உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துர்கா பந்தலில் இயேசுவின் படம் வி.எச்.பி., எதிர்ப்பால் அகற்றம்

துர்கா பந்தலில் இயேசுவின் படம் வி.எச்.பி., எதிர்ப்பால் அகற்றம்

ராஞ்சி : ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், வாடிகன் சிட்டி சர்ச் வடிவில் அமைக்கப்பட்டிருந்த துர்கா பூஜை பந்தலுக்கு வி.எச்.பி., எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அதில் வைக்கப்பட்டு இருந்த இயேசு படம் நீக்கப்பட்டு கிருஷ்ணர் படம் வைக்கப்பட்டுள்ளது. அம்மன் சிலை ஜார்க்கண்ட் தலை நகர் ராஞ்சியில், நவராத்திரியை மு ன்னிட்டு துர்கா பூஜை பந்தல் அமைக்கப்பட்டது. கடந்த 50 ஆண்டு களாக பந்தல் அமைத்து வரும், 'ஆர்.ஆர்.ஸ்போர்டிங் கிளப்' என்ற அமைப்பின் சார்பில், ஐரோப்பிய நாடான இத்தாலி தலைநகர் ரோம் அருகே உள்ள, கிறிஸ்துவர்களின் தலைமையிடமாக போற்றப்படும் வாடிகன் சிட்டி சர்ச் வடிவத்தில் பந்தல் அமைக்கப்பட்டது. பந்தலுக்கு வெளியே ஐரோப்பிய பாணியிலான சிலைகள் அலங்காரத்திற்காக வைக்கப்பட்டன. அதே போல் உள்ளே பிரதானமாக அம்மன் சிலை வைக்கப்பட்டது. எனினும், ஏசு கிறிஸ்துவின் படமும் வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு வி.எச்.பி., எனப்படும், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, பந்தலில் இருந்து ஏசுவின் படம் அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக கிருஷ்ணரின் படம் வைக்கப்பட்டது. இது கு றித்து, 'ஆர்.ஆர்.ஸ்போர்டி ங் கிளப்'பை சேர்ந்த யாதவ் கூறுகையில், ''இங்கு மற்ற மதங்களுக்கு இடமில்லை எனில், ஹிந்து தேசம் என அறிவித்துவிட வேண்டியது தானே. வெளிநாட்டிற்கு செல்லும்போதெல் லாம் பிரதமர் மோடி , அங்குள்ள கிறிஸ்துவ தேவாலயங்களுக்கும் செல்கிறார். தேசத்தின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தவே இந்த பந்தலை அமைத்தோம். அதே சமயம் சனாதன தர்மத்தையும் வெளிப்படுத்தினோம்,'' என்றார். மதமாற்றம் வி.எச்.பி., செய்தி தொடர்பாளர் வினோத் பன்சால் கூறுகையில், ''ஹிந் து மதத்தின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கிலேயே அந்த பந்தல் அமைக்கப்பட்டது. மேலும், மதமாற்றத்தை ஊக்கப்படுத்தும் வகையிலும் வாடிகன் சர்ச் பாணியில் பந் தல் அமைக்கப்பட்டது. '' உண்மையிலேயே அவர்களுக்கு மதசார்பின்மை மீது அதிக விருப்பம் இருந்தால், சர்ச் மற்றும் மதரசாக்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் ஹிந்து கடவுள்களின் படங்களை வைக் கலாமே. அ தை அவர்கள் செய்வரா, '' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

c.mohanraj raj
செப் 28, 2025 15:36

விரைவில் இதை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் இல்லையென்றால் சிறுபான்மை என்ற பெயரில் இருவரும் மதமாற்றம் செய்து சிதைத்து விடுவார்கள்


Rathna
செப் 28, 2025 11:40

தசரா ஹிந்துக்களின் பண்டிகை இல்லை என்று சொல்வது - மைசூரில். ஹிந்து கோவில்களில் அதன் மரபுகளுக்கு மீறி அதன் வழிபாடுகளை அமைப்பது - திருப்பதி, சபரி மலை, உணவில் கலப்படம் செய்வது - திருப்பதி லட்டு போன்றவற்றின் மூலம் மத விரோதத்தை தூண்டவும், மத மாற்றத்தை ஊக்குவிக்கவும் பணம் வாங்கி கொண்டு சதிகாரர்கள் வேலை செய்கிறார்கள்.


சிந்தனை
செப் 28, 2025 10:54

மதசார்பு அற்ற நாடு என்றால் அதன் பொருள் ஹிந்துக்கள் இளிச்சவாயர்களாக இருக்க வேண்டிய நாடு என்று பொருள்


Mecca Shivan
செப் 28, 2025 10:35

இதன் பெயர் என்ன தெரியுமா? இப்படித்தான் ஹிந்துமதத்தை காபி அடித்து ...


என்னத்த சொல்ல
செப் 28, 2025 09:52

இந்து மதத்தை நல்ல காப்பாத்துறாங்கய்யா ..ஒரே காமெடியா இருக்கு..


KOVAIKARAN
செப் 28, 2025 08:59

அவர்கள் வாங்கிய கூலிக்கு வேலை செய்கிறார்கள் அவ்வளவுதான். மதப்பற்றாவது, மண்ணாங்கட்டியாவது, அவர்களுக்கு பணமே பிரதானம்.


D Natarajan
செப் 28, 2025 08:31

ஹிந்துவாக இருந்து மதம் மாருபவன் எப்படி இந்த மாதிரி கேனத்தனமாக யோசிக்கிறான். ஹிந்துக்களே ஒன்று படுங்கள், மதம் மாற்றும் சக்திக்கு எதிராக ஹிந்துக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்துங்கள் , இந்தியாவை ஹிந்து தேசம் என்று அறிவிக்க வேண்டும்


Iyer
செப் 28, 2025 07:46

பாரதத்தை "ஹிந்து ராஷ்ட்ரா" என்று சட்டபூர்வமாக அறிவிக்கவேண்டும். பாரதத்தில் ஓட்டுரிமை - ஹிந்து, சீக்கியர், புத்த ஜைன மாதங்களுக்கு மட்டும் கொடுக்கவேண்டும்.


Chess Player
செப் 28, 2025 06:57

எங்க கோயில்ல எதுக்கு இது. எங்கள் வழிபாட்டில் மட்டும் என்ன பன்முக தன்மை. கொஞ்சம் கொஞ்சமா நமது வழிபாட்டை அழிக்க ஆரம்பிக்கிறார்கள். இப்படிதான் கனடா பூர்வ குடி மக்களின் மதத்தை அழித்து கிறிஸ்டியானிட்டி பரப்பினார்கள் போப் சில வருடங்களுக்கு முன் மன்னிப்பு கேட்டார் அவர்கள் பூர்வ குடி மக்களின் மதத்தை அழைத்ததற்கு. அழித்த பின் என்ன மன்னிப்பு. மதம் மாற்று வைத்து ஒரு தொழில்


Barakat Ali
செப் 28, 2025 06:44

சமூக வலைத்தளங்களில் அனுதினமும் ஹிந்து மதத்திற்கு எதிராக விஷம் கக்கப்படுகிறது ..... யார் கவனிக்கிறார்கள் ????


Chess Player
செப் 28, 2025 07:40

மதம் மாற்றுவதற்கே விஷத்தை தானே போதிக்கிறார்கள். வெறுப்பு, இழி பேச்சு, இதை பரப்பி, காசுக்கு மதம் விற்பனை கிறிஸ்டின் அனா பின் ஜாதி இல்லை என்று பொய் பிரச்சாரம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை