உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வருமானவரி கணக்கு தாக்கல் செய்யும் காலக்கெடு நீட்டிப்பு: இன்றும் தாக்கல் செய்ய அவகாசம்

வருமானவரி கணக்கு தாக்கல் செய்யும் காலக்கெடு நீட்டிப்பு: இன்றும் தாக்கல் செய்ய அவகாசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய அளிக்கப்பட்டு இருந்த கால அவகாசம் மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றும் கணக்கை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.2025-/2026 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. ஐடிஆர் படிவத்தில் மேற்கொண்ட சில மாற்றங்கள் எதிரொலியாக, கணக்கு தாக்கல் செய்யும் காலம் செப்.15 வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது.மேலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிரமம் ஏற்பட்டதாக வரி செலுத்துவோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந் நிலையில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் கால அவகாசம் ஒருநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அபராதம் இன்றி வரி செலுத்துவோர் தங்கள் கணக்கை இன்றும் (செப்.16) தாக்கல் செய்யலாம் என்று மத்திய நேரடி வரிகள் விதிப்பு வாரியம் அறிவித்து உள்ளது.இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் வருமானவரித்துறை வெளியிட்டு இருக்கிறது. முன்னதாக, இதுவரை 7 கோடி பேருக்கும் அதிகமானோர் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Patchiraja Patchiraja
செப் 18, 2025 18:11

அக்கௌன்ட் நம்பர் ?


Ram pollachi
செப் 16, 2025 17:41

வருடம் முழுவதும் உறங்கியவன் எப்படி வருமான வரி செலுத்த முடியும்? ஒரு வருடம் நடந்த வரவு செலவுகள் பற்றிய விபரங்களை தெரிவிக்க 122 நாட்கள் மட்டுமே அவகாசம் தருகிறார்கள்... பட்டைய கணக்காளர்கள் கேட்கும் ஆவணங்களை பெற்று தரவே சில நாட்கள் / மாதங்கள் ஓடிவிடும்... வேலை பார்க்கும்/ பழகும் ஆட்களுக்கு நாம் சொல்வது புரியாது. வங்கி கணக்கு, TDS, TCS, GST எல்லாம் tally ஆக வேண்டும் .. இலாபம் எட்டு சதவீதம் காட்ட வேண்டும் இல்லை என்றால் ஆடிட்டர் கணக்கை சரிபார்த்து அறிக்கை உட்பட அனைத்து ஆவணங்களையும் ஸ்கேன் செய்து டிஜிட்டல் கையொப்பம் உடன் படிவத்தை தாக்கல் செய்யவேண்டும்... இரண்டு பக்கமும் பெரிய பதட்டம் இருக்கு... மேலும் பெரிய நிறுவனங்கள் அடுத்த மாதத்திற்கு உள்ளாக வருமானவரி படிவத்தை தாக்கல் செய்யவேண்டும்.... குறிப்பிட்ட தேதிக்குள் படிவத்தை தாக்கல் செய்தால் மீண்டும் அந்த படிவத்தில் ஏதேனும் தவறுகள் இருந்தால் சரிசெய்து தாக்கல் செய்ய வாய்ப்பு உண்டு. அதற்கு தான் இந்த மாதம் வரை இழுத்தால் ஒன்றும் ஆகிவிடாது.


ஆரூர் ரங்
செப் 16, 2025 22:15

நீட்டித்துக் கொண்டே இருந்தால் அரசின் வருமான வரி வசூலும் தாமதமாகும். ஏற்கனவே 46 நாட்கள் கூடுதலாக அவகாசம் அளிக்கப்பட்டு விட்டது. கணினி யுகத்தில் கூட கட்டை வண்டியில்?


R SRINIVASAN
செப் 16, 2025 17:28

capital gains -ஐ கண்டு பிடிப்பது மிகவும் சிரமமாய் இருக்கிறது .cost of inflation index முறையில் கணக்கிடும்போது 2001-ல் உள்ள guide லைன் value - ஐ வழி காட்டியாக எடுக்க சொல்கிறார்கள் . அது மிகவும் குறைவாக இருக்கிறது .அரசு தரப்பில் கேட்டால் 2004-இல் தான் ரிவைஸ் பண்ணியதாக சொல்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் 2024-25-இல் guide லைன் ரேட்-i எக்கச்சக்கமா ஏற்றி இருக்கிறார்கள். இதனால் விற்பனை விலையை விட guide லைன் ரேட் அதிகமாக இருக்கிறது. இதனால் வாங்குபவர்கள் முத்திரை தாளுக்கு அதிகம் செலவழிக்க நேரிடுகிறது. விற்பவர்களின் மூலதன வரி அதிகமாகிறது. இதை மத்திய அரசோ, மாநில அரசோ க ண்டு கொள்ளவில்லை.


ஆரூர் ரங்
செப் 16, 2025 22:11

2018 ஜனவரி 31 க்கு முன் வாங்கியிருந்தால் அ‌ன்று வரை கேபிடல் LTCG வரி கிடையாது. 31 01 2018 உச்ச பட்ச விலையை GRANDFATHERING VALUE வாக கொண்டு கணக்கிடப்படும் எனஎண்ணுகிறேன். பட்டயக் கணக்காளர் அல்லது நிதி ஆலோசகரீடம் கேட்டு தெளிவு பெறவும்.


ஆரூர் ரங்
செப் 16, 2025 22:19

இன்றும் 90 சதவிகிதம் பேர் சொத்து மதிப்பை மிகவும் குறைவாகவே காட்டி பதிவு செல்கிறார்கள். அதனால்தான் கைடு லைன் மதிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது . தவறு யாருடையது?


Ram pollachi
செப் 16, 2025 11:28

இந்த மாதம் முழுவதும் கொடுத்தால் நன்றாக இருக்கும்.....


ஆரூர் ரங்
செப் 16, 2025 14:51

ஏப்ரல் 1 முதல் 167 நாட்கள் உறங்கிவிட்டு கடைசி நேரத்தில் இன்னும் நேர அவகாசம் கேட்பதில் என்ன நியாயம்?


Sridharan Venkatraman
செப் 16, 2025 10:25

பரோட்டா விற்கிறவன் இருபத்து ஐந்தாயிரம் கடை வாடகை கொடுக்கிறான். ஆனால் வருமானம் ஏதும் இல்லை என்று வரி கட்டமாட்டான். ப்ரோஹிதர் மாதம் அம்பதாயிரம் ஒரு லக்ஷம் சம்பாதிப்பார். வரி ஏதும் கட்ட அவசியம் இல்லை. 140 கோடி மக்களில் 2 கோடி பேர் மட்டுமே வரிக்கு உட்படுவர். வாழ்க ஜன நாயகம்.


KR india
செப் 16, 2025 09:48

மத்திய அரசுக்கு நன்றி கீழ்கண்ட நடவடிக்கை எடுத்தால் நன்று 1 Self-Assessment Tax, Advance Tax வருமான வரி செலுத்த SBI, PNB, CENTRAL BANK, UNION BANK OF INDIA, போன்ற முன்னணி பொது துறை வங்கிகளின் Internet Banking மூலமாக நேரடியாக வரி செலுத்த அனுமதிக்க வேண்டும். சிறிது காலம் கழித்து, தனியார் வங்கிகளின் Internet Banking மூலம் வரி செலுத்தவும் கூட அனுமதிக்கலாம். ஏற்கனவே, இந்த நடைமுறை, Offline Bank at Cash Counter Option வாயிலாக, தற்போது, வங்கிகளின் இன்டெர்னல் நெட்ஒர்க் மூலம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, வங்கியில், வருமான வரி Offline முறையில், செலுத்திய சில நிமிடங்களில், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் Income Tax Web Portal - E-Pay Tax - Payment History-ன் கீழ் சலான் பதிவிறக்கம் செய்து விட முடியும். இந்த நடைமுறையை மேலும் விரிவுபடுத்தி, நேரடியாக வங்கி வாடிக்கையாளர் தனது, Internet Banking மூலம் செலுத்த ஏற்பாடு செய்யுங்கள். அதாவது, Offline மூலம், வாடிக்கையாளர் சார்பாக, வங்கி ஊழியர்கள் மூலம், வரி செலுத்தும் முறையை, வங்கி வாடிக்கையாளர் சுயமாக தனது, Internet Banking மூலம் செலுத்த ஏற்பாடு செய்யுங்கள் நேற்றைய தினம், வருமான வரி செலுத்தமுடியாத வகையில், தொழிநுட்ப பிரச்சினை வந்ததல்லவா ? எதிர்காலத்தில், அது போல், வந்தால், கூட, சில மணி நேரங்கள் கழித்து, வங்கி Internet Banking மூலம் வரி செலுத்தியவர்களின் தகவல், அவர்களின் PAN-ல் Challan Update செய்து கொள்வது போன்று IT portal software-ஐ மேம்படுத்தலாம். 2 வருமான வரி, credit.card மூலம் செலுத்தும் போது, SBI payment gateway-வை கொடுத்தால் கூட, அது நான்கு எழுத்து தனியார் வங்கியின் payment gateway-ஐ, Web Address Bar ல் சில நொடிகள் Display செய்து, வேறு இணையதளத்திற்கு சென்று Challan Generation ஆகிறது. தனியார் வங்கி, Secret Technical Gimmics முறைப்படி SBI payment gateway-ல் Invade / intrude செய்கிறதா என்பதை கண்காணியுங்கள் நன்றி


Moorthy
செப் 16, 2025 07:15

7 கோடி பேரில் 75% பேர் ஸிரோ வரி செலுத்துவோர்.. மீதி 2 கோடி பேர்தான் உண்மையான வரி கட்டுவோர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை