உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது தீங்கு விளைவிக்கும்; அமெரிக்கா, ஐரோப்பாவிற்கு ஜெய்சங்கர் எச்சரிக்கை

குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது தீங்கு விளைவிக்கும்; அமெரிக்கா, ஐரோப்பாவிற்கு ஜெய்சங்கர் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அமெரிக்காவும் ஐரோப்பாவும் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தங்கள் சொந்த நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் பேசியதாவது: பல நாடுகளில் குடியேற்றத்திற்கு எதிரான கட்டுப்பாடுகளில் பல பிரச்னைகள் அவர்கள் தீர்க்க வேண்டியவை. அமெரிக்காவும் ஐரோப்பாவும் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தங்கள் சொந்த நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும். இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். பொருளாதார வளர்ச்சியில் இழப்பு ஏற்படும்.பொருளாதார வளர்ச்சி மற்றும் உற்பத்தி அதிகரித்து வருவதால் திறமையாளர்களுக்கான தேவை அதிகரிக்கும். மேற்கத்திய நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள் கடந்த இரண்டு தசாப்தங்களாக எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளின் விளைவாகும். நாம் வளர்ச்சி நோக்கி செல்லும் போது ​​நமக்குக் குறைவாக அல்ல, அதிக திறமை தேவைப்படும். மோதல் ஏற்படும் போதெல்லாம், நாம் அலட்சியமாகவோ அல்லது நடுநிலையாகவோ இருக்க முடியாது. கடந்த மூன்று ஆண்டுகளில், பல்வேறு இடங்களில் மோதலில் சிக்கிய, இந்தியர்கள் 28 ஆயிரம் பேரை நாங்கள் திரும்ப அழைத்து வந்துள்ளோம். தற்போது, உலகின் பல்வேறு நாடுகளில் 20 லட்சம் இந்தியர்கள் பணிபுரிகின்றனர். ஆண்டு வருவாய் 65 முதல் 75 பில்லியன் டாலர்கள் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை