உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி.,யில் நடந்த திருமண மோசடி: அரசு அதிகாரிகள் உட்பட 15 பேர் கைது

உ.பி.,யில் நடந்த திருமண மோசடி: அரசு அதிகாரிகள் உட்பட 15 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உ.பி., அரசின் உதவித்தொகையை பெறுவதற்காக போலி திருமணம் செய்து வைத்த விவகாரத்தில் 2 அரசு அதிகாரிகள் உட்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.உ.பி., மாநிலம் பாலியா மாவட்டத்தில் எம்.எல்.ஏ., கேட்கி சிங் முன்னிலையில், ஜன.,25ம் தேதி 568 ஜோடிகளுக்கு கூட்டுத் திருமணம் நடந்தது. இந்த கூட்டுத்திருமண நிகழ்வில் பங்கேற்கும் ஜோடிகளுக்கு ரூ.51 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்து இருந்தது. இந்த நிகழ்வு முடிந்ததும், சமூக வலைதளங்களில் வைரலான திருமண வீடியோக்கள் மூலம் மோசடி நடந்தது அம்பலமானது.இந்த கூட்டுத்திருமண நிகழ்ச்சிக்கு போதிய ஜோடிகள் கிடைக்காததால், ஆண்கள் சிலர் மணமகள்கள் போல் முகத்தை மறைத்து ஆடையணிந்து வந்திருந்தது தெரியவந்தது. மேலும், திருமணமான பலரை பணம் கொடுத்து அழைத்து வந்து புதிய திருமண ஜோடிகள் போல் நடிக்க வைக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. பல பெண்கள் ஜோடி இல்லாமல் அவர்களே மாலையை தாங்களே அணிந்து கொண்டதும் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.இந்த மோசடியை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 அரசு அதிகாரிகள் உட்பட 15 பேரை கைது செய்தனர். அரசு உயர் அதிகாரிகள், மோசடி தெரியவந்ததும் 3 பேர் கொண்ட அதிகாரிகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதுவரை யாருக்கும் நிதியுதவி அளிக்கப்படவில்லை எனக் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

D.Ambujavalli
பிப் 05, 2024 06:36

ஏற்கெனவே திருமணம் ஆனவர்கள், செட் அப் ஜோடி எல்லாம் புதிதில்லை அங்கு முகம் மறைக்கும் முறை உள்ளதால். ஆண்களுக்கும் அடித்தது யோகம்


Ramesh Sargam
பிப் 05, 2024 00:04

முதல்வர் யோகி ஆதித்தியநாத்துக்கு இந்த விஷயம் தெரிந்தால், அந்த மோசடி அரசு அதிகாரிகளை என்கவுண்டர் செய்திருப்பார். உடனே அவருக்கு இந்த மோசடியைப்பற்றி தெரிவியுங்கள்.


Indian
பிப் 05, 2024 09:34

யோகி ஆதித்யநாத்தும் இந்த நிகழ்ச்சியை டீவி யை பார்த்துதான் தெரிந்து கொண்டார் போலும்


LAX
பிப் 04, 2024 23:52

இதெல்லாம் தமிழகத்தில் சகஜம்.. கைது கிடையாது.. மோசடிகள்..


K.Ramakrishnan
பிப் 04, 2024 23:32

இது போல தமிழ்நாட்டில் நடந்திருந்தால் சும்மா இருப்பாரா அண்ணாமலை... எடப்பாடி,ஜெயக்குமார், சீமான் வாய்கள் தான் சும்மா இருக்குமா? கிழித்து தொங்க விட்டிருப்பார்கள். உ.பி. யோகியை கண்டிக்கிற திராணி இருக்கிறதா?


KavikumarRam
பிப் 05, 2024 10:46

அங்கு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாரும் நடந்தது சரி என்று முட்டுக்கொடுக்கவில்லை.


அப்புசாமி
பிப் 04, 2024 22:50

வடக்ஸ் இங்கே பஞ்சம் பொழைக்க வந்து நம்ம டெக்னிக்கையெல்லாம் கத்துக்கிட்டு போயுடறாங்க...


தமிழ் மைந்தன்
பிப் 04, 2024 21:31

உபிக்கள் அங்கேயும் சென்றுள்ளது.....


ஆரூர் ரங்
பிப் 04, 2024 20:16

ஏற்பாடு வருத்தப்படாத வாலிபர் சங்கமா? அப்போ???????? புஷ்பா புருஷன் இருக்காரா?


கனோஜ் ஆங்ரே
பிப் 06, 2024 19:38

அரசையே அரசு அதிகாரிகள் ஏமாத்தியிருக்கானுங்க... ஆணுக்கு ஆணுக்கும் திருமணம் பண்ணி வச்சி கட்டிங் சம்பாரிச்சிருக்கானுங்க... வெட்கமாயில்ல,


அப்புசாமி
பிப் 04, 2024 19:48

முன்னாடியெல்லாம் இதுமாதிரி விஷயங்களில் உ.பிஸ் வழிகாட்டுவாங்க. இப்போ உ.பி வழிகாட்டுது.


panneer selvam
பிப் 04, 2024 19:29

It is not uncommon for any government social charity scheme , fraud happens with the active participation of local officials . Eradication is difficult , but it can be minimized with severe punishment to erring officials . Yogi is right in punishing those officials where in Tamilnadu it shall be hidden with the assistance of friendly medias .


G Mahalingam
பிப் 04, 2024 19:09

திராவிட கட்சிகளிடம் பாடம் கற்று கொண்டு இதை போல் செய்ய வேண்டும். அனுபவம் இல்லாத பாஜக அரசு


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை