உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்த வாரம் எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கான வார பலனும் பரிகாரமும்

இந்த வாரம் எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கான வார பலனும் பரிகாரமும்

சென்னை: வெள்ளி முதல் வியாழன் வரை (26.1.2024 முதல் 01.02.2024 வரை) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன்? உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.

மேஷம்

கேது, சூரியன், சனி நன்மைகளை வழங்குவர். நவக்கிரக குரு பகவானை வழிபட வளம் உண்டாகும்.அசுவினி: உங்கள் நட்சத்திர நாதன் ஆறாமிடத்தில் சஞ்சரிப்பதால் நெருக்கடி விலகும். உடலில் இருந்த சங்கடம் நீங்கும். வழக்கு விவகாரம் சாதகமாகும். தொழில் லாபமாகும். ஒரு சிலருக்கு சொத்து சேர்க்கை ஏற்படும்.பரணி: உங்கள் நட்சத்திர நாதன் பாக்கிய ஸ்தானத்திலும், லாப ஸ்தானத்தில் சனியும் சஞ்சரிப்பதால் தொழிலில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த வருமானம் வரும். பணியாளர்களுக்கு உண்டான நெருக்கடி விலகும். திருமண வயதினருக்கு வரன் வீடு தேடிவரும்.கார்த்திகை 1ம் பாதம்: உங்கள் நட்சத்திர நாதன் பத்தாமிடத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் எதிர்பார்ப்பு அனைத்தும் நிறைவேறும். நெருக்கடி விலகும். அரசு வழி முயற்சி சாதகமாகும். உங்கள் செல்வாக்கு வெளிப்படும். புதிய தொழில் தொடங்க மேற்கொள்ளும் முயற்சி முன்னேற்றம் பெறும்.

ரிஷபம்

ராகு, புதன் நன்மைகளை வழங்குவர். மகாலட்சுமியை வணங்கி வழிபட வாழ்க்கை வளமாகும்.கார்த்திகை 2,3,4: லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் நெருக்கடி நீங்கும். துணிச்சலும் தைரியமும் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும், வரவு அதிகரிக்கும். புதிய முயற்சி லாபமாகும். வாரத்தின் பிற்பகுதியில் ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.ரோகிணி: உங்கள் ராசிநாதன் மறைவு பெற்றாலும் நட்சத்திரநாதன் வாரம் முழுவதும் உங்களுக்கு நன்மையை வழங்கிடும் நிலையில் சஞ்சரிப்பதுடன், ராகு பகவானின் சஞ்சாரமும் உங்களுக்கு சாதகமாகும். நெருக்கடி குறையும். பொருளாதார வரவில் இருந்த தடை நீங்கும். வீண் செலவு கட்டுப்படும்.மிருகசீரிடம் 1,2: உங்கள் நட்சத்திரநாதன் மறைவு பெற்றாலும் கடந்த வாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். சந்திரனின் அருளால் உங்கள் புத்தி தெளிவடையும். பொருளாதார பிரச்னை குறையும். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த தகவல் வரும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்கும் எண்ணம் பலிக்கும்.

மிதுனம்

புதன், சனி, குரு நன்மைகளை வழங்குவர். விநாயகர் வழிபாடு வாழ்க்கையை வளமாக்கும்.மிருகசீரிடம் 3,4: ஏழாமிடத்தில் சஞ்சரிக்கும் நட்சத்திர நாதனின் பார்வை உங்களுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் கொடுக்கும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நெருக்கடி மறையும். முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்.வியாபாரத்தை விரிவு செய்வீர். வருமானம் அதிகரிக்கும்.திருவாதிரை: லாப குருவால் உங்கள் விருப்பம் எளிதாக நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்கும் முயற்சி வெற்றியாகும். சட்ட ரீதியாக ஏற்பட்ட சிக்கல் சரியாகும். வேலைத்தேடியவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.புனர்பூசம் 1,2,3: பாக்கிய சனியும் லாப குருவும் உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவர். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த தடை விலகும். வருமானம் அதிகரிக்கும். இடம் வாங்க மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறும். புதிய செயல் புத்துணர்ச்சி தரும். திருமண வயதினருக்கு ஏற்ற வரன் அமையும்.

கடகம்

கேது, செவ்வாய் நன்மைகளை வழங்குவர். சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.புனர்பூசம் 4: மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் கேது உங்கள் தைரியத்தை அதிகரிப்பார். செயலில் வெற்றியை உண்டாக்குவார். சகோதரர் வழியில் ஏற்பட்ட பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவார். சொத்து விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும்.பூசம்: ஆறாமிட செவ்வாய், மூன்றாமிட கேதுவால் பல நாள் பிரச்னை முடிவிற்கு வரும். தொழில் வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகி முன்னேற்றம் உண்டாகும். உங்கள் விருப்பம் நிறைவேறும். முயற்சி பலித்தமாகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.ஆயில்யம்: உங்கள் எதிர்பார்ப்பு இந்த வாரத்தில் நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும். எட்டாமிடத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால் உடல்நிலையில் கவனம் தேவை. இயந்திரப்பணிகளில் நிதானம் அவசியம். பணியாளர்களின் செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகள் எண்ணம் பூர்த்தியாகும்.

சிம்மம்

சுக்கிரன், சூரியன், குரு நன்மைகளை வழங்குவர். நவக்கிரக வழிபாடு நன்மைகளை உண்டாக்கும்மகம்: ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் ராசிநாதனால் உங்கள் முயற்சி வெற்றியாகும். தடைபட்டிருந்த வேலை நடக்கும். எதிர்பார்த்த வருமானம் வரும், தொழில் உத்தியோகத்தில் மகிழ்ச்சியான நிலை ஏற்படும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.பூரம்: ஐந்தாமிடத்தில் சஞ்சரிக்கும் நட்சத்திரநாதன் உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவார். பணவரவு அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். ஆறாமிட சூரியனால் செயல்களில் ஏற்பட்ட தடை உடையும். முயற்சிகளில் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த வருமானம் வரும்.உத்திரம் 1: உங்கள் ராசி நாதன், பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் செல்வாக்கு அதிகரிக்கும். அரசு வழியில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நற்பலனை தரும். குடும்பத்தில் சுப விஷயம் நடைபெறுவதற்குரிய அறிகுறிகள் தோன்றும். அரசியல்வாதிகளின் எண்ணம் நிறைவேறும். நீங்கள் நினைத்ததை அடைவீர்.

கன்னி

சனி நன்மைகளை வழங்குவார். விநாயகரை வணங்கி வழிபட வளம் உண்டாகும்.உத்திரம் 2,3,4: சனி , ஞாயிறு அன்று வீண் செலவு அதிகரிக்கும். ஆறாமிடத்து சனி பகவானால் சங்கடம் தீரும். ஆரோக்கியம் சீராகும். எதிர்பார்த்த வருமானம் வரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும்.அஸ்தம்: உங்கள் நட்சத்திராதிபதி சுபசெலவுகளை அதிகரித்தாலும். மற்ற நாட்களில் லாபத்தை வழங்குவார். முயற்சிக்கேற்ற வருமானம் உண்டு. சாதுரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். நெருக்கடி விலகும்.சித்திரை 1,2: ஆறாமிட சனி பகவான், குரு பகவானின் பார்வைகளால் உயர்வான எண்ணம் பூர்த்தியாகும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். வெளி வட்டாரத்தில் சாதுரியமாக செயல்பட்டு சிறப்படைவீர். திங்கள் அன்று செலவு அதிகரிக்கும். குடும்ப வருமான வரவுசெலவில் கவனம் அவசியம்.

துலாம்

செவ்வாய், ராகு, குரு நன்மையை வழங்குவர். துர்கையை வணங்க அல்லல் குறையும்.சித்திரை 3,4: உங்கள் ராசிக்கு குரு பகவானின் பார்வை உண்டாகி இருப்பதால் எண்ணம் பூர்த்தியாகும். ஆக்கப்பபூர்வமான செயல்கள் எளிதில் வெற்றியாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். தடைபட்டிருந்த வேலை நடைபெறத் தொடங்கும். எதிர்பார்த்த லாபம் வரும். திருமண வயதினருக்கு வரன் வரும்.சுவாதி: கடந்த கால சங்கடம் மறையும். வாரம் முழுதும் செவ்வாய், ராகு, குரு உங்கள் செயல்களில் லாபத்தை உண்டாக்குவர். ஆரோக்கியம் சீராகும். முயற்சி பலிதமாகும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர். அரசு வழி முயற்சிகள் நற்பலனை தரும்.விசாகம் 1,2,3: மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் உங்கள் முயற்சி வெற்றியாகும். செயல்களில் வேகமும் விவேகமும் இருக்கும். சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் ஆற்றல் பெருகும். செல்வாக்கு உயரும். சங்கடம் தீரும். எதிர்ப்பு விலகும், வருமானம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

சுக்கிரன், சூரியன், கேது நன்மைகளை வழங்குவர். நவக்கிரக செவ்வாய் பகவானை வணங்கி வழிபட வளம் உண்டாகும்.விசாகம் 4: மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் சூரியன் உங்கள் செல்வாக்கை உயர்த்துவார். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி விலகும். முயற்சி வெற்றியாகும். எதிரி விலகிச் செல்வார்கள். உங்கள் ராசிநாதன் சுக்கிரனுடன் இணைந்து சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும்.அனுஷம்: குரு பகவானின் பார்வை உங்கள் தொழில், தன ஸ்தானத்திற்கும் உண்டாவதால் தொழிலில் இருந்த தடை விலகும். ஒருசிலர் புதிய தொழில் தொடங்குவீர். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதியும் சலுகைகளும் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.கேட்டை: செய்துவரும் தொழிலில் அக்கறை அதிகரிக்கும். வருமானத்தில் இருந்த தடை விலகும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் புதிய பொறுப்பு உண்டாகும். தடைபட்டிருந்த செயல் நடந்தேறும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் முயற்சி லாபமாகும்.

தனுசு

சனி, குரு நன்மைகளை வழங்குவர். நவக்கிரகத்தில் உள்ள குரு பகவானை வழிபட நினைத்த செயல் ஜெயமாகும்.மூலம்: தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் நட்சத்திர நாதனால் திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். உங்கள் முயற்சி நிறைவேறும். எதிர்ப்பு விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மூன்றாமிட சனி பகவானால் முயற்சி வெற்றியாகும். ஜென்ம சுக்கிரனால் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வெள்ளி அன்று சந்திராஷ்டமம் என்பதால் விழிப்புணர்வுடன் கூடிய எச்சரிக்கை அவசியம்.பூராடம்: ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் நட்சத்திர நாதனால் உங்கள் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மூன்றாமிட சனி, ஐந்தாமிட குருவால் அரசு உத்தியோகஸ்தர்கள், அரசியல் வாதிகளுக்கு இக்காலத்தில் முன்னேற்றம் உண்டாகும். வெள்ளி, சனி கிழமை சந்திராஷ்டமம் என்பதால் செயல்களில் கவனம் தேவை.உத்திராடம் 1: உங்கள் ராசிநாதன் ஐந்தாமிடத்தில் சஞ்சரித்து ராசியைப் பார்ப்பதால் இதுவரை இருந்த சங்கடம் விலகும். தொழில், உத்தியோகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். சனிக்கிழமை செயல்களில் விழிப்புணர்வு அவசியம்.

சந்திராஷ்டமம்

25.1.2024 அதிகாலை 2:12 மணி - 27.1.2024 மதியம் 12:47 மணி

மகரம்

ராகு, சுக்கிரன் நன்மைகளை வழங்குவர். காளிகாம்பாளை வழிபடுவதால் சங்கடம் நீங்கும்.உத்திராடம் 2,3,4: கடந்த வார சங்கடம் நீங்கும் மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் உங்கள் முயற்சி வெற்றியாகும், செயல் லாபமாகும். பனிரெண்டாமிட சுக்கிரனால் பண வரவு அதிகரிக்கும். சொத்து சேர்க்கை உண்டாகும். சனி ஞாயிறில் சந்திராஷ்டமம் என்பதால் செயல்களில் கவனம் அவசியம்.திருவோணம்: உங்கள் ராசிக்குள் சூரிய பகவான் சஞ்சரிப்பதால் செயல்களில் கவனம் தேவை. மனதில் தேவையற்ற சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காதீர். மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் முயற்சியில் முன்னேற்றம் தென்படும். துணிச்சலுடன் செயல்படுவீர். எதிர்பார்த்த பணம் வரும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். ஞாயிறு, திங்களில் சில நெருக்கடி தோன்றி மறையும்.அவிட்டம் 1,2: குரு பகவானின் பார்வை தொழில் ஸ்தானத்தில் பதிவதால் வியாபாரத்தில் இருந்த தடை விலகும் எதிர்பார்த்த வருவாய் வரும். உங்கள் முயற்சி லாபமாகும். ஒரு சிலர் புதியதாக இடம், வீடு வாங்குவீர். புதிய தொழில் தொடங்க சிலர் திட்டமிடுவீர். திங்கள் அன்று சந்திராஷ்டமம் என்பதால் விழிப்புணர்வு அவசியம்.

சந்திராஷ்டமம்

27.1.2024 மதியம் 12:48 மணி - 30.1.2024 அதிகாலை 12:28 மணி

கும்பம்

செவ்வாய், சுக்கிரன் நன்மைகளை வழங்குவர். நவக்கிரகத்திற்கு தீபமேற்றி வழிபட வளம் கூடும்.அவிட்டம் 3,4: குடும்ப ஸ்தானத்தில் ராகு, ஆயுள் ஸ்தானத்தில் கேது, ஜென்மத்தில் சனி என்று சஞ்சரிப்பதால் செயல்களில் அதிக கவனம் தேவை. இதே நேரத்தில் லாப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் ரியல் எஸ்டேட், விவசாயம், ஜீவல்லரியில் லாபம் பெருகும். செவ்வாய் அன்று செயல்களில் சில சங்கடம் தோன்றும்.சதயம்: ராகு, குரு, கேது, சூரியன், சனி என்று உங்களுக்கு சங்கடத்தை உண்டாக்கினாலும் சுக்கிரனும் செவ்வாயும் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். குரு பகவானின் பார்வையால் குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும், வருமானம் அதிகரிக்கும். புதன் அன்று செயலில் நெருக்கடி உண்டாகி மறையும்.பூரட்டாதி 1,2,3: உங்கள் செயல்களில் நிதானம் வேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கு முன் நன்றாக யோசிக்கவும். அரசு வழியில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். லாப செவ்வாயால் அதை சமாளிப்பீர். வியாழன் அன்று விழிப்புணர்வு அவசியம்.

சந்திராஷ்டமம்

30.1.2024 அதிகாலை 12:29 மணி - 1.1.2024 காலை 11:35 மணி

மீனம்

குரு, புதன், சூரியன் நன்மையை வழங்குவர். அர்த்தநாரீசுவரரை வழிபட சங்கடம் குறையும்.பூரட்டாதி 4: உங்கள் ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகுவால் மனதில் குழப்பம் அதிகரிக்கும். குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால் சங்கடம் விலகும். எதிர்பார்த்த வரவு உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். வியாழன் அன்று கவனமாக செயல்படுவது நல்லது.உத்திரட்டாதி: ராசிநாதன் குரு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். பொருளாதார நிலை உயரும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் உத்தியோகஸ்தர்களின் செல்வாக்கு உயரும். விருப்பம் நிறைவேறும்.ரேவதி: உங்கள் முயற்சி எந்த அளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு இரண்டாமிட குருவும் பதினொன்றாமிட சூரியனும் உங்களுக்கு நன்மைகளை வழங்குவர். பொருளாதார நிலை உயரும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகு ஆசைகளை அதிகரிப்பார். அதனால், சங்கடங்களும் நெருக்கடிகளும் ஏற்படும்.

சந்திராஷ்டமம்

1.2.2024 காலை 11:36 மணி - 3.2.2024 இரவு 8:48 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ