உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாதவிக்கு பதவி நீட்டிப்பு இல்லை; செபி அமைப்பு தலைவர் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்பு

மாதவிக்கு பதவி நீட்டிப்பு இல்லை; செபி அமைப்பு தலைவர் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: செபி அமைப்பின் தற்போதைய தலைவர் மாதவிக்கு பதவி நீட்டிப்பு இல்லை. செபி தலைவர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.பங்குச்சந்தை கண்காணிப்பு அமைப்பான செபியின் தலைவராக மாதவி புரி இருந்து வருகிறார். கடந்த 1989ம் ஆண்டு ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் தனது பணியை தொடங்கிய மாதவி கார்ப்பரேட் பைனான்ஸ், பிராண்டிங், நிதிப்பிரிவு, கடன் பிரிவு ஆகியவற்றில் பணியாற்றி உள்ளார். இவரது பதவிக்காலம் வரும் பிப்ரவரி 28ம் தேதியுடன் முடிவடைகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=j38w9334&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவர் தன் பதவியை பயன்படுத்தி ஊழல் செய்வதாக சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியிருந்தனர். அதானி முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தவில்லை என்றும் மாதவி மீது காங்கிரஸ் குற்றம் சாட்டி இருந்தது. இத்தகைய சூழ்நிலையில், செபி தலைவர் பதவி தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் நபர் 5 ஆண்டுகளுக்கு 'செபி' தலைவராக செயல்படுவார் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தற்போதைய தலைவர் மாதவிக்கு பதவி நீட்டிப்பு இல்லை என்பது உறுதி ஆகி உள்ளது. செபி அமைப்பில் இதற்கு முன் தலைவராக இருந்த பலரும் பதவி நீட்டிப்பு பெற்றுள்ள நிலையில், மாதவிக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.செபி என்பது இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம். இந்த அமைப்பின் வேலை, இந்தியாவில் பங்குச் சந்தைகள், நிதிச் சந்தைகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவது ஆகும். மும்பையில் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு 1988ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பிற்கு தான் தற்போது தலைவர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தாமரை மலர்கிறது
ஜன 27, 2025 23:51

மாதவிக்கு பதவி நீட்டிப்பு கொடுக்க வேண்டும். மிகவும் நேர்மையாகவும் கண்ணியமாகவும் செபியை நடத்தி இந்தியாவின் பெருமையை நிலைநாட்டி உள்ளார். இவர் மீது அபாண்ட குற்றச்சாட்டுகளை எழுப்புவது காங்கிரஸ் வேண்டுமென்றே சீனாவுடன் சேர்ந்துகொண்டு செய்யும் சதிவேலை.


Narayanan Muthu
ஜன 27, 2025 20:22

எத்தனை விண்ணப்பம் வந்தாலும் அறிவியல் பூர்வமான ஊழலில் திளைக்கும் பாஜக அரசின் அடிவருடிக்குதான் பதவி கிடைக்கப்போகிறது. அவர் மட்டும் என்ன நேர்மையாகவா இருக்க போகிறார். இவர் மூலம் பாஜகவின் சொத்து மதிப்பு இன்னும் கூடத்தான் வழி வகுக்கும்.


naranam
ஜன 28, 2025 04:09

நம்ம துணை முதலமைச்சர் பதவி கொடுத்தது போலத் தானே!


Sudha
ஜன 27, 2025 16:23

இதற்கும் மாதவி மீதான விசாரணை க்கும் என்ன சம்பந்தம்? விசாரணை நடந்ததாக தெரியவில்லை. ஒரு கதை: "ஏண்டா தென்னைமரத்தில் ஏறின? " என்று கேட்டதற்கு "மாட்டுக்கு புல்லு புடுங்க " என்றானாம் ." தென்னை மரத்தில ஏதுடா புல்லு" என்று கேட்க, "அதான் இறங்கி வந்து கொண்டிருக்கிறேன் " என்றானாம்.


sankaranarayanan
ஜன 27, 2025 12:27

இதிலே ஊறியபோன கைதேர்ந்த நமது பசி ராஜ்ய சபா எம்பியாக இருந்தாலும் இந்தப்பதவிக்கு ஒரு விண்ணப்பம் போட்டு வைக்கலாமே


முக்கிய வீடியோ