உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் மாநிலங்களுக்கான நிதியை நிறுத்தக் கூடாது: பார்லி., குழு பரிந்துரை

புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் மாநிலங்களுக்கான நிதியை நிறுத்தக் கூடாது: பார்லி., குழு பரிந்துரை

புதுடில்லி : 'புதிய கல்விக் கொள்கை ஏற்காத, 'பிஎம் ஸ்ரீ' பள்ளி திட்டத்தை செயல்படுத்தாத, மாநிலங்களுக்கான நிதி நிறுத்தப்படுவதை ஏற்க முடியாது. உடனடியாக தமிழகம், கேரளா, மேற்கு வங்கத்துக்கான நிறுத்தி வைக்கப்பட்ட நிதியை விடுவிக்க வேண்டும்' என, பார்லிமென்ட் நிலைக்குழு கூறியுள்ளது.மத்திய அரசின் புதியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தும் வகையில், பிஎம் ஸ்ரீ பள்ளி எனப்படும் மாதிரி பள்ளிகளை உருவாக்குவது தொடர்பாக மாநிலங்களுடன் ஒப்பந்தம் செய்யப்படுகிறது. இது ஹிந்தியை திணிப்பதாகக் கூறி, அதை செயல்படுத்த தமிழக அரசு மறுத்து வருகிறது.இதற்கிடையே, சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய, 2,152 கோடி ரூபாயை நிலுவையில் வைத்துள்ளதாக தமிழக அரசு குற்றஞ்சாட்டியது.பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால் மட்டுமே, இந்த நிதி வழங்கப்படும் என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் கூறினார்.இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, கேரளா, மேற்கு வங்க மாநிலங்களுக்கும், சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ் நிதியை விடுவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தலைமையிலான, கல்வி, குழந்தைகள், பெண்கள், இளைஞர் நலன், விளையாட்டு ஆகிய துறைகளுக்கான பார்லிமென்ட் நிலைக்குழுவின் அறிக்கை, ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பிஎம் ஸ்ரீ பள்ளிகள் என்பது, புதிய கல்விக் கொள்கையின் கீழ் அமைக்கப்படும் மாதிரி பள்ளிகள். சமக்ர சிக் ஷா திட்டம் என்பது, புதிய கல்விக் கொள்கை இலக்கை எட்டுவதற்கான திட்டம். அதனால், பிஎம் ஸ்ரீ பள்ளிகள் அமைப்பதற்கான ஒப்பந்தம் செய்யாத நிலையில், சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ் நிதியை ஒதுக்க இயலாது என, கல்வித் துறை கூறியுள்ளது.ஆனால், இது உண்மையல்ல; ஏற்கக் கூடியதும் அல்ல. சமக்ர சிக் ஷா என்பது, பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கு முன்பாகவே, பார்லிமென்டால் இயற்றப்பட்ட கல்வி உரிமைச் சட்டத்தின் இலக்குகளை எட்டுவதற்கான திட்டமாகும். அதனால், அந்த திட்டத்தையும், பிஎம் ஸ்ரீ திட்டத்தையும் சேர்த்து பார்க்க முடியாது. சமக்ர சிக் ஷா என்பது கல்வி உரிமையை நிலைநாட்டுவதற்கான திட்டம்.தற்போதைய நிலையில், 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 33 உடன் பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்துக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தேசிய அளவில் ஒரே சீரான கல்வி முறை, மாணவர் திறனை சோதிக்கும் முறையை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த பள்ளிகள் திறக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.அதே நேரத்தில், புதிய கல்விக் கொள்கை, பிஎம் ஸ்ரீ திட்டத்தில் சேராததால், தமிழகம், கேரளா, மேற்கு வங்கத்துக்கான, சமக்ர சிக் ஷா திட்ட நிதியை விடுவிக்காமல் இருப்பதை ஏற்க முடியாது. இந்த திட்டத்தின் கீழ், கேரளாவுக்கு, 1,000 கோடி ரூபாய், மேற்கு வங்கத்துக்கு, 859.63 கோடி ரூபாய், தமிழகத்துக்கு, 2,152 கோடி ரூபாய் நிலுவை உள்ளது.இந்த மூன்று மாநிலங்களும், தேசிய அளவிலான மாணவர் சேர்க்கை விகிதம், கல்வி தரம் ஆகியவற்றில் மிகவும் வலுவாகவே உள்ளன. அதனால், இந்த நிதியை ஒதுக்காததால், கல்வி கட்டமைப்புகளை மேம்படுத்துவது, ஆசிரியர் பயிற்சி, மாணவர்களுக்கான ஆதரவு ஆகியவற்றை செயல்படுத்த முடியாமல் இந்த மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தங்களுடைய சொந்த நிதியைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன.நடப்பு, 2024 - 25 நிதியாண்டில், எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ், தமிழக அரசு, 3,586 கோடி ரூபாயை ஒதுக்கிவிட்டது. தமிழக அரசுக்கு, 2,152 கோடி ரூபாய் மத்திய அரசு தராமல் இழுத்தடிப்பு செய்கிறது. இது கல்வி உரிமையை நிலைநாட்டுவதில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.அதனால், இந்த விவகாரத்தில் மாநிலங்களுடன் பேசி, பிரச்னைகளுக்கு தீர்வு காண முயல வேண்டும். சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ் நிலுவையில் வைத்துள்ள தொகைகளை உடனடியாக மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

V.Mohan
மார் 28, 2025 21:08

ஏனய்யா இப்படி ஜல்லியடிக்கிறீங்க?. உங்க விடியா கூட்டாளிங்க ஆட்சி நடத்தினபோது எல்லா வற்றிற்கும் ஆமாம் போட்டது எங்களுக்கு மறக்கலை. உங்க வெறுப்பு எல்லை மீறி போகுது. ஏனய்யா உங்க சுடாலின் மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த மாதிரி மோடி அவர்களும் பாஜகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வளர்கள் தான் என்பதை மறந்துவிடுவது தவறு. ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசு திட்டங்கள் வேண்டாம்னா பேசாம இருங்க உங்க தமிழ்நாடு தான் எல்லாத்துலயும் முதலாச்சே இந்த பிச்சைக்காசு எதுக்கு?


Ravindran. Gnanasambandan
மார் 29, 2025 10:05

பிச்சை எடுப்பது தமிழகம் அல்ல ஒன்றிய அரசாங்கம் அனைத்து மாநிலங்களிலும் வரியை பிடுங்கி வைத்துக் கொண்டு நியாயமான முறையில் திருப்பித் தராத இந்த அரசு கொள்ளை அரசு. உரிமையை கேட்பது தவறல்ல கேட்காமல் இருப்பது தான் தவறு .


D N Shivakumaran
மார் 27, 2025 17:42

நிலைக்குழு கருத்து சரியானதே.


D N Shivakumaran
மார் 27, 2025 17:39

ஸ்ரீதரன் போன்ற புத்திசாலிகள் இருக்கும் வரை மத்தியில் ஆள்பவர்கள் யாரைப் பற்றியும் கவலைப்பட போவதில்லை. முதலில் நிலைக் குழு சொல்வதை படிக்கவும்


Sridhar
மார் 27, 2025 14:47

திட்டத்தை அமல்படுத்தாத திருட்டு பயலுகளுக்கு துட்டு மட்டும் வேணுமாம் ஏன் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வெவ்வேறு தொகைகள் காணப்படுகிறது? சமூகநீதி தத்துவத்தில் எல்லோருக்கும் சமமாக பிரித்துக்கொடுக்க சொல்வதுதானே? கல்வி பொதுப்பட்டியல்ல இருக்கு. மாநில அரசு நடத்தும் திட்டங்களுக்கு மாநில அரசு நிதி ஒதுக்கவேண்டும். மத்திய அரசின் திட்டமா இருந்தா மத்திய அரசு ஒதுக்கும். அந்த திட்டமே வேண்டாம்னு சொல்லிட்டு அதுக்குண்டான நிதியை மட்டும் கேக்குறது வடிவேலுத்தனமா இருக்குமில்ல? கேரளா காரனும் வங்காளியும் அந்த நிதிய கேக்கல பாருங்க. நம்ம கும்பல்தான் எங்கடா துட்டுனு அலையுது.


R Baskaran
மார் 28, 2025 20:28

PM SRI is different from SSA. SSA is coming under Right to Education. Under SSA only Tamil Nadu government Is asking for its due and not under PM SRI.


Subash BV
மார் 27, 2025 14:08

Nothing strange. Parliament panel has opposition parties. THEY DONT SEE EYE TO EYE WITH RULING PARTY. UNDERSTAND THE SECRET. DUE TO NEP OPPOSITION RULED STATE CHILDREN ARE LOOSING THEIR CAREERS. WAKE UP. PUT THE BHARATH FIRST.


Chandradas Appavoo
மார் 27, 2025 13:57

சங்கீ எண்டால் என்ன எண்டு சொல்


Sasi
மார் 27, 2025 12:40

Then any state govt rejects the central scheme , central should ignore the tax from that state. உங்களுக்கு எங்க வரி மட்டும் வேணும், ஆனா நீங்க சொல்றத எல்லாம் கேட்டா மட்டும் தான் திருப்பி தருவோம் . சூப்பர் உங்கள மாறி இருந்தா நம்மளும் பீகார் மக்களை போல ஆவவேண்டியது தான்


Sridhar
மார் 27, 2025 15:19

நீ தானே வரி கட்டுர, அரசு கருவூலத்துக்கு முன் நின்னுகிட்டு என் பணத்தை திருப்பிகொடுனு கேட்டுபாரேன். அவுங்க சொல்றதெல்லாத்தையும் கேக்கறேன்னு நீ சொல்லிப்பாரு, அப்பகூட ஒரு பைசா கொடுக்கமாட்டானுங்க. அதுனால வடிவேலுத்தனமா "எங்க வரி" "உங்க வரி" னு பேசிட்டு தெரியாம இந்திய அரசுனா என்ன பிரதமர் யாரு அவருக்கு என்ன அதிகாரம்னு முதல்ல புரிஞ்சிக்கோ.


RAMESH
மார் 27, 2025 12:34

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திக் விஜய் சிங் கருத்து நாட்டை பிளவுபடுத்தும்..


Mohanadas Murugaiyan
மார் 27, 2025 18:35

ஜனநாயகம் என்பது ஆளும் கட்சி சொல்லும் அனைத்தையும் அப்படியே ஏற்றுக் கொள்வது இல்லை. மெஜாரிட்டி இருந்தாலும் இல்லாவிட்டாலும் மாற்றுக் கட்சிகளின் கருத்துகளுக்கு மதிப்பு தரவேண்டும். இல்லை என்றால் நாட்டிற்கு கேடுதான்


R Baskaran
மார் 28, 2025 20:36

Parliament committees advice will only strengthen Tamil Nadu to assert its views. Those who are opposing Tamilnadus views are traitors of Tamil and want to destroy Tamil language.


கண்ணன்
மார் 27, 2025 12:22

திமிங்கிலம், திட்டம் ஒன்று போடப்பட்டு அதில் விருப்பம் இருந்தால் இணையலாம் என்று சொல்லப்பட்டு, இணைந்தால் உதவித்தொகை கிடைக்கும் என்று சொன்னால், புரியாதா? திக்விஜய் போல் படிப்பற்ற திமிங்கிலங்களால் நாட்டிற்கு என்ன பயன்?


Ramesh Sargam
மார் 27, 2025 11:44

மத்திய அரசு கொடுக்கும் நிதியை முறையாக, நேர்மையாக, கண்ணியமாக பயன்படுத்தவேண்டும் என்று இதே பார்லி. குழு வொவொரு மாநிலங்களுக்கும் பரிந்துரைக்குமா?


Venkatesh
மார் 27, 2025 17:25

அதே பார்லி கமிட்டி மக்கள் வரி பணத்தை பிரதமரை வாடகைக்கு வைத்திருக்கும் எஜமானர்களுக்கு இலவசமாக கொடுக்க கூடாதென்று பரிந்துறைக்குமா? சொல்லுங்க .. சொல்லுங்க .. சொல்லுங்க .. ஒய் ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை