உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹா.,மேல்சபை தேர்தல்: காலை வாரிய காங்., எம்.எல்.ஏ.க்கள்

மஹா.,மேல்சபை தேர்தல்: காலை வாரிய காங்., எம்.எல்.ஏ.க்கள்

மும்பை: மஹாராஷ்டிராவில் நடந்த சட்டசபை மேல்சபை தேர்தலில் பா.ஜ., சிவசேனா, அஜித்பவார் கட்சி கூட்டணி பெரும்பான்மை பெற்றது.இம்மாநில மேல்சபையில் 11 இடங்களின் பதவிகாலம் வரும் 27-ல் நிறைவு பெறுகிறது. இதையடுத்து காலியாக இருந்த 11 இடங்களுக்கு இன்று (12.07.2024) தேர்தல் நடந்தது. மொத்தம் 274 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டளித்தனர். இதில் 9 இடங்களில் பா.ஜ., 5 இடங்களிலும், ஏக்நாத் ஷிண்டே சிவசேனா, 2 இடங்களிலும், அஜித்பவாரின் தேசியவாத காங், 2 இடங்களிலும் வெற்றி பெற்றது. எதிர்கட்சி கூட்டணியான எம்.வி.ஏ. 2 இடங்களில் வெற்றி பெற்றது.இம்மாநிலத்திற்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் பா.ஜ., சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே ) கூட்டணி கை ஓங்கியுள்ளதால், இக்கூட்டணி உற்சாகமடைந்துள்ளது.எனினும் பா.ஜ., சிவசேனா கூட்டணி 9 இடங்களில் பெற்ற வெற்றிக்கு காங்.,, கட்சி எம்.ஏ.க்கள் கட்சி மாறி ஓட்டளித்ததே காரணம் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

தாமரை மலர்கிறது
ஜூலை 13, 2024 00:45

காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவர்கள் கட்சியின் மீதே நம்பிக்கை இல்லை. அதனால் தான் பிஜேபி கூட்டணிக்கு ஒட்டு போடுகிறார்கள்.


ஆரூர் ரங்
ஜூலை 12, 2024 22:03

கடாகட்டும் ஜெயகடாவும் தனித்தனியாக பிறந்த இரட்டையர்கள்


வாய்மையே வெல்லும்
ஜூலை 12, 2024 21:12

கடாகட்டு கமறுக்கட்டு டாகாலடி ஆளு கோச்சுக்க போறாரு அப்பு


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை