உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்ஜினியரிடம் ரூ.14 கோடி மோசடி: மஹா.,வில் பெண் சாமியார் சிக்கினார்

இன்ஜினியரிடம் ரூ.14 கோடி மோசடி: மஹா.,வில் பெண் சாமியார் சிக்கினார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புனே: சாப்ட்வேர் இன்ஜினியரின் இரு மகள்களை பாதித்துள்ள நோயை குணப்படுத்துவதாக கூறி, 14 கோடி ரூபாய் மோசடி செய்த பெண் சாமியார் உட்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். மஹாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்தவர் தீபக் தோலாஸ். இவரது இரண்டு மகள்களில் ஒருவர் மாற்றுத்திறனாளி. மற்றொருவருக்கு மர்மநோய் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதை தன் ஆன்மிக சக்தியால் குணப்படுத்துவதாக கூறி, போலி பெண் சாமியார் ஒருவர் தீபக்கை கடந்த 2018ல் அணுகினார். இதற்காக பல்வேறு தவணைகளில், 14 கோடி ரூபாயை பெற்றுக்கொண்ட அந்த பெண் சாமியார், தீபக்கின் மகள்களின் நோயை குணமாக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து தீபக் புனேயில் உள்ள கோத்ரூட் போலீசாரிடம் பெண் சாமியார் மற்றும் மோசடிக்கு உதவிய இருவர் மீது புகார் அளித்தார். இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் கமிஷனர் அமிதேஷ் குமார் கூறியதாவது: மகள்களின் நோயை குணப்படுத்துவதாக கூறி, 14 கோடி ரூபாய் மோசடி செய்தது உண்மை என விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் அவர் பிரிட்டனில் பணியாற்றியபோது அங்கு வாங்கிய வீடு, புனேயில் உள்ள அவரது நிறுவனம், புனே அருகேயுள்ள கிராமத்தில் உள்ள அவரது விவசாய நிலத்தை விற்று பணம் தந்தால் நோயை குணப்படுத்துவதாக அந்த பெண் சாமியார் கூறியுள்ளார். இதையடுத்து சுதாரித்த தீபக், பெண் சாமியார் மீது பண மோசடி புகார் அளித்ததன்படி, பெண் சாமியார் உட்பட மூவரை பிடித்து விசாரணை நடக்கிறது. விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Rathna
நவ 08, 2025 15:46

குருடன் பார்க்கிறான், ஊமை பேசுகிறான் என்றால் ஆஸ்பத்திரி எதற்கு டாக்டர் எதற்கு ? தமிழக கிராமங்களில் வியாதியை குணப்படுத்துகிறேன் என்று சொல்லி வெளி நாட்டில் இருந்து வந்தவன் - வெள்ளை காரன் சொன்னால் அவன் பொய் சொல்ல மாட்டான் என்று நம்புகிறார்கள். ஏமாந்து போகிறார்கள். என்ன என்றால் பகுத்தறிவு என்கிறார்கள். முன்னாலேயே கூலிக்கு ஏற்பாடு செய்த மக்களின் தலையில் கையை வைத்து, மயங்க வைத்து, ஏமாற்றி, அழகாய் இருந்த பெண்களில் அழகின் கைவைப்பவர்கள் தான் அதிகம். விதியை யாரும் வெல்ல முடியாது. அதை அனுபவித்து தான் கழிக்க வேண்டும்.


Natchimuthu Chithiraisamy
நவ 08, 2025 14:22

என்ஜினீயர் வயது சொல்லவில்லை 2018 முதல் என்றால் வயதானவர். போலீஸ் கண்டிப்பாக கொஞ்ச பணத்தையாவது பெற்று இவருக்கு உணவு உண்ண பண தேவைகள் என அறிவுரை சொல்லி பேங்க் FIXED டெபாசிட் செய்யவேண்டும்.


Natchimuthu Chithiraisamy
நவ 08, 2025 14:18

இனி சாப்பிட அந்த குழந்தைகளை காப்பாற்ற உணவு மருத்துவம் பணம் இருக்கிறதா? இருந்தால் மீதி காலத்தை வாழ்ந்து விடலாம் இல்லையெனில் போலீசில் மன்றாடி கொஞ்சம் பணத்தை பெற்றுக்கொள் இனி யாரும் உதவி செய்ய மாட்டார்கள்


Venugopal S
நவ 08, 2025 11:07

ஏமாந்தவர் நிச்சயமாக சங்கியாகத் தான் இருப்பார்,அவர்களுக்குத் தான் நன்றாகவே ஏமாறத் தெரியும்!


Guru
நவ 08, 2025 11:00

பிஜேபி க்கு இப்படி ஒரு தமிழ் பேசும் விஞ்ஞானியா அல்ல ????


Keshavan.J
நவ 08, 2025 10:56

சாப்ட்வேர் பொறியாளர் ரொம்பவே சாப்ட் ஆனவர் போல தெரிகிறது. மூடநம்பிக்கை உள்ளவர்களுக்கு படிப்பு உதவி செய்யாது


KOVAIKARAN
நவ 08, 2025 09:05

குருட்டு, மூட நம்பிக்கையினால், ஏமாந்த இந்த என்ஜினீயர் ரூ. 14 கோடி இழந்துள்ளார். அந்த பெண் சாமியாரை கைதுசெய்து, என்ன ஆகப்போகிறது? கொடுத்த பணமா திரும்ப வருமா? யானை வாயில் போன கரும்புதான். நாம் தான் உஷாராக இருக்கவேண்டும்.


Barakat Ali
நவ 08, 2025 08:45

குணப்படுத்துவதற்கு முன்பே பதினாலு கோடியைத் தூக்கிக் கொடுத்த இன்ஜினியர்


தியாகு
நவ 08, 2025 08:24

அநேகமா அந்த பெண் திமுகவின் பெண்கள் பிரிவில் உறுப்பினராக இருந்து பிறகு மஹாராஷ்டிராவில் குறியேறியிருக்க வாய்ப்புகள் அதிகம். நல்லா செக் பண்ணுங்க எஜமான்.


பிரேம்ஜி
நவ 08, 2025 07:12

இவர் என்ஜினியர் தானா? பிரச்சினைகள் இருப்பதால் மூளை கெட்டுப்போய் விட்டதா?


சமீபத்திய செய்தி