்தினரிடம் இருந்து அச்சுறுத்தல் வருவதாகவும் புகார் அளித்தார். இதையடுத்து, பூஜாவை சூரஜுடன் போலீசார் அனுப்பி வைத்தனர். இதனால் அதிருப்தி அடைந்த பூஜாவின் தந்தை ஜோஷி, தன் மகள் இறந்துவிட்டதாக கூறி, வீட்டின் அருகே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியதுடன் இறுதி காரியங்களையும் செய்தார். மேலும் அங்குள்ள வழக்கத்தின்படி விருந்தும் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

jss
ஆக 11, 2025 19:53

திருமணம் செய்த்து சரியா தவறா என்பது முக்கியமில்லை. தனது மகளுக்கு எந்த தகப்பனும் அவளுக்கு பிடித்த ஒரு நல்ல பயன் திருமணம் செய்து வைப்பதுதான் நடைமுறை. அந்த நடைமுறையை இந்த தகப்பன் சரியாக செய்தாரா என்பதுதான் கேள்வி. தனக்குப் பிடித்த பையனைவிட தன்மகளுக்கு பிடித்த பையனை தேர்வது சிறப்பல்லவா.


Saai Sundharamurthy AVK
ஆக 11, 2025 12:05

தகப்பனார் செய்த செயல் சரியே !!!


SUBBU,MADURAI
ஆக 11, 2025 15:06

அந்த தகப்பனார் செய்தது தவறான செயல் முதலில் அந்த ஓடுகாலி மகளை கண்டுபிடித்து அவளது தலையை துண்டித்து விட்டு அந்த தலையோடு போலீஸில் சரணடைவதுதான் உண்மையான தகப்பனுக்கு அழகு..இவங்களை பெத்து வளர்த்து ஆளாக்கி ஒரு நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் போது இந்த பிள்ளைகள் அப்பன் ஆத்தாளை மதிக்காமல் எவன் கூடவோ ஓடுவாங்கலாம் அவங்களுக்கு நாம் பரிதாபப் பட வேண்டுமாம்..


R Ravikumar
ஆக 11, 2025 08:35

ஏற்கனவே திருமணம் ஆன பெண் எப்படி இன்னொரு திருமணம் செய்ய முடியும் ? சட்டப்படி தவறு அல்லவா ? போலீஸ் உம் , நீதிமன்றமும் ஏன் இப்படி பெண்களுக்கு சார்பாக அசிங்கம் செய்கிறது ? கள்ள காதல் தான் தவறு இல்லை என்று சொல்லி இருக்கிறது ,ஆனால் இன்னொரு திருமணம் , விவாகரத்து முடியாமல் செய்ய முடியாது அல்லவா ? பெண்கள் கடந்த 50 வருடங்கள் போராடியது போல .. ஆண்களும் போராடனும் போல மட்டமாக நீதிமன்ற / அரசர்கள் நடந்து கொள்கிறார்கள் .


visu
ஆக 11, 2025 08:08

முதலில் ஒருவருடன் திருமணம் நடந்து உள்ளதே அவரை விவாகரத்து செய்தால்தான் 2 ம் திருமணம் செல்லும் காவலர் எப்படி சட்டத்தை மீறி அனுப்பினார் அதுசரி கள்ள தொடர்பு குற்றமில்லை என்று தீர்ப்பு உள்ளதே


Thiagaraja boopathi.s
ஆக 11, 2025 07:26

சரியான முடிவு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை