உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செயற்கை சூரிய கிரகணம் உருவாக்கும் செயற்கைக்கோள்; நவ.,29ல் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்

செயற்கை சூரிய கிரகணம் உருவாக்கும் செயற்கைக்கோள்; நவ.,29ல் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: செயற்கை சூரிய கிரகணத்தை உருவாக்கும் 'புரோபா-3' செயற்கைக்கோள் நவம்பர் 29ம் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் (இஸ்ரோ) இணைந்து, விண்வெளியில் செயற்கை சூரிய கிரகணத்தை உருவாக்க, 'புரோபா-3' என்ற இரட்டை செயற்கைக்கோளை வடிவமைத்து உள்ளது. விண்ணில் இருந்து புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பும் வகையில் இந்த இரட்டை செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது, 'புரோபா-3' செயற்கைக்கோள் இறுதிக்கட்ட சோதனையில் இருக்கிறது.ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திற்கு இன்று அந்த இரட்டை செயற்கைக்கோள் அனுப்பி வைக்கப்பட உள்ளது. சற்று வித்தியாசமான சுற்றுப்பாதையில் இந்த செயற்கைக்கோள் செலுத்தப்பட உள்ளது.

சிறப்பு அம்சங்கள் என்ன?

* இந்த இரட்டை செயற்கைக்கோளும் செயற்கை சூரிய கிரகணத்தை உருவாக்கக் கூடிய சக்தி கொண்டவை.* அதிக நீள்வட்ட சுற்றுப்பாதையை இந்த செயற்கைக்கோள் கொண்டிருக்கும்.* சந்திரயான்-4 உள்ளிட்ட எதிர்கால திட்டங்களுக்கு உதவியாக இந்த திட்டம் இருப்பதால் இந்த சோதனை முக்கியத்துவம் பெறுகிறது. * இந்த நுட்பம் சூரியனின் கரோனாவை (corona) நீண்ட நேரம் கண்காணிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்புசாமி
அக் 22, 2024 02:50

எந்த நட்சத்திரத்தில் எந்த ராசியில் கிரகணம் வரும்? அன்னிக்கி அமாவாசையா? பவுர்ணமியா? கிரகண தர்ப்பணம் யார் யார் செய்ய வேண்டும்னு சொல்லிடுங்க.


P. VENKATESH RAJA
அக் 21, 2024 11:43

இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து பல்வேறு சாதனைகள் சாதித்து வருகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை