மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 6,000 பேர் பணிநீக்கம்!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
புதுடில்லி: மைக்ரோசாப்ட் நிறுவனம் 6,000க்கும் அதிகமான பணியாளர்களை உடனடி பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.செயற்கை நுண்ணறிவில் கூடுதல் முதலீடு செய்ய வேண்டியுள்ளதால், பணிநீக்கம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. உலகெங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு 2.28 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். இதில் கிட்டத்தட்ட 3 சதவீதம் பேரை நிறுவனம் தற்போது பணி நீக்கியுள்ளது.மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு அமெரிக்காவில் மட்டும் 1.26 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். இந்தியாவில் கிட்டத்தட்ட 20,000 பேர் பணியாற்றுகின்றனர். எனினும், இந்தியாவில் உள்ள பணியாளர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனரா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.