உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனைவி முகத்தை எவ்வளவு நேரம் பார்ப்பீங்க? ஞாயிறு வாங்க.. வேலை பாருங்க: எல் & டி தலைவர் சர்ச்சை கருத்து

மனைவி முகத்தை எவ்வளவு நேரம் பார்ப்பீங்க? ஞாயிறு வாங்க.. வேலை பாருங்க: எல் & டி தலைவர் சர்ச்சை கருத்து

புதுடில்லி: பெரும்பாலான நிறுவனங்களில் ஒருநாளைக்கு 8 மணிநேரம் பணி நேரமும், வாரத்திற்கு ஒரு நாள் அல்லது இரு நாட்கள் விடுமுறையும் அளிக்கப்படுகிறது. சில நிறுவனங்களில் பணியாளர்களை கூடுதல் நேரம் வேலை செய்ய நிர்பந்திக்கின்றனர். இந்த நிலையில் லார்சன் & டூப்ரோ (எல் அண்ட் டி) என்ற பன்னாட்டு நிறுவனத்தின் தலைவர் எஸ்.என். சுப்பிரமணியன், வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனது ஊழியர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக அவர் உரையாடிய வீடியோவில் இவ்வாறு அவர் பேசியுள்ளார். அதில் அவர் பேசியதாவது: உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களை வேலை செய்ய வைக்க என்னால் முடியவில்லை என்று வருந்துகிறேன். ஞாயிற்றுக்கிழமைகளில் நான் உங்களை வேலை செய்ய வைத்தால், மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். ஏனென்றால் நான் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேலை செய்கிறேன். வீட்டில் ஓய்வு எடுப்பதால் என்ன லாபம் கிடைக்கப் போகிறது? நீங்கள் வீட்டில் உட்கார்ந்து என்ன செய்கிறீர்கள்? உங்கள் மனைவி முகத்தை எவ்வளவு நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டே இருக்க முடியும்? மனைவிகள் எவ்வளவு நேரம் கணவனைப் பார்த்துக் கொண்டிருக்க முடியும்? அலுவலகத்திற்குச் சென்று வேலையைத் தொடங்குங்கள். சீனர்கள் வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை செய்கிறார்கள், அதே நேரத்தில் அமெரிக்கர்கள் வாரத்திற்கு 50 மணிநேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள். நாட்டின் வலுவான பணி நெறிமுறையால் சீனா, அமெரிக்காவை மிஞ்சும். அதுதான் உங்களுக்கான பதில். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

D.Ambujavalli
ஜன 16, 2025 06:19

பிள்ளைகள் அவ்வப்போது வந்து போகிறாரே, இந்த guest யாரம்மா ? என்று கேட்டுவிடுவார்கள்


Aravind
ஜன 12, 2025 08:45

இந்தியாவில் மனிதவளத்தை சுரண்டுவதைப் போல உலகில் வேறெந்த நாடுகளிலும் இல்லை. மிகக் குறைவாக சம்பளத்தை கொடுத்து, இந்தியாவிலுள்ள அனைத்து துறைகளிலும் தொழில் நுட்ப பணியாளர்கள், சாதாரண பணியாளர்கள், அனைத்து துறைகளிலும் பணிபுரியும் உழைக்கும் வர்கத்தினர். 20 வயதில் உழைக்கத் தொடங்கி 60 வயதில் பணிஓய்வு பெறும் ஒரு இந்தியனின் வாழ்க்கைத் தரத்தையும், ஜப்பானில் இதே போன்று உழைப்பவர் வாழ்க்கைத் தரத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தியர்களின் வாழ்க்கைத்தரம் உயரவே இல்லை. வாரத்திற்கு 90மணிநேரம் இந்திய உழைக்கும் வர்கம் உயர்ந்த நிலையை அடைந்ததாக சரித்திரமே இல்லை,மாறாக அவர் வேலை செய்யும் அந்த நிறுவன முதலாளி தான் மிகப் பெரிய பணமுதலை ஆகிறான்


Boopathi
ஜன 11, 2025 12:13

பணமே வாழ்கை என்று சதா வேலை வேலை என்றிருந்தால், நமது உடல் ஆரோக்கியமும் மற்றும் மன ஆரோக்கியமும் விரைவில் கெடும். தனது குடும்பத்தோடு கூட நேரம் செலவழிக்காமல் வேறு என்னதான் செய்யப் போகின்றீர்கள். வாழ்க்கையின் எதார்த்தத்தை புரிந்துகொள்ளாத முதலாளித்துவ ஆட்களின் சிந்தனை சிந்தனை இதுவாகத்தான் இருக்கும்.


Akash
ஜன 11, 2025 02:21

No Pain 90 hrs work from you No Gain Profit for the company...Ask not what your company can do for you...prove what you can do for the company. As companies become more profi so will the country as a whole.


Mrraja
ஜன 10, 2025 20:43

மனநோய் மருத்துவரை அனுகவேண்டும்


Mrraja
ஜன 10, 2025 20:32

தொழிலாளர் நலச்சட்டம் பற்றி தெரியவில்லை


Aravind
ஜன 10, 2025 17:34

இந்தமாதிரி பைத்தியக்கார மனிதர்களை செய்வாய் கரிகத்திற்கு அனுப்பி, தன்னுடைய நிறுவனத்தையும் அவரது வாழ்க்கை நடத்தச் சொல்லவேண்டும்


Aravind
ஜன 10, 2025 17:12

பெரும் தொழிலதிபர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால், அவர்களின் குடும்ப வாழ்க்கை அர்த்தமற்றதாகத்தான் உள்ளது. இவர்களைப் போன்ற தொழிலதிபர்கள் தங்களின் நிறுவனத்தை உலக அளவில், உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்து, தங்களை உலக பணக்காரர்களின் வரிசையில் மேம்படுத்திக் கொள்கிறார்களே தவிர, தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வாழ்க்கை தரத்தைமேம்படுத்த இவரகள், செய்தது என்ன. தங்களுக்கு என குடும்பம், தனிப்பட்ட வாழ்க்கை, பண்டிகைகள், திருமண நிகழ்ச்சிகள், நல்லது கெட்டது இவைகளை அனுபவிக்காமல், பணமுதலைகளுக்காக வேலை செய்தே சாகவேண்டுமா? இந்த தொழிலதிபர் பேசுவது பைத்தியக்காரத்தனமாக உள்ளது. நடைமுறைக்கு பொருந்ததாக உள்ளது


anthony ravi
ஜன 10, 2025 20:15

குட்


Venkataraman Subramanian
ஜன 10, 2025 16:53

ஐயா ஊழியர்கள் தங்கள் குடும்பத்தோடு உரையாட ஓய்வு எடுக்க வாரத்தில் ஒரு நாள் ஒதுக்க வில்லை என்றால் வேலை செய்ய வேண்டிய அவசியம் என்ன? யாருக்காக வேலை செய்ய வேண்டும் எதற்காக வேலை செய்ய வேண்டும் உங்கள் பெட்டி நிரம்ப நாங்கள் எங்கள் உடல் நலத்தை கெடுத்து ஏன் வேலை செய்ய வேண்டும்?


R K Raman
ஜன 10, 2025 13:43

பணம் இருந்தால் போதும் என்று நினைத்து விட்டார் போலும். குடும்பம் என்றால் என்ன என்று தெரியாதவர்...