உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கவர்னரின் முடிவு சட்டவிரோதம்: முதல்வர் சித்தராமையா சொல்கிறார்

கவர்னரின் முடிவு சட்டவிரோதம்: முதல்வர் சித்தராமையா சொல்கிறார்

பெங்களூரு: '' கவர்னரின் முடிவு சட்டவிரோதமானது'' என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.நில மோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர அம்மாநில கவர்னர் தாவர்சந்த் கெலாட் அனுமதி வழங்கி உள்ளார்.இது தொடர்பாக சித்தராமையா கூறியதாவது: கவர்னரின் நடவடிக்கை சட்டவிரோதமானது. அரசியல்சானத்திற்கு எதிரானது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவேன். ராஜினாமா செய்யும் அளவுக்கு நான் தவறு செய்யவில்லை. ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட கர்நாடக அரசை கவிழ்க்க பா.ஜ.,வும் ம.ஜ.த.,வும் சதி செய்கின்றன. முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் என்ற பேச்சுக்கே இடமில்லை. என் மீதும், குடும்பத்தினர் மீதும் தொடரப்பட்ட வழக்குகள், பிரச்னைகளை சட்டப்படி சந்திப்பேன். காங்கிரஸ் மேலிடம், அமைச்சரவை, எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Ramesh Sargam
ஆக 17, 2024 20:24

தவறு செய்யும் அனைவரும் கூறுவது தண்டிக்கப்படும் அளவுக்கு தவறு செய்யவில்லை என்றுதான். செய்த தவறை ஒப்புக்கொண்டவன் எவன் இருக்கிறான்?


gmm
ஆக 17, 2024 20:12

மாநில கவர்னர், இந்திய ஜனாதிபதி, தணிக்கை துறை தலைவர் முடிவு சட்டப்படியானது. மாநில தலைமை செயலாளர் அரசியல் அறிவுரை இல்லாமல், உரிய நிர்வாக விதிப்படி சுயமாக உத்தரவை போட்டால் சட்டப்படி சரியானது. இதனை எந்த நீதிமன்றமும் மறு ஆய்வு, ரத்து செய்ய, முடியாது. சட்ட பேரவை மசோதா, பொலிஸார் , நீதிமன்ற உத்தரவை கவர்னர், ஜனாதிபதி ரத்து செய்ய முடியும். நிறுத்தி வைக்க முடியும்.


sankaranarayanan
ஆக 17, 2024 20:02

கவர்னரின் நடவடிக்கை சட்டவிரோதமானது. அரசியல்சானத்திற்கு எதிரானது என்று கூறும் இவர் தான் செய்த மாபெரும் தவறை உணர்ந்து என்றோ மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த விவகாரம் இவ்வளவு பூதாகாரமாக போயிருக்காவது தனது தவறை சரிதான் என்று ஊர்ஜிதம் செய்த விளைவு இப்போது அது பூதாகாரமாகவே போயிடுச்சு இனி ஒன்றுமே செய்ய முடியாது சித்து


என்றும் இந்தியன்
ஆக 17, 2024 18:26

ராஜினாமா செய்யும் அளவுக்கு நான் தவறு செய்யவில்லை. அப்படின்னா தவறு செய்திருக்கின்றேன் என்று ஒத்துக்கொள்கின்றாயா குழந்தாய் அப்போ கவர்னர் செய்தது சரி தான்.


Swaminathan L
ஆக 17, 2024 16:46

மக்களைத் தவிர மற்றதெல்லாம் என் பக்கம் என்கிறார். நீதியும், சட்டமும் கூட அவர் பக்கம் இல்லை என்று விரைவில் புரிய வரும். இன்னும் சில பெயர்களைச் சொல்லி அவர்களுக்கு ஏன் ஆளுநர் ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பவில்லை அவர்கள் தொடர்புடைய விவகாரங்களில் என்கிறார். அது அப்பட்டமான அரசியல் தான். ஆனால், அதைக் காரணம் காட்டி என் விஷயத்தில் ஆளுநர் செய்தது சட்ட விரோதம் என்று சொல்வது ஏற்புடையதல்ல.


Kasimani Baskaran
ஆக 17, 2024 16:32

கவர்னருக்கே சட்டம் சொல்லிக்கொடுக்கும் முறை காங்கிரசின் பாரம்பரியம். ஊழல் மன்னர்கள் அந்த தொழில் நுணுக்கத்தை வைத்து தப்பித்து விடுவார்கள். ஆனால் பாஜக ஆட்சி என்பதால் - நீதிமன்றத்தால் முட்டுக்கொடுக்க முடியாத பட்சத்தில் - பல முதல்வர்கள் சிறை செல்ல வேண்டி இருக்கிறது. சிவக்குமாரின் ஆசியுடன் சித்துவும் கண்டிப்பாக செல்வார் என்று எதிர்பார்க்கலாம்.


Jysenn
ஆக 17, 2024 16:21

The standard statement of crooks and thieves. It is given in a standard format that can be downloaded and used by all the criminals. Nothing special about his statement.


வைகுண்டேஸ்வரன்
ஆக 17, 2024 16:20

களத்தில் வெல்ல முடியாதவர்களை இப்படி கூலிகளை வைத்து தொந்தரவு செய்வது பிஜேபி யின் வழக்கம் தானே. இதில் செய்தி என்ன இருக்கிறது?


Anand
ஆக 17, 2024 16:36

அதாவது, ஊழல்வாதிகள் பதவியில் இருந்தால் விசாரிக்கக்கூடாது.


நிக்கோல்தாம்சன்
ஆக 17, 2024 17:06

அன்று இதே போன்று செய்த ஜெ அவர்களை A1 என்று எல்லி நகையாடிய INDI கூட்டணியின் காங்கிரஸ் அமைச்சர் அல்லவா , இப்படி தான் பேசுவீங்க


Mettai* Tamil
ஆக 17, 2024 17:25

குண்டேஸ்வரா , அவர் ஊழல் செய்ததிர்க்கான ஆதாரம் உள்ளது . ஓட்டுக்கு பணம் கொடுத்து களத்தில் வென்றால் ஊழல் செய்யலாம் என்று சட்டமில்லை ......


Duruvesan
ஆக 17, 2024 17:36

என்ன எரியுதா?


N.Purushothaman
ஆக 17, 2024 18:27

குண்டு ...ஊழல் லஞ்சம் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிரான உங்க மனநிலையை கண்டு வியக்கேன் ....நல்லா பாம் போடறீங்க போங்க ....


vijai
ஆக 17, 2024 18:34

வைகுண்டஸ்வர உனக்கு எங்க எரியுது


raj
ஆக 17, 2024 18:37

வைகுந்தேஸ்வரா அவனா நீ ?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 17, 2024 19:53

மூர்க்கன் பேரு பிரமாதம் ........ ஆனா அவரு இசுமாயிலு ன்னு கையில பச்சை குத்திக்கிட்டு கொன்னாரு ன்னுவானுங்க ...


rao
ஆக 17, 2024 23:13

scamgress man Hansraj Bharadwaj during his tenure as governor of Karnataka gave a sanction letter to prosecute Yedurappa when he was CM for de -Notifying BDA lands in the Year 2012-13,was it not political Vendetta when scamgress was in power in centre.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
ஆக 17, 2024 16:20

"ராஜினாமா செய்யும் அளவுக்கு நான் தவறு செய்யவில்லை" என்று வாக்குமூலம் கொடுத்துள்ளதை பார்த்தால் இவர் ஏதோ ஒரு தவறு செய்திருக்கிறார் என்று ஒத்துக் கொள்ளவதை போல் உள்ளது. உங்கள் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு பிரிவினரே இந்த ஊழலை அம்பலப்படுத்தி இருக்கலாமே.


N.Purushothaman
ஆக 17, 2024 15:37

வழக்க தொடர அனுமதி கொடுத்தது எப்படி சட்டவிரோதம் ஆகும் ? இப்போ ஒரு முதல்வரே இன்னமும் சிறையில் தான் இருக்கிறார் ? ஜார்கண்ட் முதல்வருக்கு கூட இதே நிலைமை தான் ....


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 17, 2024 16:20

அந்நாள் தமிழக கவர்னர் சென்னா ரெட்டி, ஜெ க்கு எதிரா வழக்குப்போட சுப்பிரமணியம் சுவாமிக்கு அனுமதி கொடுத்தார் .... அதை அப்போது ஆதரித்த திமுக இப்போது இதை எதிர்க்கும் பாருங்க .... ரத்தம், தக்காளி சட்னி கதைதான் .....


N.Purushothaman
ஆக 17, 2024 16:43

நல்லா சொன்னீங்க ....கேட்டால் கூட்டணி தர்மம்ன்னு உருட்டுவானுங்க ....


மேலும் செய்திகள்