உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடும் எதிர்ப்பு காணாமல் போச்சு; புதிய சட்டத்தில் வக்ப் வாரியம் அமைக்கிறது கேரளா!

கடும் எதிர்ப்பு காணாமல் போச்சு; புதிய சட்டத்தில் வக்ப் வாரியம் அமைக்கிறது கேரளா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: மத்திய அரசு கொண்டு வந்த வக்ப் திருத்த சட்ட மசோதாவுக்கு, கடுமையான எதிர்ப்பு தெரிவித்த கேரளா, நாட்டிலேயே முதல் மாநிலமாக புதிய சட்டத்தின் கீழ் வக்ப் வாரியத்தை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இன்னும் 2 மாதங்களில் புதிய வக்ப் வாரியம் செயல்பாட்டுக்கு வர உள்ளது.முஸ்லிம்களுக்கான வக்ப் சட்டத்தில் பல்வேறு மாற்றங்களுடன் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. வக்ப் சொத்துக்களை நிர்வாகம் செய்வதில் இருக்கும் சிக்கல்களை களைந்து சீர்திருத்தம் செய்யும் நோக்கில் இந்த திருத்தம் செய்யப்பட்டது. இந்த சட்டத்திருத்தம் காலத்தின் கட்டாயம் என்று அஜ்மீர் தர்கா ஷெரீப் அறக்கட்டளை தலைவர் ஹாஜி சல்மான் சிஷ்டி ஆதரவு தெரிவித்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n0obariw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கிறிஸ்துவ சமுதாயத்தினரை உள்ளடக்கிய பிஷப்புகளின் கூட்டமைப்பும், இந்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த சட்டத் திருத்த மசோதா, லோக்சபாவில் கடந்த 2ம் தேதி, 14 மணி நேர விவாதத்திற்குப் பின்னும், ராஜ்யசபாவில், 17 மணி நேர விவாதத்திற்கு பிறகும் நிறைவேறியது. இதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்து விட்டார்.எனினும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், வக்ப் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பார்லியில் கடும் ரகளையில் ஈடுபட்டு வெளிநடப்பும் செய்தனர். கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக கூட்டணி தலைமையிலான அரசும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சியும் புதிய சட்டத்தை கடுமையாக எதிர்த்தன. வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக கேரள சட்டபையில் ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இப்படி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த கேரளா, நாட்டிலேயே முதல் மாநிலமாக புதிய சட்டத்தின் கீழ் வக்ப் வாரியத்தை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இன்னும் 2 மாதங்களில் புதிய வக்ப் வாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர மாநில அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.கேரளா வக்ப் அமைச்சர் அப்துல் ரகீம், 'புதிய சட்டத்தின் கீழ் வக்ப் வாரிய நிர்வாகிகள் தேர்வை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் அனைத்தும் ஒரு மாதத்தில் முடிக்கப்பட்டு விடும்' என்றார்.

எதிர்க்கட்சிகளுக்கு பிஷப் கண்டனம்

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வக்ப் திருத்த சட்டத்தை ஆதரிக்கும்படி கேரள பிஷப்கள் கூட்டமைப்பு அனைத்து எம்.பி.,க்களுக்கும் வேண்டுகோள் விடுத்தது. ஆனால், கேரளா பா.ஜ., எம்.பி., சுரேஷ் கோபியை தவிர , மற்ற அனைத்து எம்.பி.,க்களும், வக்ப் திருத்த சட்டத்தை எதிர்த்து ஓட்டளித்தனர்.இதற்கு பிஷப்களின் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. பாலா பிஷப் மார் ஜோசப் கல்லாரன்காட், கடுமையான கண்டனத்தை பதிவு செய்தார். கேரள கத்தோலிக்க பிஷப் கவுன்சில், கத்தோலிக்க பிஷப் மாநாடு ஆகிய அமைப்புகள் தங்கள் கவலையை பதிவு செய்த நிலையிலும், சட்டத்தை எதிர்த்து எம்.பி.,க்கள் ஓட்டளித்துள்ளனர்.அவர்கள் ஓட்டெடுப்பை புறக்கணித்திருக்க வேண்டும் அல்லது வேறு ஏதாவது மற்ற தீர்வுகளை ஆய்வு செய்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக, தங்கள் கட்சியின் நிலையை எடுத்தது கண்டனத்துக்கு உரியது என்று பிஷப் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

Karthik
ஏப் 07, 2025 20:50

ஒரே வாரத்தில் கேரளாவில் கடும் எதிர்ப்பு காணாமபோயி இப்ப நாட்டுக்கே முன் மாதிரியாக, முன்னோடியாக சட்டத்தை செயல்படுத்த போறாங்க. .. அப்பஅப்பா கேஸ் நிக்காதே.. இனி அடக்கித்தான் வாசிக்கனும் போல. .


sankaranarayanan
ஏப் 07, 2025 17:30

கடும் எதிர்ப்பு காணாமல் போச்சு புதிய சட்டத்தில் வக்ப் வாரியம் அமைக்கிறது கேரளா கேரளா அரசு கையை விரித்து விட்டது இதுதான் பாரதபிரதமருக்கு கிடைத்த முதல் வெற்றி இனி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள முஸ்லீம் மக்கள் இதை ஆதரித்து செயல் பட தொடங்கி விடுவார்கள் பிறகு நமது அப்பா எந்த உச்ச மன்ற சென்று வழக்கு தொடர போகிறாரோ தெரியவில்லையே அடக்கியே வாசித்தால்தான் நல்லது


Srinivasan Krishnamoorthy
ஏப் 07, 2025 17:16

Kerala cannot have separate laws for wakf board. Kerala is conscious of nation wide implementation. it is unfortunate tamilnadu dathis never realize the truth. Same manner they deal with Neet and National Education Policy.. Tamilnadu citizens should realize we are not a separate country, supreme courts works based on our Acts enacted by Parliament


Ramalingam Shanmugam
ஏப் 07, 2025 17:16

சூணா பாணா என்ன சொல்ல போறீங்க


Raa
ஏப் 07, 2025 16:56

நீ படித்த கேரளா பள்ளியில் அமித்ஷா தலைமை ஆசிரியர், தெரிஞ்சுக்கோ. இதெல்லாம் தமிழ் நாட்டுக்கு பிரச்சனையே இல்லை, ஏனெனில் நம்மாளுதான் பள்ளிக்கே போகவில்லையே. வாதியாரையும் தெரியாது.. தலைமை ஆசிரியர் யார் என்றும் தெரியாதா அப்ராணி.


Kumar Kumzi
ஏப் 07, 2025 16:52

டுமீல் நாட்டு ஓசிகோட்டர் கொத்தடிமைங்களுக்கு இனிமேல் சரி புத்தி வருமா


TamilArasan
ஏப் 07, 2025 16:50

பெரும்பாலான கிருத்துவ மக்கள் நாட்டுப்பற்று மிக்க தேசிய சிந்தனை கொண்டவர்கள் .... நம் நாட்டில் வெடிகுண்டு நிகழ்த்தாத சிறுபான்மை மக்கள்...


Rajan A
ஏப் 07, 2025 16:34

இதை நம்ப முடியாது. சேட்டன்ஸ் வேற பிளான் பண்ணியிருக்கனும். ஆமா, தங்க கடத்தல் வழக்கு என்ன ஆச்சு?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 07, 2025 16:10

இந்த சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் வழக்கு, விவகாரம் எழுந்தால்தான் யாருக்குச் சாதகம், யாருக்குப் பாதகம் என்று புரியவரும் .....


SUBBU,MADURAI
ஏப் 07, 2025 17:28

கண்டிப்பாக இந்த சட்டம் வக்புவாரியத்துக்கு சாதகமாக இருக்காது. ஏனென்றால் ஆதாரத்தை காட்ட அவர்களிடத்தில் உரிய பட்டா சிட்டா அடங்கல் பத்திரம் எதுவும் கிடையாது.


visu
ஏப் 07, 2025 15:34

அடுத்து கட்டாய குடும்ப கட்டுப்பாடு சட்டத்தை அமல்படுத்துங்க சட்டத்தை மீறுபவர்களின் வாக்குரிமையை ரத்து செய்யுங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை