உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கெஜ்ரிவால், ஆம் ஆத்மி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கெஜ்ரிவால், ஆம் ஆத்மி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மதுபானக் கொள்கை முறைகேடு குறித்த வழக்கில் அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் ஆம் ஆத்மி மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. நீதித்துறை வரலாற்றில், மோசடி வழக்கில் அரசியல் கட்சி மீது குற்றம் சாட்டப்படுவது இது முதல் முறையாகும். டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்களான முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அக்கட்சி எம்.பி., சஞ்சய் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து டில்லி முதல்வர் கெஜ்ரிவாலையும் கைது செய்தது. இநத வழக்கில் ஜூன் 1 வரை அவருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஏழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில் டில்லியின் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் எட்டாவதாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி மற்றும் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மீதும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. கெஜ்ரிவால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவது இது முதல்முறையாகும்.

தீர்ப்பு ஒத்திவைப்பு

இந்நிலையில், மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை தன்னை கைது செய்ததை எதிர்த்து கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இதன் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பை நீதிமன்றம் ஒத்தி வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ananth
மே 17, 2024 22:24

கெஜரிவால் மற்றும் பிஜேபி யின் எதிரணியில் உள்ள அனைத்து தலைவர்களுக்கும் ஒரு கேள்வி? பொதுவாக தேர்தலில் ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்பவர்கள், நாங்கள் வெற்றி பெற்றால் இந்திய மக்களுக்கு இதையெல்லாம் செய்வோம், இப்படியெல்லாம் நடப்போம் என்று வாக்கு கேட்பார்கள் ஆனால் இம்முறை, எதிரணியில் உள்ள, நீங்களும், உங்கள் உறவினர்களும், நண்பர்களும் ஜெயிலுக்கு போகக்கூடாது எனில், எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என வெளிப்படையாக கூறி பிரச்சாரம் செய்கிறீர்கள் இது என்ன மாதிரியான ஜனநாயகம்? மக்களாகிய நாங்கள் ஓட்டு போடுவது நாட்டுக்கு என்ன நல்லது எல்லாம் நடக்கும் என்பதற்காகத்தான் எதிரணியின் ஒட்டு மொத்த பிரச்சாரத்தில் நாட்டு நலம் எங்கே உள்ளது?உங்கள்எதிரணியின் உள்ள நபர்களின் தனிப்பட்ட விஷயங்களுக்காக மக்கள் ஓட்டு போட வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் இதை வெளிப்படையாகவும் சொல்கிறீர்கள் மக்களை முட்டாள்கள் என நினைக்கிறீர்கள் நிச்சயம் உங்களை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் வாழ்க பாரதம் வெல்க மக்கள்சக்தி


தாமரை மலர்கிறது
மே 17, 2024 19:18

ஒரு ஊழல் முதல்வருக்கு தூக்கு தண்டனை கொடுத்தால், மற்ற முதல்வர்களுக்கு ஒரு பாடமாக அமையும் தேர்தலுக்கு பின் ஊழல் கெஜ்ரி மற்ற முதல்வர்களுக்கு ஒரு பாடமாக அமைவார்


GMM
மே 17, 2024 18:45

ஆம் ஆத்மி கட்சி மீது குற்றப்பதிரிக்கை மத்திய அமலாக்க துறையை பாராட்ட வேண்டும் தேர்தல் ஆணையம் வாக்காளர், வேட்பாளர் மற்றும் கட்சி அங்கீகாரம் வழங்க தன் கருத்தை முன் வைக்க வேண்டும் தமிழக விஞ்ஞான ஊழலை வெற்றி கண்ட கெஜ்ரிவால் ஒரு அரசியல் ஊழல் ஊற்றுக்கண் ஆம் ஆத்மி கட்சியில் நல்லவர்கள் உடன் பதவி விலகி, சமூக அந்தஸ்தை பெற்று கொள்ள வேண்டும் மத்திய அரசு ஊழல் இல்லாமல் இருந்தால் மட்டும் போதாது, ஊழல் வாதிகள், தேச விரோதிகளை ஒடுக்க வேண்டும்


Indhuindian
மே 17, 2024 18:26

ஆம் ஆத்மி கட்சி குற்றத்தில் கூட்டாளின்னா அவங்க கட்சிய தேர்தல் கமிஷன் அங்கீகாரம் திரும்ப எடுத்துப்பாங்களே அப்போ வேறே ஒரு கட்சி ஆரம்பிக்கலாம் அப்படி செஞ்ச இப்போ இருக்கற தொடப்பக்கட்டை சின்னத்துக்கு பதிலா அருந்த செருப்பை சின்னமா வெச்சிக்கோங்கோ


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை