உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வீக்கான பிரதமர் மோடி! சொல்றது யாருன்னு பாருங்க

வீக்கான பிரதமர் மோடி! சொல்றது யாருன்னு பாருங்க

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா; 3வது முறையாக பிரதமராகி உள்ள மோடி தற்போது வலிமை, புகழ் ஆகியவை குறைந்து காணப்படுகிறார் என்று தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறி உள்ளார்.தேர்தல்களில் வெற்றி பெற தேவையான வியூகங்களை வகுப்பதில் வல்லவராக அறியப்படும் பிரசாந்த் கிஷோர் புதிய அரசியல் கட்சியை நாளை(அக்.2) தொடங்குகிறார். காந்திய வழியில் தமது அரசியல் பயணம் இருக்கும் என்று கூறி உள்ள அவர், தமது கட்சிக்கு ஜன் சுராஜ் என்று பெயர் வைத்துள்ளார்.இந் நிலையில் நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலைகள் குறித்து பல்வேறு கருத்துகளை வெளியிட்டு உள்ளார். அவர் கூறி இருப்பதாவது; 3வது முறையாக பதவி வகித்து வரும் பிரதமர் மோடி வலிமை குறைந்து காணப்படுகிறார். அவருக்கான புகழ் குறைந்துவிட்டது. அவரின் அரசியல் செயல்பாடுகள் கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் பார்த்துவிட்டனர். எனவே அவரின் புகழ் குறையும் என்று முன்னரே கூறி இருக்கிறேன்.2014ம் ஆண்டு தேர்தலில் பீகாரில் 30 தொகுதிகளும், 2019ம் ஆண்டு தேர்தலில் 39 தொகுதிகளிலும் பா.ஜ.வை மக்கள் வெற்றி பெற வைத்தனர். இந்த முறை அவர்கள் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்றனர். ஆனால் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துவிட்டதா என்பதை பார்க்க வேண்டும். அடுத்த இரண்டு அல்லது இரண்டரை ஆண்டுகளில் 9 மாநிலங்களில் தேர்தல் நடக்கிறது. அதன் முடிவுகள் பா.ஜ.,வுக்கு எதிராக இருந்தால் அரசின் ஸ்திரத்தன்மை மீது கேள்விகள் எழும். காங்கிரசை பொறுத்த வரையில் முன்பை விட அக்கட்சி தற்போது முன்னேற்றமான பாதையை நோக்கி செல்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் ராகுல் உழைத்திருக்கிறார். எனவே அதற்கான பலன்களை பெற்று வருகிறார். ஆனால் ஒரு தலைவராக அவர் பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகமாக உள்ளது. இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

RAAJ68
அக் 01, 2024 22:02

மூன்றாவது முறை நாங்கள் ஆட்சி கட்டிலில் அமரும்போது திமுக என்ற கட்சியை இருக்காது முற்றிலும் அழிக்கப்படும் என்று வீர வசனம் பேசிய மோடி இன்று ஸ்டாலின் பக்கம் சாய்ந்து ஜால்ரா அடித்துக் கொண்டுள்ளார். ஊழல்வாரிய செந்தில் பாலாஜிக்கு மீண்டும் பதவிப்பிரமாணம் செய்து வைக்க கவர்னர் ரவி அவர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


venugopal s
அக் 01, 2024 21:18

நம்ம நரசிம்ம ராவ் எவ்வளவோ பரவாயில்லை என்று ஆக்கி விட்டார்!


என்றும் இந்தியன்
அக் 01, 2024 17:57

வீக்கான பிரதமர் மோடி. இதோ பாருங்கள் அதன் ருசு 1 ராகுல் காந்தி வெளிநாட்டிற்கு சென்று இந்தியாவை எவ்வளவு கேவலம் செய்ய வேண்டுமோ அவ்வளவு கேவலம் செய்கின்றார் அதற்கு எடுத்த நடவடிக்கை என்ன 2 கேவலமான ஒன்றிய அரசு என்று சொல்லும் ஒன்றிய மாவட்ட அரசு திருட்டு திராவிடத்தின் மீது எடுத்த நடவடிக்கை என்ன 3 கர்நாடக சித்தராமைய வீட்டு மனை ஊழல் அவர் மீது எடுத்த நடவடிக்கை என்ன இப்படி பலப்பல நிகழ்வுகளுக்கு நான் பிரதமராக இருந்திருந்தால் தவறு கண்டேன் சுட்டேன் சொத்து அரசு கருவூலத்திற்கு மாற்றம் என்று சட்டம் கொண்டு வந்து எல்லோரையும் நல் வழியில் பயணம் செய்ய வழி வகுத்திருப்பேன்


K.n. Dhasarathan
அக் 01, 2024 17:07

யார்சொன்னாலும் சொல்லாவிட்டாலும் மோடி ஒரு கோழையான பிரதமர், பாராளுமன்றம் வர பயம், எம். பி. க்கள் கேள்வி கேட்டால் பயம், நிருபர்களை சந்திக்க பயம், தனியாக மட்டும் தவில் வாசிப்பார், மேலும் கடந்த அத்து ஆண்டுகளில் செய்த் சாதனை என்ன ? பண மதிப்பிழப்பு படு மோசமான திட்டம், கருப்பு பணத்தை பிடிப்பேன் என்கிறார், இதுவரை என்ன பிடித்தார், ? அவர் விழுந்து விழுந்து கவனித்த m.p., u.p. மாநிலங்கள் முன்னேறியதா அதுவும் இல்லை, காஸ்மீர், மணிப்பூர் அமைதி பூங்காவா ? ஈவரும் போகலை, அமித் ஷா வும் போகலை, பிரச்சினை தீருமா , போவதற்கு பயம், eppadiyo தடுமாறி, மதம் பேர் சொல்லி ஆட்சி, அது ரொம்ப நாள் ஓடாது.


சாண்டில்யன்
அக் 01, 2024 16:33

TRIWEEKLY TRY WEEKLY TRY WEAKLY


Mettai* Tamil
அக் 01, 2024 15:25

அட பம்மறா ......அவர் மார்க்கெட்டிங் செய்தாலும் செய்யாவிட்டாலும் 2014 ல் , மூன்றாவது முறையாக பாரத பிரதமராக உள்ள மோடிஜி தான் வெற்றி பெற்றிருப்பார் .....பாரத பிரதமராக .....


Narasimhan
அக் 01, 2024 15:14

அதிலென்ன சந்தேகம். ஆட்சிக்கு வந்து பத்து வருடங்களாகிவிட்டன. ஊழல்வாதிகளை சிறைக்கு அனுப்புவேன் என்றார். ப சி ராஜா போன்றோர் இன்றும் பெயிலில் திரிகின்றனர்.


Sivagiri
அக் 01, 2024 14:01

ஆக ஆக , , நீயும் மோடியை பத்தி பேசி பிரபலாமா ஆகலாம்னு முடிவு பண்ணிட்ட ? . . . ஆக ஆக , இன்னிக்கு அரசியலில் காந்தியை பத்தி பேசிட்டே இருக்கணும் - ஆனா காந்தியா இருக்க கூடாது , சாராயம் , கஞ்சா , போதை , ஒழிப்பை பத்தி பேசிட்டே இருக்கணும் , ஆனா ஒளிச்சிட கூடாது , வறுமையை ஒழிப்போம்னு பேசிட்டே இருக்கணும் , ஆனா வறுமை இருக்கணும் , . . அதே போலத்தான் ,


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 01, 2024 13:45

2021 லும் ஆட்சி அமைக்காமல் போனால் கட்சி கரைந்துவிடும் என்ற நிலையில் தங்கள் எஜமானர்களுக்கும் இவர் தேவைப்பட்டார் என்பதை மறந்துவிட்டு டீம்கா கூலிப்படை ஒரு பிரியாணி பொட்டலத்துக்காக கருத்து போடுவது வேடிக்கை .... உண்மை என்னவென்றால் 2014 ல் பாஜக இவர் உதவியில்லாமலேயே ஆட்சியைப் பிடித்திருக்கும் ..... காரணம் அப்போது காங்கிரஸ் கூட்டணி அரசு மீது மக்கள் கடுங்கோபத்துடன் இருந்தார்கள் .. அதே போல தமிழகத்தில் 2021 லும் திமுக இவர் உதவியில்லாமலேயே ஆட்சியைப் பிடித்திருக்கும் ... அப்போது மக்கள் அதிமுக அரசு மீது கடுங்கோபத்துடன் இருந்தார்கள் ..... மக்களின் எண்ணத்தைப் புரிந்து கொண்டு காயை நகர்த்துவதில் வல்லவர்.....


saravan
அக் 01, 2024 13:31

என்னை கேட்டால் ஏமாற்றுபவன் அவ்வளவுதான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை