உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தாமதமானதால் அடிக்கப் பாய்ந்த பயணிகள்; விமானப் பணிப்பெண்களின் செயலுக்கு குவியும் பாராட்டு

தாமதமானதால் அடிக்கப் பாய்ந்த பயணிகள்; விமானப் பணிப்பெண்களின் செயலுக்கு குவியும் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: இண்டிகோ விமானம் தாமதமானதால் ஆத்திரமடைந்த பயணிகள், ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மும்பை விமான நிலையத்தில் இண்டிகோ விமான ஊழியர்களிடம் சில பயணிகள் ஆவேசமாக சத்தம் போட்டு, சண்டையிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இண்டிகோ விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும், இது தொடர்பாக பயணிகளுக்கு எந்தவித முன்னறிவிப்பும் கொடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், கடுப்பான பயணிகள் விமானப் பணிப் பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதில், மிகவும் ஆவேசமாக சத்தம் போட்ட ஒருவர், குழந்தைகளுடன் 5 மணிநேரம் காத்திருப்பதாகவும், இப்போது நாங்கள் என்ன செய்வது? என்று ஆக்ரோஷமாக கேட்டுள்ளார். சில பெண் பயணிகளோ, 'நீங்கள் எங்கள் நேரத்தை வீணடித்து விட்டீர்கள். அனைத்து விமானங்களும் புறப்பட்ட நிலையில், உங்கள் விமானம் மட்டும் கிளம்பவில்லை,' என்று கேள்வி எழுப்பினர். பயணிகள் ஆவேசமாக, தங்களை அடிப்பது போல வந்து கேள்விகளை எழுப்பிய போதும், இண்டிகோ விமானப் பணிப் பெண்கள், தங்களின் பொறுப்பை உணர்ந்து, அமைதியுடன், பொறுமையாக பயணிகளின் சந்தேகங்களும், கேள்விகளுக்கும் பதிலளித்துக் கொண்டிருந்தனர். அவர்களின் இந்த செயல்கள் நெட்டிசன்களை பாராட்டுக்குள்ளாக்கியுள்ளது. மேலும், இதுபோன்று பயணிகள் நடந்து கொள்வதால், தீர்வு கிடைத்து விடப் போவதில்லை என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

rama adhavan
அக் 01, 2024 23:05

இண்டிகோ விமான சேவை சிறந்தது தான். பல முறை சென்று இருக்கிறேன். எல்லாவற்றையும் குறை சொல்லும் குணம் தான் கொடியது.


NALAM VIRUMBI
அக் 01, 2024 15:29

அமெரிக்க டாலருக்கு இணையாக இந்திய ரூபாயை உயர்த்துவோம் என்று மோடிஜி சொன்னார் என்பதெல்லாம் சுத்தப்பொய். உலக நாடுகளின் பொருளாதார மற்றும் அரசியல் நிலை தெரியாமல் பதிவிடுவது உசிதமன்று. இன்று உலக அளவில் நம் நாடு போற்றத்தக்க நிலையில் தான் உள்ளது. இது தான் மோடிஜி தலைமையில் அமைந்த அரசின் சாதனை. காங்கிரசு மற்றும் திமுக அடிவருடிகள் மூளையற்ற நையாண்டி செய்வதில் வல்லவர்கள். அவர்களுக்கு இங்கு இருக்க முடியவில்லை இல்லையெனில் பக்கத்தில் உள்ள பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து, அல்லது வளைகுடா நாடுகளுக்கு சென்று வாழ வேண்டியது தானே யார் தடுத்தார்கள்?


rama adhavan
அக் 01, 2024 23:13

சிலருக்கு பொய் பரப்புவதே பணி.


Joseph
அக் 01, 2024 05:47

ஆண் ஆதிக்கம் படைத்தவரோ நீர் ?


Tetra
செப் 30, 2024 20:14

என்னவோ இங்கதான் இப்படி மாதிரி. கொஞ்சம் அமரிக்கா ஆப்ரிக்கா செய்திகளையும் படிங்கப்பா? நம் நாட்டைப்போலத்தான்


Subash BV
செப் 30, 2024 19:36

Trains arriving 11 hrs late. None questioning them. Cultivate tolerance.


Naagarazan Rs
செப் 30, 2024 20:28

ஆனால் அவர்கள் முன்னெச்சரிக்கை அல்லது அறிக்கை தந்திருக்கவேண்டும் சும்மா இருந்தால் பொறுமை மீறிவிடுமே


Naagarazan Rs
செப் 30, 2024 20:30

But they should have warned or notified the delay and the cause


Yasararafath
செப் 30, 2024 18:58

இந்த இடத்தில் பெண்கள் இருப்பதற்க்கு பதில், ஆண்கள் பாராட்டு பெற்று இருக்கலாம்.


மனோஹரன்
செப் 30, 2024 16:01

இன்னும் 450 விமானங்களுக்கு ஆர்டர் குடுத்திருக்கோம் ஹை. வந்தப்புறம் ஏதாவது ஒண்ணை எடுத்து ஓட்டுவோம் ஹை. நம்புங்க ஹை.


கிருஷ்ணமூர்த்தி
செப் 30, 2024 15:59

இந்திய நிறுவனங்களின் சர்வீஸ் லட்சணம் இதுதான். மோசமான நொர்வாகத்தால் விமானப் பணிப்பெண்கள் பலிகடா ஆகிறார்கள். மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள். மேல் தத்திகள் அரசியல்.கட்சிகளுக்கும், அதிகாரிகளுக்கும் துட்டு வெட்டி தப்பித்து விடுகிறார்கள்.


Chandramouli, M.S.
செப் 30, 2024 14:54

If we go few minutes late, they wont allow us to board, even after putting boarding card. I had a very bad experience by missing the boarding for few minutes late and refused refund too. I lost full amount of three tickets. Several complaints went vein. This is the service of Indigo. As a ordinary citizen we have left with no option except to lament like this.


rama adhavan
அக் 01, 2024 23:12

குறை நம்முடையது. எனவே நாம்தான் திருந்த வேண்டும். உங்க பக்கம் நியாயம் இருக்கும் பட்சத்தில் நீங்கள் நுகர்வோர் நீதி மன்றம் சென்று இருக்கலாமே?


Suresh R
செப் 30, 2024 14:41

Indian economy is growing faster due to government actions. But airlines are not able to grow at the same rate


mohd jalaldeen
செப் 30, 2024 19:28

நண்பரே இந்திய பொருளாதாரம் எங்கே உயர்ந்துள்ளது? பத்து வருடங்களுக்கு முன் திருவாளர் மோடி பிரதமராக வருவதற்கு முன் பாஜக ஆட்சிவந்தவுடன் அமெரிக்க டாலருக்கு இணையாக இந்திய நாணயத்தை மதிப்பு உயரும், என்றார் உயர்ந்தது என்னவோ அனைத்து பொருட்களின் விலையேற்றமேயன்றி வேறொன்றுமில்லை. மன்மோகன்சிங்க் பிரதமராக இருந்த போது ஒரு பீப்பாய் குருடாயில் 175 அமெரிக்க டாலர்கள், இந்தியாவில் பெட்ரோல் விலை ₹54, டீசல் விலை ₹48, சமையல் எரிவாயு சிலிண்டர் ₹350, இது ஒன்றே போதும் மற்ற பொருட்களின் விலையேற்ற, திருவாளர் மோடி ஆட்சியில் பெட்ரோல் விலை ₹100+, எரிவாயு விலை ஆயிரம் ரூபாய் இது சராசரி மக்களை வஞ்சிக்கும் செயல்தானே, நான் எந்த கட்சியையும் சார்ந்தவனில்லை வாஜ்பாய் ஆட்சிக்காலம் ஒரு சிறந்த காலம் இந்திய மீனவர்களை தாக்கிய இலங்கை இராணுவத்தை வன்மகயாக கண்டித்ததுடன் பாராளுமன்றத்தில் பகிரங்கமாக அறிவித்தார் இனிமேல் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவார்களேயானால் இலங்கையுடனான உறவை துண்டிப்போம் என்று அவரல்லவா பிரதமர் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை