சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி விழா ஆரம்பம்
பாலக்காடு : பாலக்காடு சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி திருவிழா துவங்கியது.கேரள மாநிலம், பாலக்காடு சந்திரநகர் அருகே, சிருங்கேரி சாரதா பீடத்தின் கீழ் செயல்படும் சாரதாம்பாள் கோவில் உள்ளது.இங்கு ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.சிருங்கேரி சாரதா பீட ஜகத்குரு விதுசேகர பாரதி சுவாமி நவராத்திரி விழா நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழ் வெளியிட்டு ஆசீர்வாதம் அளித்தார்.நேற்று காலை, 8:30 மணிக்கு மகா அபிஷேகம், மாலை, 6:15 மணிக்கு கலச ஸ்தாபனம் நடந்தது.வரும் ஏழு நாட்களும், கணபதி ஹோமம், பால், பஞ்சாமிர்த அபிஷேகம், சகஸ்ரநாம அர்ச்சனை, துர்கா சப்தசதி பாராயணம், தம்பதி பூஜை, மகா தீபாராதனை, திரிசதி அர்ச்சனை, வேத கோஷங்கள் உடன், அம்பாள் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வைபவம் நடைபெறும்.வரும், 11ம் தேதி மதியம், 1:00 மணிக்கு சண்டி ஹோமம், சுஹாசினி பூஜை, பூர்ணாஹுதி நடக்கிறது. 12ம் தேதி காலை, 8:30 மணிக்கு சரஸ்வதி பூஜை, வித்யாரம்பம் நடக்கும். விழா நாட்களில் கோவில் வளாக கலையரங்கில் இசை நிகழ்ச்சிகள் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக குழு தலைவர் கரிம்புழா ராமன், அமைப்பாளர் வைத்தியநாதன் ஆகியோர் செய்துள்ளனர்.