உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மே.வங்கத்தில் யாத்திரை: கூலித் தொழிலாளர்களை சந்தித்த ராகுல்

மே.வங்கத்தில் யாத்திரை: கூலித் தொழிலாளர்களை சந்தித்த ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் தினசரி கூலித் தொழிலாளர்களை ராகுல் நேரில் சந்தித்து உரையாடினார். அப்போது தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ராகுல் கேட்டறிந்தார்.லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பாரத் ஜோடோ நியாய யாத்திரை என்ற பெயரில், காங்., - எம்.பி., ராகுல் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரை சமீபத்தில் மேற்கு வங்கத்தை அடைந்தது. பின், பீஹாரை அடைந்த பாரத் ஜோடோ நியாய யாத்திரை, நேற்று மீண்டும் மேற்கு வங்கத்திற்கு வந்தது.இந்நிலையில், இன்று(பிப்.,01) யாத்திரையின் போது, மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் தினசரி கூலித் தொழிலாளர்களை ராகுல் நேரில் சந்தித்து உரையாடினார். ராகுலுடன் பீடி சுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள் பேசும் வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அப்போது தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ராகுல் கேட்டறிந்தார்.

1.5 லட்சம் பேர்

இது தொடர்பாக எக்ஸ் சமூகவலைதளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆயுதப்படையில் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட 1.5 லட்சம் இளைஞர்களை தற்காலிக ஆள்சேர்ப்பு அக்னிபாத் திட்டம் என்ற பெயரில் ஆதரவற்றவர்களாக விடப்பட்டுள்ளது அவர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும். அக்னிபத் திட்டம் தேசபக்தியுள்ள இளைஞர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள துரோகம் மட்டுமல்ல இந்திய ராணுவத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் நாட்டின் புனிதமான உணர்வுகளுக்கு இழைக்கும் துரோகம். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

பேசும் தமிழன்
பிப் 01, 2024 18:59

அப்போ மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகளும்.... கான் கிராஸ் கட்சிக்கு தான்.... திரிணாமுல் காங்கிரஸ்... டெபாசிட் வாங்காது போல ???


Karthik
பிப் 01, 2024 16:10

தொகுதியில் என்னென்ன பிரச்சனைகளை சரிசெய்துள்ளார்?


ராஜா
பிப் 01, 2024 15:56

அங்கு வந்தவர்களிடம் ஆதார் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்துவிட்டு அவர்கள் மேற்கு வங்கத்தினரா இல்லை உண்மையான வங்க தேசத்தினதினரா என்று முடிவு செய்ய வேண்டும்.


ayen
பிப் 01, 2024 15:16

அக்கினிபாத் திட்டம் என்றால் என்ன? அதனால் என்ன பாதிப்பு என்று ராகுலால் விளக்க முடியுமா?


கண்ணன்
பிப் 01, 2024 14:32

கூலித் தொழிலாளர்களை எவ்வளவு கூலிக்குப் பிடித்தனர்?


A Viswanathan
பிப் 01, 2024 14:31

என்ன வேஷம் போட்டாலும் மக்கள் நம்ப தயாராக இல்லை.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை