உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வருமான வரித்துறைக்கு அடுத்த ஆண்டு முதல் சுதந்திரம்! வரி ஏய்ப்பு செய்வோரின் டிஜிட்டல் தளங்களில் சோதனை

வருமான வரித்துறைக்கு அடுத்த ஆண்டு முதல் சுதந்திரம்! வரி ஏய்ப்பு செய்வோரின் டிஜிட்டல் தளங்களில் சோதனை

புதுடில்லி: வரி ஏய்ப்பு அல்லது சொத்து விபரங்களை ஒருவர் மறைப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நபரின் சமூக வலைதள கணக்கு, இ - மெயில், வங்கிக் கணக்குகள், முதலீடு மற்றும் பங்கு வர்த்தகத்திற்கான, 'ஆன்லைன்' கணக்குகளை ஆய்வு செய்ய வருமான வரித்துறைக்கு அடுத்த ஆண்டு முதல் சட்டப்பூர்வமான உரிமை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தற்போதுள்ள வருமான வரிச் சட்டம், 1961ன் பிரிவு, 132ன் கீழ், ஒரு நபர் வரி ஏய்ப்பு நோக்கத்துடன் தன் வருமானம், சொத்துக்கள் அல்லது நிதி பதிவுகளை மறைப்பதாக நம்பகமான தகவல் இருந்தால், வரித்துறை அதிகாரிகள் சோதனைகள் மற்றும் பறிமுதல்களை மேற்கொள்ளலாம்.சம்பந்தப்பட்ட நபர் கணக்கில் காட்டாத சொத்துக்கள் அல்லது நிதி பதிவுகளை மறைத்து வைத்திருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால் அவரது வீடு, பாதுகாப்பு பெட்டகம், வங்கி லாக்கர் உள்ளிட்டவற்றை உடைத்து விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு அதிகாரம் உள்ளது.

நவீன மாற்றம்

தற்போது நிதி பரிவர்த்தனைகள், 'டிஜிட்டல்' மயமாகிவிட்டதால், வரித்துறை அதிகாரிகளின் விசாரணை முறை மற்றும் அதிகாரங்கள் நவீன மாற்றத்தை நோக்கி நகர்கின்றன. பார்லிமென்டில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய வருமான வரி மசோதாவின்படி, வரி விசாரணைகளில் டிஜிட்டல் தடயவியல் இப்போது முக்கிய பங்கு வகிக்கிறது.

சர்ச்சையை கிளப்புமா?

இதன்படி, 2026, ஏப்., 1 முதல், வருமான வரி ஏய்ப்பு தொடர்பான விசாரணை, டிஜிட்டல் தளங்களுக்கும் விரிவடைகிறது. இந்த புதிய சட்டத்தின்படி ஒருவர் தன் வருமானம், முதலீடு அல்லது சொத்துக்கள் குறித்து முழுமையான தகவல்களை பகிரவில்லை என வரித்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நபரின் சமூக வலைதள கணக்கு, இ - மெயில், வங்கிக் கணக்குகள். முதலீடு மற்றும் பங்கு வர்த்தகத்திற்கான ஆன்லைன் கணக்குகளை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்யலாம். புதிய வருமான வரி மசோதா இந்த அதிகாரத்தை அவர்களுக்கு அளிக்கிறது. இருப்பினும், இந்த மாற்றம் வரி ஏய்ப்பைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருக்குமா அல்லது தனியுரிமை தலையீடு என்ற சர்ச்சையை கிளப்புமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நியாயப்படுத்த முடியாது!

'கே.எஸ்., லீகல் அண்டு அசோசியேட்ஸ்' சட்ட நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் சோனம் சந்த்வானி கூறுகையில், ''புதிய வருமான வரி மசோதாவின்படி, ஒருவரின் டிஜிட்டல் தளத்திற்குள் வருமான வரித்துறையினர் நுழைந்து ஆய்வு செய்வது, அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மை, அரசு அத்துமீறல் குறித்த குறிப்பிடத்தக்க கவலைகளை எழுப்புகிறது. வரி ஏய்ப்பு மற்றும் வெளியிடப்படாத டிஜிட்டல் சொத்துக்களைத் தடுப்பதற்கான நடவடிக்கை என அரசு நியாயப்படுத்தலாம். ஆனால், இது தனிநபரின் நிதி மற்றும் தனிப்பட்ட டிஜிட்டல் தகவல்களின் மீது கட்டுப்பாடற்ற கண்காணிப்பை அனுமதிக்கிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

sethu
மார் 05, 2025 12:18

ஊர்பணத்தில் கருணாநிதிக்கு சிலை வைத்தால் அதுக்கு தண்டனை


sethu
மார் 05, 2025 12:02

வருமானமே இல்லாத சம்பளம் வாங்காத பல கோடி மக்கள் பல சொத்துக்கலை எப்படி வாங்கினார்கள் என விசாரித்து அதை ஜப்தி செய்தால் கட்டுமரம் குடும்பம் மொத்த சொத்தும் ஏழைகளுக்கு கிடைக்குமா ? ஐயா ஜாலிதான் ஜெயலலிதா சொத்துக்கள் எப்படி ஆரசுடைமை ஆனதோ அதுபோல திமுக திருடிய அறிவாளயம் உட்பட ஜப்தி செய்யணும் .


Rajarajan
மார் 05, 2025 11:15

ரைட்டு, புரியுது. மயில் இறகு போடாது, பிடுங்கனும்னு முடிவு பண்ணிடீங்க. மாத சம்பளம் வாங்கும், ஒழுங்கா வரி கட்டுபவர்கள் வீட்டில் பிரச்சினை இல்லை, ஏனெனில் அங்கு வெறும் காற்று தான் வரும், கவலை இல்லை. ஆனா, ஏமாத்தறவங்க கண்ணுல விரல் விட்டு ஆட்ட போறீங்கன்னு புரியுது. இதுவும் நன்மைக்கே. முக்கியமா, திராவிட அல்லக்கைகள் / அனுதாபிகள் மற்றும் தமிழ் தமிழ்னு பேசும் சினிமாகாரங்க வீட்ல தான் புளியை கரைக்கும்.


Venkateswaran Rajaram
மார் 05, 2025 10:20

இந்த சட்டம் கொள்ளை அடித்து உயிர் வாழும் அரசியல்வாதிகளுக்கு மட்டும் தான் இருக்கவேண்டும் ...நேர்மையாக சம்பாதிப்பவர்களை வீண் தொந்தரவு செய்து மிரட்டுவதற்கு இந்த சட்டத்தை துஸ்பிரயோகம் செய்துவிடுவார்கள் அரசியல் வியாதிகள்


Barakat Ali
மார் 05, 2025 10:06

அரசியல்வியாதிகள், அவர்களது பினாமிகளைத் தொட்டுக்கூடப்பார்க்க மாட்டோம் .... பாடுபட்டு உழைச்சு சம்பாதிக்கிற மக்களோடதான் எங்களுக்கு டீலிங்கே ......


GMM
மார் 05, 2025 09:42

வரி ஏய்ப்பை குறைக்க வழி காண வேண்டும். வருமான அதிகாரிகளுக்கு நிர்வாக விதிகள் வகுக்காமல் சுதந்திரம் கொடுத்தால், இஷ்டம் போல் செயல் படுவர். இதில் அதிக சட்ட சிக்கல் வரும். வக்கீல், அரசியல் வாதிகள் வழக்கில் அரசை இழுப்பர் . ஒருவர் சொத்து நிரந்தர எண் மூலம் பான், வங்கி கணக்குகள், பாண்டு, அசையும், அசையா சொத்துக்கள், வெளிநாட்டு முதலீடுகள், கடன் விவரம் போன்றவற்றை சுயமாக உடனுக்குடன் ஆன்லைன் மூலம் பதிய செய்ய வேண்டும். இருப்புக்கும் தகவலுக்கும் மாறுபடும் போது வருமான வரி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது எளிது. 18 முதல் 58 வரை அனைவரும் ஆண்டுக்கு குறைந்த பட்ச வருமான வரி செலுத்தினால் மட்டும் தான் ஓட்டுரிமை. ஏழைகள் வரியை அரசியல் கட்சிகள் செலுத்தி விடுவர் ?.


ஆரூர் ரங்
மார் 05, 2025 09:01

சொந்தக் கார் இல்லை என தேர்தல் மனுவில் கூறிக் கொள்ளும் ஒரு முதல்வர் 2 கோடி மதிப்புள்ள தனியார் காரில் வலம் வருகிறார். பதிவு எண் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்துக்கு சொந்தம் எனக் காட்டுகிறதாம். அமலாக்கத்துறை அவங்க குடும்பத்தை மட்டும் கண்டும் காணாமல் உள்ளது.


raja
மார் 05, 2025 07:53

குளியலறையில் CCTV பொருத்துங்க


வாய்மையே வெல்லும்
மார் 05, 2025 07:44

எவனாவது பிச்சைக்கார வேஷம் தினமும் போட்டு பட்டயாவிற்கு விமானத்தில் பறந்து முகநூல் அதாங்க face book இல் பீற்றிக்கொண்டால் உருவி விடுவார்கள் ஆமாங்க சரியாக படித்துள்ளேர்கள் உருவிவிடுவார்கள் .... வரியை சொன்னேன்.. இனமே எங்கயும் அடக்கிவாசித்தல் நல்லது .. ரொம்ப ஆடினா அடிமடியில் வரி அதிகாரிகள் கைவைப்பார்கள்


அப்பாவி
மார் 05, 2025 07:10

முதலில் கேவலமா இருக்கும் வருமானவரித்துத்துறை இணையதளத்தை எளிமைப்படுத்துங்க. ஒரு பயலை காண்டாக்ட் பண்ண முடியலை. அவிங்க நமக்கு மெசேஜ் அனுப்பி டார்ச்சர் குடுப்பாங்களாம். நாம அதுக்கு பதில் போட முடியாதாம். ஆனா நமக்கு ரிஜிட்ஸ்டர் பிஸ்ட் அனுப்பறதுக்கு மட்டும் லோக்கல்வின்கம் டாஜ்ஸ் ஆப்பீசர் ஜையெழுத்துப் போட்டு அனுப்புவாராம். எல்லாமே சாதாரண மனிதர்களை மிரட்டத்தான் லாயக்கு. கேவலமா இருக்கு.


Srinivasan Krishnamoorthy
மார் 05, 2025 10:25

please go to pakistan for better tax portal. things have improved bin india for better than p Chidambaram days. please wake up


சமீபத்திய செய்தி