உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குழந்தை பிறப்பை தடுக்க முஸ்லிம்கள் "காண்டம்" பயன்படுத்துகின்றனர்: பிரதமருக்கு ஓவைசி பதில்

குழந்தை பிறப்பை தடுக்க முஸ்லிம்கள் "காண்டம்" பயன்படுத்துகின்றனர்: பிரதமருக்கு ஓவைசி பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: முஸ்லிம்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள் என பிரதமர் மோடியின் கருத்துக்கு, குழந்தை பிறப்பை தடுக்க முஸ்லிம்கள் அதிகம் 'காண்டம்' பயன் படுத்துகிறார்கள் என ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி பதில் அளித்துள்ளார்.ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரத்தில், நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறினர். அதிக குழந்தை பெற்றவர்கள் மற்றும் நாட்டில் ஊடுருவியவர்களுக்கு சொத்தைப் பகிர்ந்தளிப்பதில் உங்களுக்குச் சம்மதமா? என பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.

முஸ்லிம்கள்

இந்நிலையில், ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியதாவது: முஸ்லிம்கள் பெரும்பான்மை சமூகமாகிவிடும் என இந்துக்கள் மத்தியில் பிரதமர் மோடி அச்சத்தை விதைக்கிறார். எவ்வளவு காலம் முஸ்லிம்கள் பற்றி அச்சத்தை உருவாக்குவீர்கள்?. எங்கள் மதம் வேறு ஆனால் நாங்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்.

மக்கள்தொகை

முஸ்லிம்கள் அதிக குழந்தைகளை பெற்று கொள்கிறார்கள் என்று நீங்கள் ஏன் அச்சத்தை உருவாக்குகிறீர்கள்?. தரவுகளின் படி, முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த மக்கள்தொகை குறைந்துள்ளது. குழந்தை பிறப்பை தடுக்க முஸ்லிம்கள் அதிகம் 'காண்டம்' பயன்படுத்துகிறார்கள். இதைச் சொல்வதில் எனக்கு வெட்கமில்லை. இந்தியாவில் கருத்தடை சாதனங்கள் அதிகம் பயன்படுத்துவர்கள் முஸ்லிம்கள் தான். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Sathyan
மே 02, 2024 03:19

ஓவைசி என்றைக்கு உண்மையை சொல்லி இருக்கிறார், இவர் Aurangazebன் மறு உருவம் மனதெல்லாம் அவ்வளவு வஞ்சம்


M.S.Jayagopal
ஏப் 30, 2024 08:48

எந்த மதத்தினரும் தங்கள் மதத்தில் சொல்லப்பட்டு உள்ளவற்றை முழுமையாக கடைபிடிப்பதில்லை அது முடியாத காரியமும் கூட தங்களுக்கு சரிப்பட்டு வருவதை மட்டும் கடைபிடித்துவருவதுதான் நிதர்சனம் மதத்தில் சீர்திருத்தம் யாரும் செய்துவிடமுடியாதுஅதற்கு ஆதரவைவிட எதிர்ப்புகள் மிக வன்மையாக இருக்கும் சமுதாயத்தில் மத சீர்திருத்தங்கள் தானாகவும் நிதானமாகவும் நடந்துகொண்டுதான் உள்ளன


ஔரங்கசீப், ஓமன்
ஏப் 30, 2024 01:38

பாகிஸ்தான் ஜெய்சதுக்கு ஹைதரபாத்ல பட்டாசு வெடிச்சு கொண்டாடின கூட்டம் தான நீங்க... மோடியை எதிர்ப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.


Senthil K
ஏப் 29, 2024 22:44

முஸ்லிம்.. அனைவரும்.. காண்டம் பயன்படுத்தினால்... அப்புறம் எப்படி?? முஸ்லிம் குழந்தைகள் பிறக்குது?? குழப்பமா இருக்கே...


LION Bala
ஏப் 29, 2024 19:14

இன்றய காலகட்டத்தில் பல முஸ்லீம் குடும்பத்தினர் ஒரு மனைவி மற்றும் ஒன்று அல்லது இரு குழந்தைகளுடன் வாழ்வதையே விரும்புகின்றனர் பிறப்பு விகிதமும் குறைந்துள்ளது இந்திய தேசம் சாதிகள், மதங்கள், மொழிகள் ஆகியவற்றை கடந்து, வேற்றுமையில் ஒற்றுமையுடன் வாழும் மக்களைக் கொண்டுள்ளது ஆகவே அரசியல் கட்சிகள் வெறுப்பு அரசியல் செய்ய வேண்டாம் என்பது ஏற்புடையதாகும்


Someone
ஏப் 29, 2024 17:11

ha ha.. this guy Owaisi speaks without laughing ? ?.. using condoms they have 5-6 !!! they have to sue the condom company


theruvasagan
ஏப் 29, 2024 16:21

கருத்தடை சாதனங்களை பயன்படுத்த ஷரியத் அனுமதிக்கிறதா.


ஆரூர் ரங்
ஏப் 29, 2024 16:03

ஒவைஸி கம்பி கட்டுகிறார். வறுமைக்கு பயந்து குழந்தைப் பேற்றைத் தவிர்ப்பதை இஸ்லாம் சற்றும் ஏற்பதில்லை என்று படித்திருக்கிறேன். . என்னதான் சாதனங்களைப் பயன்படுத்தினாலும்,, ஒரு குழந்தை உருவாக வேண்டும் என இறைவன் விரும்பினால் எதனாலும் தடுக்க முடியாது (ஆதாரம் When Allah Ta'ala intends creating a child, nothing can stop him”. Mishkat, Pg.275, Qadeemi)


theruvasagan
ஏப் 29, 2024 17:41

ஆமாம். எதற்கு இத்தனை குழந்தைகள் என்று கேட்டால் அவை இறைவனின் கொடை என்றுதான் சொல்லுவார்கள்.


sasikumar
ஏப் 29, 2024 15:50

மக்கள் தொகை குறைந்தது உண்மை தான்


Dharmavaan
ஏப் 29, 2024 20:19

யாருடைய மக்கள் தொகை


Srinivasan Krishnamoorthi
ஏப் 29, 2024 15:34

ஒவாய்சி சொல்வது உண்மை பல மனைவிகள் உள்ளதால் எல்லோர் குழந்தைகளையும் வளர்க்க சங்கடப்படும் பொது அப்படி சில மனைவிகளிடம் உபயோக படுத்துவதுண்டு


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை