உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி; காஷ்மீர் மக்கள் கொண்டாட்டம்!

பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி; காஷ்மீர் மக்கள் கொண்டாட்டம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. இதனை காஷ்மீர் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ye4d67y8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஏப்., 22ல் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ஆட்டம் ஆடிய பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதலை இந்திய ராணுவம் துவங்கி உள்ளது.இதனை காஷ்மீர் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். காஷ்மீர் மக்கள் ஒன்று கூடி 'பாரத் மாதா கீ ஜெய்' என்ற கோஷங்களை எழுப்பினர். இது குறித்து காஷ்மீரை சேர்ந்த உள்ளூர்வாசிகள் கூறியதாவது: நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். பாகிஸ்தானுக்கு இந்தியாவின் பதிலுக்காக நாங்கள் அனைவரும் காத்திருந்தோம். இந்தத் தாக்குதல் ஆதாரங்களுடன் நடந்துள்ளது. நாங்கள் ராணுவத்துக்கு ஆதரவாக நிற்கிறோம். பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

பா மாதவன்
மே 07, 2025 09:58

நாட்டுப் பற்றுள்ளவர்கள் பலர் அங்கு உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது


Nada Rajan
மே 07, 2025 09:33

வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்


S.V.Srinivasan
மே 07, 2025 09:32

இஸ்ரேல் ஹமாஸை அடிச்ச மாதிரி அடிங்க அப்பத்தான் தீவிரவாதம் ஒரு முடிவுக்கு வரும். நேரு காலத்து பஞ்சசீல கொள்கையெல்லாம் இவனுககிட்ட வேலைக்கு ஆவாது.


புதிய வீடியோ