வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நக்சலிசம் ஒழிக்கப்பட வேண்டும்
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், மாவோயிஸ்டுகள் 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.ஜார்க்கண்ட் மாநிலம், பொகாரோ மாவட்டத்தில் உள்ள லூகு மலைப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கிய இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் போலீசாருடன், பாதுகாப்பு படையினர் இணைந்து சோதனை நடத்தினர். பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vsjwuzgo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், மாவோயிஸ்டுகள் 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதால், பாதுகாப்பு படையினர் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.8 பேர் உடல்கள் மீட்பு
இது குறித்து ஜார்க்கண்ட் டி.ஜி.பி., கூறியதாவது: பொகாரோ மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் ரூ.1 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் விவேக் கொல்லப்பட்டார். இதுவரை மாவோயிஸ்டுகள் 8 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, என்றார்.
நக்சலிசம் ஒழிக்கப்பட வேண்டும்