உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம்

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம்

ஜெய்ப்பூர்: ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்,'' என ராஜஸ்தானில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஆவேசமாக பேசினார்.ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இன்று, கர்ணி மாதாவின் ஆசிர்வாதம் பெற்ற பிறகு நான் இங்கு வந்துள்ளேன். இன்று, ரூ.26,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து உள்ளேன். இந்த சந்தர்ப்பத்தில் நான் மக்களை வாழ்த்துகிறேன். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=959j1yeo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பாகிஸ்தானுக்கு நாம் பதிலடி கொடுத்து இருக்கிறோம். இந்தியாவுக்கு எதிரான நேரடி போரில் பாகிஸ்தானால் ஒரு போதும் வெற்றி பெற முடியாது. இந்தியாவுக்கு சொந்தமான தண்ணீரை பாகிஸ்தானால் பெறமுடியாது.

வெறும் 22 நிமிடங்கள் தான்!

பாகிஸ்தான் 9 பயங்கரவாதி முகாம்களை வெறும் 22 நிமிடத்தில் அழித்து இருக்கிறோம். நமது முப்படைகளின் சக்கரவியூகத்தால் பாகிஸ்தான் மண்டியிட்டுள்ளது. இந்தியர்களின் ரத்தத்துடன் விளையாடுவதற்கு பாகிஸ்தான் பெரும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். ஒவ்வொரு பயங்கரவாதத் தாக்குதலுக்கும் இந்திய பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பதை நிரூபித்துள்ளோம்.

பயப்பட மாட்டோம்!

அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு இந்தியா பயப்படப் போவதில்லை. பாகிஸ்தானின் ரஹீம் யார் கான் விமானப்படைத் தளம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, ஒவ்வொரு இந்தியரும் ஒரே குரலில் ஒன்றுபட்டு, பயங்கரவாதத்தை ஒழிக்கவும் கற்பனைக்கு அப்பாற்பட்ட தண்டனையை உறுதி செய்யவும் தீர்மானித்தனர்.

துணிச்சல்!

இந்திய ஆயுதப் படைகளின் துணிச்சலால் தான் இன்று நாம் வலுவாக நிற்கிறோம். எங்கள் அரசாங்கம் மூன்று படைகளுக்கும் சுதந்திரக் கரம் கொடுத்தது. மேலும் ஒன்றாக, முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தும் உத்தியை வகுத்தன. அது பாகிஸ்தான் சரண் அடைய வழி வகுத்தது. மோடியின் ரத்த நாளங்களில் ஓடுவது ரத்தம் அல்ல. கொதிக்கும் சிந்தூர் (குங்குமம்) தான் பாய்கிறது. மோடி இங்கே இருப்பதை பாகிஸ்தான் மறந்துவிட்டது. நான் நெஞ்சை நிமிர்த்தி, தலையை நிமித்து நின்று கொண்டிருப்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். அவர்களுடன் இனி எந்த வகையிலும் பேச்சு என்பதே கிடையாது. அப்படி பேசினால், அது அவர்கள் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பற்றியதாக பற்றி மட்டுமே இருக்கும்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

வழிபாடு

ராஜஸ்தானில் புகழ் பெற்ற கர்ணி மாதா கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

RAJ
மே 22, 2025 22:48

வேணு ...சிந்தூரி... தேசத்துரோகிகளே ... நாட்டைவிட்டு வெளியேறுங்கள்... . பஹ்ருட்டின் பாய் சொல்லத்தேவையில்லை ... அவர்கள் பாசம் பாயசம் எல்லா அங்கதான்.


Bahurudeen Ali Ahamed
மே 26, 2025 12:39

சகோ நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்று சரியாக புரியவில்லை, நான் நம்முடைய இராணுவத்தை பற்றி உயர்வாகத்தானே அதுவும் உண்மையைத்தான் கூறியுள்ளேன் தவறாக ஒன்றும் கூறவில்லையே


Sivagiri
மே 22, 2025 20:31

படு - படு-ன்னு சொல்லி கொடுமை படுத்துறான்- கேள்வி கேட்க - நடவடிக்கை எடுக்க ஒரு நாதியும் இல்லை - என்று இங்கே பெண்கள் கதறல் . . . அவர்களும் சிந்தூர் வைத்த பெண்கள்தான் . . . அதற்கு ஒரு ஆபரேஷன் எடுத்தால் நல்லது . . .


Saai Sundharamurthy AVK
மே 22, 2025 19:30

போர் என்று வந்தால் பாகிஸ்தான் நான்கு நாட்கள் கூட தாக்கு பிடிக்க முடியாத நிலைமை தான் உள்ளது. அதிலும் இப்போது கிரான ஹில்லாஸ் மலையின் அடியில் சுரங்கம் அமைத்து ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த அதன் அணு ஆயுத கிடங்கையே இந்திய விமனப்படை எப்படியோ கண்டு பிடித்து அழித்து விட்டிருக்கிறது. பாக்கிஸ்தானால் அடுத்த நூறு ஆண்டுகளுக்கு அதன் பக்கமே தலை வைத்து கூட படுக்க முடியாது. துருக்கியின் டுரோன்கள், சீன விமானங்கள், சீன ஆயுதங்கள், சீன ஏவுகணைகள் என பாகிஸ்தான் ஏவிய அனைத்தையும் இந்திய படைகள் துவம்சம் செய்திருக்கின்றன. இதனால், உண்மையில் பாகிஸ்தான் அலறியதை விட அமெரிக்கா தான் அலறி அழுதே விட்டது. காரணம், பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள், குண்டுகள் எல்லாம் எதுவும் இல்லை. எல்லாமே, அமெரிக்காவினுடையது தான். பாகிஸ்தான் நாடே அமெரிக்காவின் ஒரு பினாமி !! அவ்வளவு தான். அமெரிக்கா இதுவரை பாகிஸ்தானிடம் கொடுத்து வைத்திருந்த தனது மூன்று F-16 விமானங்களை ( ஒன்று ஏற்கனவே 2019 ல் அபிநந்தனிடம் இழந்தது ) இந்தியாவிடம் பறி கொடுத்துள்ளது. அமெரிக்கா வெளி உலகில் இந்தியாவுக்கு ஆத்ம நண்பன் தான் ஆனால் உள்ளுக்குள் துரோகி என்பதை இந்த சிந்தூர் ஆப்பரேஷன் நமக்கு உணர்த்தியிருக்கிறது. ரஷியாவும், இஸ்ரேலும் தான் நமக்கு உண்மையான அர்ப்பணிப்பு கொண்ட நண்பன் என்பதையும் உணர்த்தியிருக்கிறது. மொத்தத்தில் சிந்தூர் ஆப்பேரஷன் படு ஜோராக வெற்றியடைத்துள்ளது. இந்த அளவிற்கு நமது ராணுவத்தை வலிமையாக்கிய பெருமை இந்தியாவின் தவப்புதல்வன் வீர சிவாஜி உருவத்தில் பிறந்திருக்கும் நமது பிரதமர் திரு.நரேந்திர மோடியையே சாரும். ஜெய் மோடிஜி ! ஜெய் ஹிந்த் !


P. SRINIVASAN
மே 22, 2025 17:56

உண்மை. சரியான பதிவு.


Makkalal Khouri
மே 22, 2025 17:49

பார்த்து வெடிச்சிட போகுது


சிந்தூரி
மே 22, 2025 17:34

யாரு சொல்லி பாதில நிறுத்தினீங்க?


RAVINDRAN.G
மே 22, 2025 16:39

தமிழ்நாட்டில் 40 எம் பி கள் எதுக்கு இருக்கிறார்கள். எத்தனை தடவை இவர்கள் ஜெயித்து இருப்பார்கள்.ஏதாவது பிரயோஜனம் இருக்கா என்பதை தமிழக மக்கள் ஒரு முறையாவது சிந்தித்து பார்த்து இருந்தால் ஏதாவது மாற்றம் நடந்து இருக்கும்.


Bahurudeen Ali Ahamed
மே 22, 2025 18:04

திமுக மட்டுமல்ல அதிமுக எம்பிக்களுக்கும் சேர்த்துதான் சொல்கிறேன் தமிழ்நாட்டை இந்த இரண்டு திராவிட காட்சிகள்தான் அதிகபட்சமாக ஆண்டது மக்களும் விரும்பித்தான் தேர்ந்தெடுத்தார்கள் இதனால் என்ன கெட்டுவிட்டது இன்றும் நம் தமிழ்நாடு மற்ற மாநிலங்களைவிட எல்லாவிஷயங்களிலும் முன்னேறிய மாநிலமாகவே இருக்கிறது எந்த எம்எல்ஏக்களும் எம்பிக்களும் வானத்திலிருந்து குதித்து வரவில்லை மக்கள் சிந்தித்துதான் தங்களுக்கு யார் வேண்டுமென்று தேர்ந்தெடுக்கிறார்கள்


A.C.VALLIAPPAN
மே 22, 2025 16:38

are you educated person you will believe DMK bottle and biryani but you will not believe like Great person Modiji . better if you like better than india if you feel something avilable you can move. then you know the situation.


Balaa
மே 22, 2025 15:59

அது இன்டி கூட்டணி போல் பிய்த்துக்கொண்டு போய்விடும்


Bahurudeen Ali Ahamed
மே 22, 2025 15:18

அய்யா எப்பவுமே நமது இந்திய ராணுவம் இப்ப மட்டுமல்ல எப்பவுமே வலிமையாகவே இருந்துள்ளது இனிமேலும் அப்படிதான் இருக்கும்


J.Isaac
மே 23, 2025 11:31

அப்பாவிகளை கொன்ற அந்த பாவிகளை இன்னும் பிடிக்க முடியவில்லையே என்பது வேதனை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை