வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நடுத்தர வர்க்க குடும்பங்கள், பணக்காரர்களின் ஆடம்பர திருமண விழாக்களை பின்பற்றுகின்றன. மூன்று மாத வருமானம் பணக்காரர் விட்டு கல்யாணம் அவருக்கு சிரமம் இல்லை. நடுத்தர வர்க்க கல்யாணம் 10 முதல் 20 வருட உழைப்பு. கடைசியில் புகழ் பணக்காரனுக்கே போய்சேருக்கிறது. நடுத்தரனுக்கு கல்யாண புகழ் சேருவதில்லை.
வீட்டிலோ அல்லது கோயிலிலோ திருமண விழா நடக்கவேண்டும். இருவீட்டார் தலா 25 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும். அக்கம்பக்கத்தார், நண்பர்கள் எண்ணிக்கையும் தலா 25 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆக மொத்தம் நூறுபேர்களுக்கு மிகாமல் இருத்தல் சிறப்பு. ரிசப்ஷன், சங்கீத், மெல்லிசை, மாப்பிள்ளை ஊர்வலம் போன்றவை அறவே ஒழிக்கப்பட வேண்டும். அளவுக்கு மீறிய மெகந்தி, மேக்கப், போட்டோ ஷூட், மேடை அலங்காரம், பஃபே வகை உணவுகள் போன்ற அசிங்கங்கள் நிறுத்தப்பட வேண்டும். இதுபோன்ற தேவையற்ற செலவுகளுக்காகும் பணத்தை மகளின் பெயரில் டெபாசிட் செய்யலாம், அல்லது பெற்றோர் மிச்சம் பிடிக்கலாம். குடும்பத்தின் பொருளாதார நிலையை, எதிர்கால பொருளாதார தேவையை உணர்ந்து மணமக்கள் பெற்றோருடன் ஒத்துழைக்க வேண்டும். பெற்றோர் 20-30 ஆண்டுகளாக சேமித்த பணத்தை கண்டவர்களுக்கு வாரியிறைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. மாறுவோம், மாற்றுவோம்.
நம் தமிழ்நாட்டிலும் ஒரு சாதி இருக்கிறது. நகரத்தார் நாட்டுக்கோட்டை செட்டியார். இன்றும் லட்சங்களையும் தங்க வைர நகைகளையும் வரதட்சிணையாக கேட்கும் இந்த சாதியை சார்ந்த ஆணை பெற்ற பெற்றோர்கள். ப சிதம்பரம் போன்ற தலைகள் இதை பற்றி வாய் திறப்பதில்லை.
காலத்திற்கேற்ற அருமையான யோசனை. தமிழகத்திலும் வரவேண்டும். மண்டபம், சாப்பாட்டு செலவே பல லட்சம் ஆகின்றது. திருமண செலவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சமுதாயக்கூடங்களில் திருமணம் நடத்தினால் செலவு குறையலாம். பெண்ணை பெற்றோர் திருமண செலவுகட்காக நிலத்தை விற்கச் சென்ற போது அதை வஃக்பு வாரியம் ஆக்ரமித்துள்ளதால் தடை. சோகமாக நிகழ்வு.
நம்பி வந்த ஒரு செல்லமான பெண்ணை இப்படி கொன்று விட்டான்களே கயவர்கள் எப்படி இந்த கொடுர குணம் வருகிறது ராட்சதர்கள் நினைத்து கூட பார்க்க முடியாத கொடுமை கடவுளே