உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஹல்காம் பயங்கரவாதி இறுதிச்சடங்கு; பயங்கரவாதிகளை விரட்டியடித்த மக்கள்

பஹல்காம் பயங்கரவாதி இறுதிச்சடங்கு; பயங்கரவாதிகளை விரட்டியடித்த மக்கள்

இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவரான ஹபீப் தாஹிர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரது இறுதிச் சடங்கு பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்தது. அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகளை உள்ளூர் மக்கள் விரட்டியடித்தனர். ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில், ஏப்., 22ல், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில், 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, மே 7ல், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை நம் ராணுவம் அழித்தது. இதில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பஹல்காம் பயங்கரவாதிகள் டிமிக்கி கொடுத்து வந்த நிலையில், அவர்களது இருப்பிடத்தை கண்டுபிடித்த பாதுகாப்பு படையினர், கடந்த மாதம் 28ம் தேதி, ஸ்ரீநகரில் சுட்டுக் கொன்றனர். அவர்கள் பயங்கரவாதிகள் சுலைமான் ஷா, ஹபீப் தாஹிர், ஜிப்ரான் ஆகியோர் என்பது தெரியவந்தது. இந்நிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி ஹபீப் தாஹிரின் இறுதிச் சடங்கு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள குய்யான் என்ற கிராமத்தில், கடந்த மாதம் 30ம் தேதி நடந்துள்ளது. இதில், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் உள்ளூர் தலைவர் ரிஸ்வான் ஹனிப் மற்றும் அவரது கூட்டாளிகள் பங்கேற்க வந்தனர். அப்போது அவர்களுக்கும், ஹபீப் தாஹிர் குடும்பத்தாருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. பொதுமக்கள் கூடியதை அடுத்து, ரிஸ்வான் ஹனிப், அவரது கூட்டாளிகள் அங்கிருந்து வெளியேறினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதன் மூலம், பஹல்காம் தாக்குதலுக்கும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கும் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்பு மீண்டும் நிரூபணமாகி உள்ளது. அதே நேரத்தில் பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டுள்ள, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் விரக்தியில் உள்ளனர் என்பதே, பயங்கரவாதிகளை விரட்டியடித்ததில் இருந்து தெரியவருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ரங்ஸ்
ஆக 04, 2025 14:34

சிதம்பரத்துக்கு சந்தேகம் தீர்ந்ததா? பஹல்காம் தாக்குதல் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் தான் என்று.


N.Purushothaman
ஆக 04, 2025 10:11

மிச்சம் மீதி இல்லாமல் போட்டு தள்ளனும் ...


subramanian
ஆக 04, 2025 07:35

தீவிரவாதம்.கெட்டது . அதை தொட்ட பாகிஸ்தான் கெட்டது.


ருத்ரன்
ஆக 04, 2025 07:30

இந்த செய்தி மக்களுக்கு தெரிந்து என்ன பிரயோசனம். மக்களவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நம்ப மாட்டார்களே. பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் விரட்டி அடித்ததற்கு ஆதாரம் கேட்பார்களே. இருக்கிறதா. தீவிரவாதிகளின் குடும்ப உறுப்பினர்களே எழுத்து பூர்வமாக ஆதாரம் கொடுத்தாலும் பப்பு, பசி போன்ற பாகிஸ்தானிய தேச பக்தர்கள் கேள்வி கேட்பார்களே.


பா மாதவன்
ஆக 04, 2025 07:02

இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்த லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் உள்ளூர் தலைவர் ரிஸ்வான் ஹனிப் மற்றும் அவரது கூட்டாளிகள் பங்கேற்க வந்த போது எப்படி காவல்துறை கண்காணிப்பில் இருந்து தப்பினர்? அவர்களை உண்மையில் ஊர்க்காரர்கள், உறவினர்கள் ஊரை விட்டு கோபத்தில் விரட்டினார்களா அல்லது காவல்துறையினரிடமிருந்து காப்பாற்றுவதற்காக இதுபோல் அன்புடன் விரட்டி அடிக்கப் பட்டார்களா என்பது யாருக்கு தெரியும்?


N.Purushothaman
ஆக 04, 2025 12:27

இது நடந்தது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஸ்மீர் ....பயங்கரவாதியும் பாகிஸ்தான் ராணுவமும் வெவ்வேறல்ல ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை