உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையில் சண்டை: ராகுல்

இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையில் சண்டை: ராகுல்

புதுடில்லி: லோக்சபா தேர்தல் என்பது இரு சித்தாந்தங்களுக்கு இடையே நடக்கும் யுத்தம் என காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார். இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: லோக்சபா தேர்தல் என்பது இரு சித்தாந்தங்களுக்கு இடையே நடக்கும் யுத்தம். ஒரு பக்கம் இந்தியாவை எப்போதும் ஒருங்கிணைத்த காங்கிரசும், இன்னொரு பக்கம் மக்களைப் பிரிக்க முயல்பவர்களும் இருக்கிறார்கள்.நாட்டை பிளவுபடுத்துபவர்களின் பக்கம் நின்றவர்கள் யார்? நாட்டின் சுதந்திரத்திற்காகவும், ஒற்றுமைக்காகவும் நிற்பவர்களுடன் கைகோர்த்தது யார்? . வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது ஆங்கிலேயர்களுடன் நின்றவர் யார்?.

பிளவுபடுத்தும் சக்தி

இந்தியாவின் சிறைகள் காங்கிரஸ் தலைவர்களால் நிரப்பப்பட்டபோது, ​​நாட்டைப் பிளவுபடுத்தும் சக்திகளுடன் மாநிலங்களில் ஆட்சியை நடத்துவது யார்? என்பது நமக்கு தெரியும். அரசியலுக்காக பொய்களை அள்ளி வீசுவதால் வரலாற்றை மாற்றிவிட முடியாது. இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Nagarajan S
ஏப் 10, 2024 19:52

எழுபத்துஐந்து ஆண்டுகளுக்கு மேலான வரலாறை வைத்துக்கொண்டு தற்போதைய செயற்கை நுண்ணறிவு ஆர்டிபிசியால் இன்டெலிஜெண்ட் காலத்தில் கதை அளந்தால் மக்கள் நம்பி காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டு போடுவார்களா?


A Viswanathan
ஏப் 10, 2024 19:33

அது இந்திய தேசிய காங்கிரஸ்.இப்போது உள்ளது இத்தாலி காங்கிரஸ்.


ஆரூர் ரங்
ஏப் 10, 2024 19:32

தனி திராவிட நாடு கேட்ட கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் நீங்க இப்படி ரீல் சுத்தக் கூடாது. பஞ்சாபில் பிரிவினை பயங்கரவாதி பிந்தரன்வாலேவை தூண்டிவிட்டு வளர்த்தது உங்க பாட்டி. இப்போது கூட பாகிஸ்தான் பிரிவினைக்கு காரணமான முஸ்லிம் லீக்கின் கொடியை மட்டுமே காட்டி வயநாட்டில் பிரச்சாரத்தை நடத்துகிறீர்கள்.


தாமரை மலர்கிறது
ஏப் 10, 2024 18:54

வெள்ளைக்காரர்களுடன் நேரு கொஞ்சிக்கொண்டிருந்தபோது, ஆர் எஸ் எஸ் காரர்கள் எதிர்த்து போராடிக்கொண்டிருந்தார்கள் அதனால் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது காந்தியால் தான் நேருவிற்கு பிரதமர் பதவி கிடைத்தது வீர் சாவர்க்கர் மற்றும் பாலகங்கா திலகர் பிரதமர் பதவியை விட்டுக்கொடுத்தார்கள்


பேசும் தமிழன்
ஏப் 10, 2024 18:13

ஆமாம்.... நாட்டை வெறுக்கும் உங்களுக்கும்.... நாட்டை நேசிக்கும் நாட்டு மக்கள் எங்களுக்கும் இடையே நடக்கும் சண்டை.... இதில் மக்கள் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்.... மக்களின் சார்பாக பிஜெபி வெற்றி பெறும்.


Godfather_Senior
ஏப் 10, 2024 17:47

ஆஹா சித்தமே இல்லாதவன் சித்தாந்த்ததை பற்றி பேசுகிறான்


கண்ணன்
ஏப் 10, 2024 17:45

ஆம்- நாட்டை எப்படியேனும் கொள்ளையடிக்க வேண்டும்- அதற்குப் பொய்களையும் இலவச உறுதிகளையும் அள்ளிவிடவேண்டும்- இது பழமையான புளித்த பெருச்சாளி சித்தாந்தம் - நாட்டை ஒரு வல்லரசாக மாற்றி எல்லோரையும் அரவணைத்துச் செல்லவேண்டும்- இது இன்று தேவையான சித்தாந்தம்


மோகனசுந்தரம்
ஏப் 10, 2024 17:12

ராகுல் சித்தாந்தம் வேண்டாம் நாட்டை எவ்விதம் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வோம் என்பதை பற்றி பேசு.ஜாதி கணக்கெடுப்பு சித்தாந்தம் இதெல்லாம் தேவையில்லாத வேலை.நல்ல ஒரு தலைவனாக நீர் நடந்து கொண்டால் அது நாட்டிற்கு நல்லது.


Kannan M
ஏப் 10, 2024 16:52

Yes, one is corrupted , unfit and family politics and another dynamic , clean and on the basis of qualification models


Rpalnivelu
ஏப் 10, 2024 16:26

கொள்கையா அல்லது மாபியா கொள்ளையா?


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி