வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அனைவருக்குமான பென்சன் திட்டம் கண்டிப்பாக தேவை. ஆனால் அது வேண்டுமானால் இணைந்து கொள்ளலாம் என்று இருக்க கூடாது. ஒவ்வொரு மாதமும் அனைத்து முதலாளியும் சம்பளத்தில் பத்து சதவீதத்தை கண்டிப்பாக பென்ஷன் திட்டத்தில் போடவேண்டும் என்று சொல்ல வேண்டும். பணமாக ஊதியம் பெறுவதற்கு தடை விதிக்க வேண்டும். அதற்காக தான் டிஜிட்டல் இந்தியா தேவைப்படுகிறது. பணத்தை ஒழித்தால், வரி வசூலிப்பது எளிதாக இருக்கும். மேலும் பல திட்டங்களை அமுல்படுத்த முடியும்.
நாட்டுல 4ல் 3 பேருக்கு நல்ல வேலை கிடையாது குழந்தை பிறந்த உடன் பென்சன் ஆரம்பிச்சு அந்த குழந்தையோட 20 வயசுல பென்சன் பணம் வரும்படி செய்தால் உங்களுக்கு புண்ணியமா போகும் சாமி அத வெச்சு அவன் உருப்பட்டுக்குவான்
முதலில் EPF பென்ஷன் பெறுபவர்களுக்கு குறைந்த பட்சம் ஓய்வூதியம் ₹ 1000 என்பதை 5000 என்ற அளவுக்கு உயர்த்துங்கள்.
யூனிவேர்சல் பென்ஷன் திட்டம். மக்கள் விருப்பம். அரசின் பங்கு இல்லை. அடுத்த ஆளும் ஊழல் கட்சி பராமரிப்பது கடினம். முதலில் 5 ஆண்டுகள் ஆளும் கட்சி 50 ஆண்டு திட்டம் போடுவதை நிறுத்துங்கள். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் காங்கிரஸ் கட்சி ஆயுள் வரை இருக்க வேண்டும். மக்களிடம் சேமிக்கும் பழக்கம் இல்லை. உழைக்கும் வர்க்கத்திடம் போதை பழக்கம். கடனில் பிழைப்பு. முடியாத போது இலவசம், மானியம். முடியும் போது திரும்ப வசூல் முறை. அரசு கருவூலம் எப்போதும் நிரம்பி இருக்க திட்டம் போடுங்கள்.
ஆமாங்க எசமான். படிச்சிட்டு வெளில வந்ததும் நல்ல பென்சன் 20 வயசிலிருந்தே குடுக்கற மாதிரி பண்ணுங்க. அதுக்கான பணத்தை பிறக்கும் போதே உருவ ஆரம்பிச்சுடலாம். பிரதான் மந்திரீக்கி பால் பச்சோம் பென்சன் யோஜனான்னு இந்தில பேர் வெச்சுரலாம்.
நம்ம பணத்தை வாங்கி விட்டு நம்மள நல்லா அலைய விடுவாங்க. வழக்கமான லஞ்சம் ஊழல் எல்லாமுமே உண்டு. பெரிய ஓடு ஒண்ணு வாங்கி வச்சுக்கணும்..
அமைப்பு சாரா தொழிலாளர்கள் மட்டும் அல்ல... சுய தொழில் sole proprietor செய்வோருக்கும் இது மிகவும் அவசியம்... கடந்த ஆண்டு வருமானம் IT returns ஐ பொறுத்து pension கு வரம்பு நிர்ணயிக்கலாம்... அப்பொழுது தான் அந்த நபர் அதே வாழ்க்கை தரத்தை retirement பிறகு வாழ முடியும்
யூ டி ஐ ல் நடந்ததை இன்றும் பலர் மறக்கவில்லை. நமது அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நமது மக்களை இலவு காத்த கிளி போல் ஆக்காமல் இருந்தால் சரி
நல்ல ஆலோசனை விரைந்து கொண்டு வர வேண்டியது, பாராட்டுக்கள்
மேலும் செய்திகள்
முன்னாள் ராணுவத்தினர் ஆலோசனை கூட்டம்
26-Feb-2025