உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரஸ் ஆதரவு கடிதம் வரணும்; காத்திருக்கிறார் உமர் அப்துல்லா!

காங்கிரஸ் ஆதரவு கடிதம் வரணும்; காத்திருக்கிறார் உமர் அப்துல்லா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: '' காஷ்மீரில் ஆட்சி அமைக்க, காங்கிரஸ் ஆதரவு கடிதம் அளித்ததும், கவர்னரை சந்தித்து உரிமை கோருவேன்,'' என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா கூறினார்.காஷ்மீர் சட்டசபைக்கு நடந்த தேர்தலில், கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும் வெற்றி பெற்றது. தேசிய மாநாட்டு கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், உமர் அப்துல்லா, எம்.எல்.ஏ.,க்கள் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் 4 பேர் ஆதரவு கொடுத்து உள்ளனர். இதனால் அக்கட்சியின் பலம் 46 ஆக அதிகரித்து உள்ளது.இதனிடையே எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திற்கு பிறகு உமர் அப்துல்லா நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வராக பணியாற்ற வாய்ப்பு அளித்த எம்.எல்.ஏ.,க்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர காங்கிரசின் ஆதரவு கடிதத்திற்காக காத்து இருக்கிறோம். இது குறித்து அக்கட்சியுடன் பேச்சு நடக்கிறது. ஆதரவு கடிதம் கிடைத்த உடன் கவர்னரை சந்திப்போம். இன்று அல்லது நாளைக்குள் காங்கிரசின் ஆதரவு கடிதம் கிடைக்கும் என நம்புகிறோம்.காஷ்மீரில் ஆட்சி அமைத்ததும், மாநில அந்தஸ்து கேட்டு தீர்மானம் நிறைவேற்றுவோம். பிறகு டில்லி சென்று பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களை சந்தித்து பேசுவேன். அரசுக்கும், கவர்னருக்கும் இடையே முரண்பாடு ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. மாறாக மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை, மக்கள் நலனுக்காக பணியாற்ற அமைதியான ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். விரைவில் மாநில அந்தஸ்து கிடைக்கும் என நம்புகிறோம். எங்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மாநில அரசு அனைவருக்குமான அரசாக இருக்கும். இவ்வாறு உமர் அப்துல்லா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Lion Drsekar
அக் 11, 2024 11:59

இவர்களது முதல் எதிரி காங்கிரஸ் வரவில்லையென்றால் இவர்களது கூட்டாளிகள் அண்டை நாடுகள் கூட்டணிக்கு கடிதம் கொடுப்பார்கள் . பொதுவாக கூறுவார்கள் ஆடிய கால்கள்களும் தவறான கைகளும் சும்மா இருக்காது என்று, மற்ற நாட்டுக்கு கட்சிகள் கம்ம்யூனிஸ்ட், மாவோயிஸ்ட், போல் அண்டை எதிரி நாடுகளின் கட்சிகளும் இங்கு கட்சி துவங்கி எதிகாலத்தில் கூட்டணி வைத்தாலும் தேர்தல் கமிஷன் முதலில் இந்த பெயரை மாற்றி தேர்தல் துறை என்று அளிக்கவேண்டும், இந்த கமிஷன் என்றாலே , ஒருநபர் கமிஷன், போல்தான் இருக்கும் போல், இந்த ஒரு கமிஷனுக்கு ஒரு சேஷன் இருந்தார் பிறகு மீண்டும் கமிஷனாக மாறிவிட்டது, ஜாதியின் பெயரால் ,மதத்தின் இயன்றால் , காட்டு மிருகங்களின் பெயரால் , மக்களுக்கு ஒரு ஜாதிக்கு எதிராக செயல்படும் கோல்களைக் கொண்ட கட்சிகளுக்கு அங்கீகாரம் கிடையாது என்று சொல்ல திராணி இல்லாததால் இவைகள் கமிஷனாக இருக்கிறது, முதலில் பெயரை மாற்றி , தேர்தல் நேரத்தில் இரண்டு இடங்களில் போட்டியிடுவது, போன்றவற்றை தவிர்த்து தேர்தலில் போட்டியிட்டவர்கள் ஒருவர் இறந்தால் மறு தேர்தலுக்கு மக்கள் வரிப்பணத்தில் செலவு இல்லாமல் அவருக்கு அடுத்தபடியாக வந்த நபரை தேர்ந்தேடுத்து அந்த ஆட்சி உடையும் மன்னிக்கவும் முடியும் வரை மறுதேர்தலே நடக்கக்கூடாது என்று சட்டம் போடவேண்டும், தேர்தல் நேரத்தில் மற்ற மாநிலங்களில் உள்ளவர்களை பணியில் அமர்த்தவேண்டும், இங்கு தேர்தல் காலங்களில் பணிபுரியும் துறை எது என்று எல்லோருக்கும் தெரியும் அந்த துறைக்கு முன்னூறு காலங்களில் மிகவும் போற்றப்பட்ட மா மானிதர்கள் சைக்கிளில் வந்து சேவை செய்துவந்தார்கள், இன்று மூன்றெழுத்து படித்த அதிகாரிகளை விட சம்பளம் அதிகம் , இவைகள் எல்லாம் எதற்கு தேர்தல் நேரத்தில் பணியாற்ற , இதுவும் உலகுக்கு தெரியும் இதனால்தான் தேர்தல் நேரங்களில் எலியும், பூனை, ஒன்று சேர்ந்து இவர்கள் துணையுடன் மக்களுக்கு சேவைசெய்ய காத்திருக்கின்றன, இங்கு கட்டிடத்துக்காக காத்திருக்கிறது ஒரு கட்சி , மக்கள் நல்ல மாற்றத்துக்காக காத்திருக்கிறது , நல்லது நடக்கவேண்டும் இத்திருநாட்டில் வந்தே மாதரம்


Minimole P C
அக் 11, 2024 08:28

Unlike KK, Umar have to reward like ministerial berths, suitcases etc to Cong, Here we have to appreciate KK that by always dividing state cong. he achieved forming govt with minority numbers ignoring Cong. demands. Ofcourse Cong. state office bearers become manifold wealthy which also to be noted by Umar.


Kasimani Baskaran
அக் 11, 2024 05:48

போதிய பலமில்லாமல் ஆள்வது ஆபத்தானது. அதுவும் காங்கிரசை நம்பினார் கைவிடப்படுவது நிச்சயம். 370 வேண்டாம் என்று பொது மக்கள் காங்கிரசை குப்பையில் வீசியது சிறப்பு.


Ramesh Sargam
அக் 10, 2024 22:22

காங்கிரஸ் ஆதரவு கடிதம் வரவேண்டுமென்றால், நீங்கள் சூட்கேஸ் அனுப்பவேண்டும். அனுப்பினீர்களா...??


Rajasekar Jayaraman
அக் 10, 2024 21:52

பேராசை பெருநஷ்டம்.


krishna
அக் 10, 2024 21:25

ENGE ENGE ULAGIN NO 1 THALA THUNDU SEATTU.UDAN MAFIA MAINO CONGRESS KUMBAL KOODA PESI OOMAR ABDULLAVUKKU AADHARAVU KADIDHAM KIDAIKKA SEYYANUM.ILLAI ENDRAAL INGU ULLA MIRUGA MOORGA KOOTAM VOTTU PICHAI UNGALUKKU KIDAIKKADHU.UDAN PONGI EZHAVUM.


sankaranarayanan
அக் 10, 2024 20:50

ஆட்சியிலும் காஞ்சிரசுக்கு பங்கு கொடுத்தால் மட்டுமே காங்கிரசு ஆதரவு கடிதம் கொடுக்குமாம்.இல்லையேல் வெளியிலிருந்துதான் ஆதரவு கொடுக்குமாம்.சமயம் வரும்போது, காலை பிடித்து கவிழ்த்துவிடுமாம். இதுதான் காங்கிரசின் கைதேர்ந்த கலை, அரசியல் கொலை.


Minimole P C
அக் 11, 2024 08:29

sorry, it is murder of democracy.


Pats, Kongunadu, Bharat, Hindustan
அக் 10, 2024 20:29

பேசாமல் காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள் 3-4 பேர்களை விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியில் இணைத்துவிடுங்கள் அல்லது காங்கிரஸ் கட்சியை உடைத்து புது கட்சி தொடங்கி லோக்கல் கூட்டணி அமையுங்கள். பப்புவுக்கு ஹரியானாவில் ஜிலேபி கொடுத்த மாதிரி நீங்கள் காஷ்மீர் ஹல்வா கொடுத்துவிடுங்கள். சிம்பிள்.


Rajan
அக் 10, 2024 20:28

கான் கிராஸ் கட்சிக்கு மரியாதை கொடுக்கும் ஒரே கட்சி பிரிவினை வாதி கட்சிதான்


GMM
அக் 10, 2024 20:02

பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதியை மீட்கும் வரை ஜம்மு காஷ்மீர் யூனியன் ஆக இருக்க வேண்டும். அதற்கு காஷ்மீர் கல் ஏறி கூட்டம் போராட வேண்டும். மாநில அந்தஸ்து ஏன் தேவை?. மாநில சுயாட்சி, பிரிவினை என்று கலகம் மூட்டி கொண்டு இருப்பீர்கள். மக்கள் நல சிந்தனை இல்லை. எப்போதும் ஆதிக்க /அதிகார உணர்வு. காங்கிரஸ் அவ்வளவு எளிதில் ஆதரவு கடிதம் கொடுக்காது. பிரதமர் கனவு கலைந்த நிலையில் ராகுல், கடும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை