உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா யாருக்கும் அடிபணியாது; வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டம்

இந்தியா யாருக்கும் அடிபணியாது; வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியா யாருக்கும் அடிபணியாது என மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.ரஷ்யாவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், அதற்காக வரியும், அபராத வரியும் விதித்து வருகிறார். இதனால் சர்வதேச அளவில் தொழில், வர்த்தக துறையினர் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3z6tik3o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த விவகாரம் குறித்து, இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சில் பங்கேற்ற மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது:இந்தியா யாருக்கும் அடிபணியாது. கோவிட்-19 நெருக்கடியை நாடு ஒரு வாய்ப்பாக மாற்றி ஐடி துறையில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியது. சவாலான காலங்களில் இந்தியா எப்போதும் வெற்றி பெறும்.

ஏற்றுமதி

உலகெங்கிலும் உள்ள நாடுகள் மறுசீரமைக்கப்பட்டு புதிய வர்த்தக கூட்டாளிகளைத் தேடுகின்றன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இந்தியா அதிகமாக ஏற்றுமதி செய்யும். இன்று இந்தியா வலுவானது, அதிக மரியாதைக்குரியது. நாடு புதிய வர்த்தக ஏற்பாடுகளை தொடர்ந்து உருவாக்கும்.

வர்த்தக ஒப்பந்தங்கள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மொரீஷியஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், சிலி, பெரு, நியூசிலாந்து மற்றும் இன்னும் பல நாடுகள் உட்பட பலதரப்பட்ட கூட்டாளிகளுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தங்களைத் தொடர்கிறது. மேலும் வர்த்தக ஒப்பந்தங்களை இறுதி செய்து வருகிறது. இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Kanns
ஆக 09, 2025 18:56

Better Improve Quality of Our Industry, Commerce& Overseas Markets


vadivelu
ஆக 09, 2025 07:55

இங்கே ஒரு கூட்டம் இருக்கு பாருங்க, அவுங்களுக்கு மோடி, பி ஜெ பி மேல் உள்ள வெறுப்பில் நல்ல படித்த திறமையான மத்திய அமைச்சர்கள் கூட ஒன்றுக்கும் உதவாதவர்கள், கேவலமானவைகள், எப்படித்தான் அமைச்சர்கள் ஆனார் என்று ஒரே புலம்பல்,அதிலும் இந்த வெறியர்கள் ஒரு பெண் அமைச்சரை மிக கேவலமாக அவர் சாதி சொல்லி பேசும் பிறவிகள்.


MARUTHU PANDIAR
ஆக 09, 2025 19:08

அவை ஈனப் பிறவிகள் என்பதும், சுயநலத்துக்காகவும் பதவிக்காகவும் எதை வேண்டுமென்றாலும் பேசும், செய்யும் இழி பிறவிகள் என்பதும் நாடறிந்தது.


K.Uthirapathi
ஆக 09, 2025 06:02

நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம். "இது கான்கிராஸ் ஆட்சியல்ல" என்பதை, மூடன் ட்ரொம்பு யோசிக்க தவறிவிட்டான்.


m.arunachalam
ஆக 08, 2025 21:44

சுய தம்பட்டம் இல்லாமல் தேவைகளை சுருக்கி அளவான வாழ்க்கை வாழ பழகினால் போதும் . அடிமை ஆகாமல் வாழலாம்.


R Dhasarathan
ஆக 08, 2025 21:17

அரசு தங்கமாக சேமிக்க வேண்டும் டாலருக்கு பதிலாக. இது தான் சரியான அடியாக இருக்கும். மக்களின் இந்த அமெரிக்க மோகம், அரசாங்கத்தின் கைகளை கட்டிப்போட்டு விடுகிறது. இங்கு இல்லாதது எங்கும் இல்லை...


SUBBU,MADURAI
ஆக 08, 2025 20:53

Can tariffs sustain a superpower? NO Trump should learn from Napoleons mistakes Napoleon thought he would make France great with the continental tem Banned Britain from Europe by imposing high tariffs Result: All Europeans: Prussia, Austria, Bavaria Germany, Russia, Sweden joined hands with Britain and defeated Napoleon


Ramesh Sargam
ஆக 08, 2025 20:05

ஆம், அன்புக்கு யாம் அடிமை. உருட்டல், மிரட்டல்களுக்கு யாம் என்றும் அடிபணியோம். குறிப்பாக ட்ரம்பின் மிரட்டல்களுக்கு அடிபணியவே மாட்டோம்.


MARUTHU PANDIAR
ஆக 08, 2025 20:01

டிரம்புக்கு இந்தியாவின் வளர்ச்சி கொஞ்சமும் பிடிக்க வில்லை. வயிற்றெரிச்சல். அதோடு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை தங்கள் நாட்டுக்கு மடை மாற்ற திட்டமிட்டு இப்படி அடாவடி வரிகள் மூலம் சுரண்டி கொழுக்க எண்ணம். இந்த சூழ்நிலையில் இத்தாலிய கண்ட்ரோல் அரசு மட்டும் இருந்திருந்தால் எப்பொழுதோ அடி பணிந்திருக்கும். 1 பெட்ரோல் விலை 150/160 ஐ உடனே தாண்டும். அல்லது 1 விலை ஏறாமல் கச்சா எண்ணெய் கடன் சுமை பல பில்லியன் டாலர் எகிறியிருக்கும. அல்லது 3 இரண்டுமே நடந்திருக்கும், இந்தியா 50 ஆண்டுகள் பின்னோக்கி போக தொடங்கும். இது உறுதி.


Venkatesan Srinivasan
ஆக 08, 2025 22:57

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோலிய எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் "ஆயில் பாண்ட்" என்ற கடன் பத்திரங்கள் விநியோகம் செய்து கடன்காரர்கள் ஆக அரசால் நிர்பந்தம் செய்யப்பட்டது. அந்த கடன்கள் பின்வந்த பாஜக அரசால் பெட்ரோலிய பொருட்கள் விலை ஏற்றம் - மாற்றம் செய்யப்பட்டு அடைக்கப் பட்டது. இப்பொழுது ஒரு நல்ல சந்தர்ப்பம் மத்திய அரசுக்கு வாய்த்து உள்ளது. ஏற்றுமதி வாய்ப்பு குறைபாடுகள் காரணம் கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிமுறைகள் உருவாக்கலாம். இலவச நடவடிக்கைகளை வெகுவாக குறைக்கலாம். மாநில அரசுகள் வெகுவாக சர்வதேச நிதி அமைப்புகளில் கடன் பெறுவதை தடுக்கலாம். மாநிலங்களின் நிதி சலுகைகள் அவற்றின் உற்பத்தி வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி சார்ந்து இருக்க நிர்பந்திக்க வேண்டும்.


ஆரூர் ரங்
ஆக 08, 2025 19:52

எவ்விதப் பிரச்சாரமும் இல்லாமல் மக்களே அமெரிக்கப் பொருட்களை தவிர்ப்பது நாட்டுக்கு நல்லது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை