உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தாய்மொழியில் திணறும் மாணவர்கள்: ஆய்வில் அதிர்ச்சி

தாய்மொழியில் திணறும் மாணவர்கள்: ஆய்வில் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவில் கிராமப்புறங்களில் உள்ள 14 முதல் 18 வயதுக்குட்பட்ட நான்கில் ஒரு மாணவர் (25 சதவீதம் பேர்) 2ம் வகுப்பு நிலையில் உள்ள எளிய வாக்கியங்களை கூட தங்கள் சொந்த மொழியில் சரளமாக படிக்க திணறுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.மாணவர்களின் கல்வி நிலையை அறியும் பொருட்டு, ஆண்டு கல்வி நிலை அறிக்கை (ஏ.எஸ்.இ.ஆர்) சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 26 மாநிலங்களில் உள்ள 28 மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள 14 முதல் 18 வயதுக்குட்பட்ட 34,745 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: 2017ல் 85.6 சதவீதமாக இருந்த மாணவர்கள் சேர்க்கை, தற்போது 86.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதில் மூன்றில் ஒரு பகுதியினர் 12ம் வகுப்புக்கு மேல் படிப்பை தொடரவில்லை. 4ல் ஒரு மாணவர் ஆர்வமின்மை காரணமாகவும், 5ல் ஒரு மாணவி குடும்ப சூழ்நிலை காரணமாகவும் படிப்பை தொடர முடியவில்லை என்றனர்.

தாய் மொழி

கிராமப்புறங்களில் உள்ள 14 முதல் 18 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு நான்கு பேரில் ஒருவரால் 2ம் வகுப்பு நிலையில் இருக்கும் எளிய வாக்கியங்களை கூட தங்கள் சொந்த மொழியில் சரளமாக படிக்க முடியவில்லை. தாய்மொழியில் எளிய வாக்கியங்களை கூட சரளமாக படிக்க முடியாத நிலையில் உள்ளனர். 42.7 சதவீதம் பேர் ஆங்கிலத்தில் உள்ள எளிய வாக்கியங்களைப் படிக்க முடியாமல் திணறுகின்றனர். கணிதப் பாடத்திலும் மாணவர்கள் பின்தங்கி உள்ளனர்; ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 34,745 மாணவர்களில், சுமார் 43.3% பேர் மட்டுமே மூன்று இலக்க எண்ணை ஒற்றை இலக்க எண்ணால் வகுக்கும் திறனைக் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 14 முதல் 18 வயதுடைய மாணவர்களில் 90 மாணவர்கள் தங்கள் வீட்டில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றனர்; அதில், 43.7 சதவீத மாணவர்கள் மற்றும் 19.8 சதவீத மாணவிகள் சொந்தமாக ஸ்மார்ட்போன் வைத்துள்ளனர். இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Ramesh Sargam
ஜன 19, 2024 09:23

தாய் மொழியை அறிவதையும், அதில் பேசுவதையும் ஒரு சிலர் கேவலமாக நினைக்கின்றனர். அவர்கள் ஏதோ ஆங்கில தம்பதிகளுக்கு பிறந்தவர்கள் போல நடந்துகொள்வார்கள்.


Ramesh Sargam
ஜன 19, 2024 09:20

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு அவருடைய தாய்மொழி எது என்றே தெரியாது. ஒரு சிலர் சொல்கிறார்கள் தெலுகு என்று. ஒரு சிலர் சொல்கிறார்கள் தமிழ் என்று. ஆனால் ரெண்டுமே அவருக்கு சரியா தெரியாது.


Rajarajan
ஜன 19, 2024 07:18

தூங்குபவரை எழுப்பலாம், தூங்குவது போல் நடிப்பவரை எப்படி எழுப்புவது?? அது தான், இந்த கதையும். அரசு சம்பளம் பெறுபவர்கள், அரசு ஆசிரியர்கள் ஏன் தங்கள் வாரிசுகளை, அரசு பள்ளிகளில் சேர்ப்பதில்லை என இப்போது புரிகிறதா?? தமிழக சட்ட சபையினரே அப்படித்தானே. அரசு பள்ளிகளின் பாடத்திட்டத்தை / தரத்தை / உட்கட்டமைப்பை / மேற்பார்வையை தனியார் குழுவிடம் ஓப்படைத்துவிட்டு, ஆசிரியரின் சம்பளத்தை மட்டும் அரசு பார்த்துக் கொண்டால் போதும். நமக்கு தான் கல்வி வரலையே, விட்டு விடுவோம். அதை தரமானவர் பார்த்துக் கொள்ளட்டும். இதற்கு மேலும், யாரவது திராவிட ஆட்சிக்கு பரிந்துகொண்டு வந்தால், அவர்கள் சரியான சர்வ....


D.Ambujavalli
ஜன 19, 2024 06:40

இன்றைய மாணவர்கள், சில ஆசிரியர்களுக்குக்கூட கைப்பேசிதான் மூளையாக செயல்படுகிறது


Suppan
ஜன 18, 2024 22:01

இதில் சமச்சீர் கல்வியின் பங்கும் உண்டு. எட்டாம் வகுப்பு வரை "All Pass" என்ற ஒரு அறிவிலித்தனமான கொள்கையும் ஒரு காரணம். அக்கறையில்லாத ஆசிரியர்கள், ஆர்வமில்லாத மாணவர்கள், பொறுப்பில்லாத பெற்றோர்கள், உதவாக்கரை கல்வித்துறை ஆகிய எல்லோரும் இதற்கு பொறுப்பேற்கவேண்டும்.


J.V. Iyer
ஜன 18, 2024 21:23

எல்லோருக்கும் ஹிந்தியை கட்டாய பாடமாக ஆக்கினால் எல்லாம் சரியாகிவிடும்.


V GOPALAN
ஜன 18, 2024 20:50

Even school teachers do not know proper Tamil or English


Barakat Ali
ஜன 18, 2024 20:12

ஹிந்தி வேணாம் போடா என்று சொல்பவர்கள் தாய்மொழி தமிழில் வீக் ஆக இருக்காங்களே ???? ஆரியர்கள் மொழியாக சம்ஸ்கிருதத்தை குறிப்பிட்டாலும் அவங்க நம்மை விட தமிழை சரியாக உச்சரிக்கிறார்கள் ..... ஆய்வுகள் மூலமும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது .....


T.sthivinayagam
ஜன 18, 2024 19:36

மத்திய மோடி அரசு தமிழுக்கு அதிக நிதி ஒதுக்கி பாரத்த்தின் மூத்த மொழியான தமிழை வளர்க்க வேண்டும்


Jysenn
ஜன 18, 2024 19:01

Spectacular achievement in the 56 years rule of useless Diravida parties presided over by annathurai, karunanithi, mgr, jayalalitha and now by sudalin.


SANKAR
ஜன 18, 2024 20:53

it is a survey covering village students ALL OVER INDIA and not TN alone


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி