உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆண்களுக்கு சேலை உடுத்தி 100 நாள் வேலையில் மோசடி

ஆண்களுக்கு சேலை உடுத்தி 100 நாள் வேலையில் மோசடி

யாத்கிர் : கர்நாடகாவில் நடந்த ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணியாற்றியதாக, சேலை அணிந்து ஆண்கள் போஸ் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, மாவட்ட பஞ்சாயத்து அதிகாரி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.கிராமப்புற மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும், வேலை தேடி வெளியூர் செல்வதைத் தவிர்க்கவும், மத்திய அரசு, மஹாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

ரூ.370 உயர்வு

இதில், நாள் ஒன்றுக்கு 349 ரூபாய் வழங்கப்பட்டு வந்த கூலித்தொகை நடப்பாண்டு ஏப்., 1 முதல், 370 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.இத்திட்டத்தில், கர்நாடக மாநிலம், யாத்கிர் மாவட்டம், மல்தார் கிராமத்தில் சன்னலிங்கப்பா என்பவரின் பண்ணை அருகில் கால்வாய் அமைக்கும் பணி நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள் என பலரும் ஈடுபட்டிருந்தனர்.இந்த பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களின் குழு படம், அரசின் என்.எம்.எஸ்., எனும் தேசிய கண்காணிப்பு அமைப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இந்த படத்தை பார்த்த அதிகாரிகள், சேலை அணிந்திருந்த நான்கு பெண்களின் தோற்றத்தில் வித்தியாசம் இருந்ததை கவனித்தனர்.அந்த படத்தை உற்றுப் பார்த்தபோது, அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில், அந்த நான்கு பேரும் சேலை உடுத்தியிருந்த ஆண்களாகும்.

சஸ்பெண்ட்

இந்த படம் சமூக வலைதளங்களில் பரவியது. ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணத்தில் மோசடி நடந்ததா என்ற சர்ச்சை எழுந்தது.இதுகுறித்து, மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி லாவிஷ் ஓராடியா கூறுகையில், ''இச்சம்பவம் பிப்ரவரியில் நடந்துள்ளது. இது தொடர்பாக வந்த புகாரை அடுத்து விசாரணை நடத்தப்பட்டது. ''முறைகேட்டில் ஈடுபட்ட பஞ்சாயத்து அதிகாரி வீரேஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நரேகா திட்டத்தின் கீழ், இதுவரை பணம் எதுவும் விடுவிக்கப்படவில்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

பேசும் தமிழன்
ஏப் 09, 2025 19:13

100 நாள் வேலை திட்டம் எந்த லட்சணத்தில் உள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணம்..... இங்கே நம்ம ஆட்கள் வேற 100 நாள் வேலை திட்ட ஒன்றிய அரசு பணம் கொடுக்கவில்லை எ‌ன்று‌ கூறுகிறார்கள்.... அது என்ன என்ன கதையோ ???


Kumar Kumzi
ஏப் 09, 2025 11:43

இதான்யா ஓங்கோல் துண்டுசீட்டு விடியலின் திருட்டு திராவிஷ ஊழல் மாடல் ஹீஹீஹீ


Mecca Shivan
ஏப் 09, 2025 10:36

திராவிடமும் காங்கிரஸும் ஒன்றோடு ஒன்று கலந்தவை


sankar
ஏப் 09, 2025 10:20

ஊழல் & சுருட்டல் மட்டுமே இந்த திட்டத்தின் அடிப்படை


KRISHNAN R
ஏப் 09, 2025 09:39

அடி ஆத்தி..நூதனமா இருக்கு


S.V.Srinivasan
ஏப் 09, 2025 08:31

மத்திய அரசின் நல திட்டங்களில் ஏமாற்றி கொள்ளை அடிக்கும் இந்த கும்பல் உருப்படுமா.


sridhar
ஏப் 09, 2025 08:00

One of the worst schemes of our times , licensed loot of exchequer, taxpayer's money going down the drain. No public assets are d , no audit of expenses, no accountability at any level . Should be scrapped urgently.


அப்பாவி
ஏப் 09, 2025 07:44

எந்தத் திட்டம் கொண்டாந்தாலும் அதில் ஊழல் பண்ணுவோம்டா. ஊழல் பூமிடா இது.


VENKATASUBRAMANIAN
ஏப் 09, 2025 07:27

காங்கிரஸ் திமுக அரசுகள் இதை கவனிப்பதே இல்லை. தமிழ்நாட்டில் மஸ்டரில் ஊழல்.


Varadarajan Nagarajan
ஏப் 09, 2025 07:15

இந்த அளவிற்கு இல்லையென்றாலும் தமிழ்நாட்டிலும் அதிகஅளவில் முறைகேடுகள் நடைபெறுகின்றது. முறைகேடுகளை தடுக்க ஜியோ டேக் முறையில் பயனாளிகளின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யும் முறையை கொண்டுவந்தார்கள். எனவே புகைப்படம் மட்டும் எடுத்துக்கொண்டு வேலைக்கே வராமல் இருப்பது, வேலையே செய்யாமல் ஓய்வெடுப்பது போன்றவைகள்தான் நடக்கின்றது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை