உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஞானவாபி மசூதியில் வழிபாடு நடத்த ஹிந்துக்களுக்கு அனுமதி

ஞானவாபி மசூதியில் வழிபாடு நடத்த ஹிந்துக்களுக்கு அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாரணாசி: உ.பி., மாநிலம் ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதியில் சீல் வைக்கப்பட்ட இடத்தில் வழிபாடு நடத்திக்கொள்ள ஹிந்து தரப்புக்கு வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.உ.பி., மாநிலம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற விஸ்வநாதர் கோவிலை ஒட்டி, ஞானவாபி மசூதி உள்ளது. இதன் ஒருபக்க வெளிப்புற சுவரில், ஹிந்து கடவுளின் உருவங்கள் உள்ளன. இவற்றை வழிபட இதுவரை, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. ஹிந்து கடவுள் உருவங்களை தினமும் வழிபட அனுமதிக்கக் கோரி, ஹிந்து பெண்கள் மற்றும் ஹிந்து அமைப்புகள் சார்பில், வாரணாசியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதை ஏற்ற நீதிமன்றம், மசூதி வளாகத்தில் ஆய்வு செய்து, 'வீடியோ'வாக பதிவு செய்து தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதற்காக, ஐந்து பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். மசூதியில் உள்ள சிறிய குளத்தில், சிவலிங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக, மனுதாரர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியை, 'சீல்' வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றமும், சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியை பாதுகாக்கும்படி உத்தரவிட்டு உள்ளது.இன்று(ஜன.,31) இது குறித்த வழக்கு வாரணாசி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‛‛ ஞானவாபி மசூதியில் சீல் வைக்கப்பட்ட இடத்தில் ஹிந்து தரப்பினர் வழிபாடு நடத்திக் கொள்ளலாம். இதற்காக தடுப்புகளை அகற்றி பூஜை செய்வதற்கான வசதியை 7 நாட்களுக்குள் மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும். காசி விஸ்வநாதர் கோயிலை சேர்ந்த அர்ச்சகர் வழிபாடு நடத்த வேண்டும்'' என உத்தரவு பிறப்பித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 01, 2024 08:49

பிச்சை கேட்கும் நிலை... அகண்ட பாரதம் வெறும் கானல் நீர் .......


Ramesh Sargam
பிப் 01, 2024 00:05

உண்மையான இஸ்லாமியர்கள், அந்த இடத்தை அவர்களாகவே ஹிந்துக்களுக்கு கொடுத்துவிட்டு அங்கிருந்து நடையை கட்டவேண்டும். வீண் பிரச்சினை வேண்டாம்.


நரேந்திர பாரதி
பிப் 01, 2024 07:59

ரமேஷ், நான் முன்பே பதிந்த கருத்துதான் உங்கள் கேள்விக்கு பதில் இவனுங்களுக்கு அவ்வளவு அறிவெல்லாம் கிடையாது... அப்படியிருந்தா என்னைக்கோ நாமெல்லாம் ஒண்ணா போயிருக்கலாம். அவனுங்க பேச்சுல மட்டும்தான் தொப்புள் கொடி... மத்தபடி அக்குள்ளதான் அறிவு ...


Rajagopal
ஜன 31, 2024 21:53

கிரீஸ் நாடு துருக்கிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றபோது துருக்கியர்கள் அவர்களது பழம்பெரும் கோயில்களையும், தேவாலயங்களையும் இடித்து மசூதிகளாக மாற்றியிருந்ததை உடனே நிவர்த்தி செய்து, அவற்றை மீண்டும் பழைய படி செய்துகொண்டார்கள். யாரிடமும் போய் கெஞ்சிக் கொண்டு இருக்க வில்லை.


Ram
ஜன 31, 2024 21:25

முதலில் அங்கு கோவிலை திரும்ப கொண்டுவரவேண்டும்


ஆரூர் ரங்
ஜன 31, 2024 20:27

கனவு காண வேண்டாம். நாளையே அப்பீல் செய்து தடையுத்தரவு வாங்கி விடுவார்கள். அப்புறம் இஸ்லாமியரின் கனவைக் கெடுக்க???? இருக்கவே இருக்கிறார் சிபல்.


jayvee
ஜன 31, 2024 19:47

சரி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு வடை கிடைத்துவிட்டது .. பெருச்சாளிகள் இனி கதறும்


Bye Pass
ஜன 31, 2024 19:44

அரேபியாவில் நவகிரஹ வழிபாடு முந்தைய காலங்களில் நடந்ததாக தகவல்


Nachiar
ஜன 31, 2024 18:59

மதுரா சுத்தப்படுத்தப்பட்டு முறையாக வழிபாடு நடக்கும்வரை என் மனம் நொந்தது.நொந்து கொண்டேதான் இருக்கும். இதே போல் அன்னை வேலன்ன கன்னி கோவில் மீட்கப்படும் என தமிழர்களும் பிரார்த்திப்போம்.


Godfather_Senior
ஜன 31, 2024 18:31

One by one, all the properties of Hindus should come back to its real owners - The Majority Hindus. It is better we get back all our own temples and its lands through a legal way, so that no question is raised by any quarter. Once the evidences surface, they ought to accept, admit and return it to us. About a thousand years of atrocities, insults, injuries and blood loss/lost lives are now corrected to give the real justice.


A1Suresh
ஜன 31, 2024 17:16

மெக்கா மசூதி வளாகத்தில் பிள்ளையார் கோயிலை வலிய கட்டினால் விட்டுவிடுவார்களா ? அது போலத்தான் இதுவும் . அவரவர் மத வழிபாட்டு இடங்களை மதித்து திருப்பி தருவதே மனிதமாண்பு


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ