உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தானுக்கு ரூ,6,700 கோடி கடன்; ஆசிய வளர்ச்சி வங்கி முடிவுக்கு இந்தியா கண்டனம்

பாகிஸ்தானுக்கு ரூ,6,700 கோடி கடன்; ஆசிய வளர்ச்சி வங்கி முடிவுக்கு இந்தியா கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாகிஸ்தானுக்கு ரூ.6,700 கோடி ஆசிய வளர்ச்சி வங்கி கடன் உதவி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yo5apxlo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் நீண்ட காலமாகவே தொடர்ந்து நிதி உதவி செய்து பயங்கரவாதத்தை வளர்த்து வருகிறது. பாகிஸ்தானின் இந்த செயலுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சர்வதேச அளவில் பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தானுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. இந்நிலையில் ஆசிய வளர்ச்சி வங்கி, பாகிஸ்தானை மேம்படுத்துவதற்கு ரூ.6,700 கோடி கடன் உதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த மாதம் தான் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக, ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நிதியத்திடம் பாகிஸ்தான் கோரி இருந்தது. அதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. அதை தொடர்ந்து ரூ.8,500 கோடி கடன் உதவி அளிக்க ஐ.எம்.எப்., ஒப்புதல் அளித்தது. இதற்கு இந்திய தரப்பில் கடும் கண்டனங்களை பதிவு செய்தது.அதனை தொடர்ந்து தற்போது ஆசிய வளர்ச்சி வங்கி, ரூ.6,700 கோடி கடன் நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.இந்த நிலையில், பாகிஸ்தானில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள சர்வதேச நிதியத்திடம் அந்நாடு கோரிக்கை விடுத்தது. இதற்கு இந்தியா கடும் ஆட்சேபத்தை பதிவு செய்தது. இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 8,500 கோடி ரூபாய் கடன் உதவி அளிக்க சர்வதேச நிதியம் ஒப்புதல் அளித்தது. இவ்வாறு வாங்கும் கடன் நிதிகள் அனைத்தும் பயங்கரவாதத்திற்கு தான் பாகிஸ்தான் பயன்படுத்தும். முக்கிய பொருளாதார சீர்திருத்தங்களைச் செயல்படுத்த பாகிஸ்தான் பலமுறை தவறிவிட்டது என்ற அடிப்படையில், இதற்கு இந்தியா கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

R.MURALIKRISHNAN
ஜூன் 04, 2025 22:33

பயங்கரவாதிகளை வளர்க்கும் நாடுகளுக்கு கடன் கொடுப்பவனும் பயங்கரவாதியே


K.n. Dhasarathan
ஜூன் 04, 2025 20:43

ஐ.ம் எப் எனப்படும் சர்வதேச நிதியம் மற்றும் ஆசியா வளர்ச்சி வாங்கி இரண்டும் மிக பெரும் தவறுகளை செய்கின்றன. பயங்கர வாதத்தை மறைமுகமாக வளர்க்கின்றன. இது உலக அமைதிக்கு பெரும் தீங்கு. இந்த நிதியங்களில் நிர்வாகிகள் எப்படி தவறாக வழி நடத்தப்படுகிறார்கள் ? பின் புலத்தில் யாரெல்லாம் ? இந்தியா பல முக்கிய நாடுகளை தன்னுடன் சேர்த்து இந்த தவறான நடவடிக்கைகளை தடுக்க வேண்டும்.


Ramesh Sargam
ஜூன் 04, 2025 20:05

பயங்கரவாதிகளை உருவாக்குவதற்கும், வளர்ப்பதற்கும் கடனா? சரி கடன் கொடுக்கிறீர்கள். அது திரும்ப கிடைக்குமா என்று யோசிக்கவேண்டாமா?


HoneyBee
ஜூன் 04, 2025 21:44

அவர்களுக்கு தேவை தீவிரவாதிகள் தான். பணம் வந்தால் என்ன வராம போனா என்ன


ஆரூர் ரங்
ஜூன் 04, 2025 18:56

பெரியண்ணனுக்கு இந்தியா வளர்ந்து முன்னேறுவது பிடிக்காது. தீவீரவாத நாட்டுக்கு நிதி கொடுத்து தூண்டி விடுவது இதில் ஒரு பகுதி. அங்குள்ள அணுகுண்டு சேமிப்பின் அருகில் பாரத சிந்தூர் தாக்கியதன் பலன். அணு நிலையத்தின் உண்மையான உரிமையாளர் பாக் இல்லை என்பது புரிகிறது.


Karthik
ஜூன் 04, 2025 18:46

தலைப்பை மாத்தி போடுங்க தினமலர் / தலைப்பை மாத்தி படியுங்கள் வாசகர்களே இப்படி.. பாகிஸ்தானில் தீவிரவாதத்தை மேம்படுத்திக் கொள்ள ஆசிய வளர்ச்சி வங்கி தவணைத் தொகை ரூ.6,700 கோடி வழங்கி தாராள நிதி உதவி .


naranam
ஜூன் 04, 2025 18:45

பிரதமருக்கு இப்போது புரிந்திருக்கும் யார் தீவிரவாதத்துக்குத் துணை போகிறார்கள் என்று..இந்தியாவுக்கு நிரந்தர நண்பன் என்று ரஷ்யா இஸ்ரேல் தவிர வேறு எந்த நாடும் இல்லை..


sankaranarayanan
ஜூன் 04, 2025 18:32

உலகம் முழுவதும் கடனை வாங்கியாவது பாகிஸ்தான் திரும்ப அதை அவர்ளுக்கு கொடுக்குமா என்று நினைக்காமல் கொடுக்கிறார்கள் அது அவர்கள் கொடுத்தவர்கள் தலை எழுத்து பாகிஸ்தான் திரும்ப கடன் கொடுத்த அவர்களுக்கு கைமாறாக தீவிரவாதிகளைத்தான் திருப்பிகொஇடுப்பார்கள் கடன் கொடுத்தவர்கள் கலங்குவார்கள் இலங்கை வேந்தனைப்போன்று


Mohan
ஜூன் 04, 2025 18:15

உலகில் உள்ள 60% நாடுகள் இஸ்லாமிய நாடுகள் அவர்கள் தான் IMF, ICJ, UN , ஏசியன் டெவெலப்மென்ட் பேங்க் எல்லாத்தையும் கட்டுப்படுத்துவது ...என்ன தான் இந்தியா கூப்பாடு போட்டாலும் நம் ஆட்டின் மீது மேற்குலக நாடுகள், இஸ்லாமிய கூட்டமைப்பு எல்லாம் ஒன்று சேர்ந்து விடுவார்கள் நமக்கு ரஷ்யா, இஸ்ரேல் தவிர வேற யாரும் நம்பத்தகுந்த நாடுகள் கிடையாது .. அதனால நார்த் கொரியா போல இதுல எல்லாத்துலயும் இருந்து வெளியில் வந்திரனும் ... உலகத்துக்கு தெரியும் பாக்கிஸ்தான் ராணுவமும் அதன் கூட்டாளி பயங்கரவாதிகளும் தான் னு எவனாவது வாய் தொறக்கறானுகளா பாருங்க ...மறுபடியும் அவுனுகளுக்கு அள்ளி நிதி தெரிந்தே குடுக்குறானுக ....தெரியாம இனி எத்தனை குடுக்குறானுகளோ ...இந்தியா விழிப்போடு இருப்பது நல்லது


ஆரூர் ரங்
ஜூன் 04, 2025 18:58

உலகத்தில் நம்பத்தகுந்த நாடு என ஏதுமில்லை. அவரவர் சுயநலமே முக்கியம். ரஷ்யா உட்பட. புடின் கூட ஊழல்வாதியே .


Anand
ஜூன் 04, 2025 17:54

ஒருவேளை, பாகிஸ்தானே இனி தீவிரவாதம் வேண்டாம் நாம் நல்ல வழியில் நடக்கலாம் என முயற்சித்தாலும் கேடுகெட்ட சில உலக வல்லரசு நாடுகள் விடாது போலிருக்கு....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை