| ADDED : ஜன 31, 2024 12:42 AM
கிடப்பில் போட்டது ஏன்?தேர்தல் வரும் போது மக்களை பிளவுபடுத்த தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் போன்றவை கொண்டு வரப்படுகின்றன. இவ்வளவு நாள் இந்த சட்டங்களை பா.ஜ., கிடப்பில் போட்டிருந்தது ஏன்?ஆதிர் ரஞ்சன் சவுத்ரிலோக்சபா எம்.பி., ----காங்.,வாரிசு அரசியலுக்கு ஆபத்து!பா.ஜ., மூன்றாவது முறை ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகத்துக்கு ஆபத்து என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறிஉள்ளார். ஜனநாயகத்திற்கு ஆபத்து இல்லை. ஜனநாயக போர்வையின் கீழ் உள்ள வாரிசு அரசியல்வாதிகளுக்கு தான் ஆபத்து.சுதன்ஷு திரிவேதிராஜ்யசபா எம்.பி., ----- பா.ஜ.,மோடி மட்டுமே வெல்வார்!வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வால் 200 இடங்கள் கூட வெல்ல முடியாது. வரும் தேர்தலில் மோடி வெற்றி பெறுவார். அவர் கட்சி வெற்றி பெறாது என்பது என் கணிப்பு.சஞ்சய் ராவத்ராஜ்யசபா எம்.பி.,சிவசேனா உத்தவ் அணி