உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ்., நிறுவனர் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை

நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ்., நிறுவனர் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை

மும்பை: நாக்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக, மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூருக்கு பிரதமர் மோடி சென்றார். விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவாருக்கு பிரதமர் மோடி மலர் அஞ்சலி செலுத்தினார். மாதவ் நேத்ராலயா கண் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இங்கு 250 படுக்கைகள், 14 வெளிநோயாளி பிரிவு மற்றும் 14 நவீன ஆபரேசன் தியேட்டர்களுடன் கூடிய மருத்துவமனை கட்டடம் அமைகிறது.

100ம் ஆண்டு நிறைவு

பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: ஆர்.எஸ்.எஸ்., நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. இந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ்., தனது பயணத்தின் 100ம் ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அடுத்த மாதம் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் பிறந்தநாளும் ஆகும். நவராத்திரி மற்றும் அனைத்து பண்டிகைகளுக்கும் நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நிலநடுக்கம்

நாட்டின் அனைத்து குடிமக்களும் சிறந்த சுகாதார வசதிகளைப் பெறுவதே எங்கள் முன்னுரிமை. ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் வழங்கப்படுகிறது. உலகில் எங்கு இயற்கை பேரிடர் ஏற்பட்டாலும், இந்தியா முழு மனதுடன் சேவை செய்ய முன்வருகிறது. இவ்வளவு பெரிய நிலநடுக்கம் மியான்மரைத் தாக்கியுள்ளது. ஆபரேஷன் பிரம்மா திட்டத்தின் குழுவினர் அங்குள்ள மக்களுக்கு உதவ சென்றுள்ளனர்.

மிகப்பெரிய சொத்து

இன்று இந்தியா முன்னேறி வருவதால், அது முழு உலகளாவிய தெற்கின் குரலாகவும் மாறி வருவதை உலகம் காண்கிறது. இன்று இந்தியாவின் மிகப்பெரிய சொத்து நமது இளைஞர்கள். இன்று இந்திய இளைஞர்கள் தன்னம்பிக்கையால் நிறைந்துள்ளனர். தேசத்தைக் கட்டியெழுப்பும் உணர்வை கொண்ட நமது இளைஞர்கள் முன்னேறிச் செல்கிறார்கள். இந்த இளைஞர்கள் 2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கின் கொடியை ஏந்தியுள்ளனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.தொடர்ந்து, சோலார் டிபென்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸில் புதிதாக கட்டப்பட்ட விமான ஓடுதளத்தையும் அவர் திறந்து வைத்தார். ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Kanns
மார் 30, 2025 20:55

Cheap Political Dramas/Propagandas for Fooling People & Nation to Coverup Lavish-Extravaganzas& MegaLoots by All Rulers incl UselessNonPerforming PowerMisusing Dictator WorseThanIndiraG ModiBJP, Stooge Ministers-MPMLACouncillors, OverFattened StoogeOfficials esp Bureaucrats, CaseHungry Police-Judges, NewsHungryBiasedMedia, Vote/Power Hungry Parties/Groups incl FalseComplaint-Gangswomen, unions/groups, SCs, advocates etc, Destruction of Indians Livelihood-Economy Majority Hindus Without Providing Any Livelihoods/Jobs etc India is Automatically Developing Because of HighPopulation& Educated Workforce& Competor China is Sidelined by Worlds. SHAMEFUL GOVERNANCE, JUSTICE& BANANA REPUBLIC


venugopal s
மார் 30, 2025 13:48

நாக்பூரில் உள்ள யூனிவர்சிட்டிக்கு போகவில்லையா?


Nagendran,Erode
மார் 30, 2025 16:26

இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?


Palanisamy T
மார் 30, 2025 13:24

இந்த மாலை மரியாதையெல்லாம் மதச் சார்பற்ற கொள்கையில் ஊறியுள்ள திராவிடக் கட்சிகள் இயக்கங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இது பிரதமர் அவர்களின் தனிப்பட்ட விவகாரம். சமீபத்தில் காஷ்மீர் விவகாரத்தில் முதல்வர் அவர்களின் நிலைப் பாடானது அவர் இன்னும் மாறவில்லை. அன்று இந்தியாவசமுள்ள காஷ்மீர்ப் பகுதியை மோடி அவர்கள் இந்தியா வசம் மீட்டெடுத்ததை முதல்வர் அவர்கள் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லையோ, புரியவில்லை 2500 ஆண்டுகளுக்கு முன் இந்திய துணைக் கண்டத்திற்குள் படை எடுத்து வந்தவர்கள் இந்தோ ஆரிய இனம். அன்று வாழ்ந்த திராவிடர்கள் தெற்கு நோக்கி நகர்ந்தார்கள். அவர்கள் அன்று உருவாக்கியதுதான் சமஸ்கிருத மொழி. அதன் பின்பு சுமார் 900 ஆண்டுகளுக்கு முன் வந்த முஸ்லீம் படையெடுப்பால் இன்று இந்திய துணைக் கண்டத்தில் உருவானதுதான் இன்றைய பாகிஸ்தான் வங்கதேச நாடுகள். போதும் இதற்க்கு மேலும் இந்தியா இனி எதையும் இழக்க தயாராயில்லை. ஒன்றிய அரசை எதிர்க்க வேண்டிய இடத்தில் எதிர்க்கவேண்டும். இதைத்தான் அண்ணா அவர்களும் உறவுக்கு கைக் கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்றார். திமுக வினர் இனிமேல் தங்களை மாற்றிக் கொள்வது நன்று. RSS இயக்கத்தினர் கொஞ்சம் வரம்பு மீறி நடக்கலாம். பொறுப்பற்ற மத மாற்றக் கும்பல்கள் இதைத்தானே இன்னும் செய்கின்றார்கள். எந்த நாடுகளிலும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் முஸ்லீம்கள் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் வாழ்கின்றார்கள். இல்லையென்று அவர்களால் சொல்லமுடியுமா?


Svs Yaadum oore
மார் 30, 2025 13:38

2500 ஆண்டுகளுக்கு முன் இந்திய துணைக் கண்டத்திற்குள் படை எடுத்து வந்தவர்கள் இந்தோ ஆரிய இனமாம். அன்று வாழ்ந்த திராவிடர்கள் தெற்கு நோக்கி நகர்ந்தார்களாம். அப்ப அதற்கு முன் இங்கு யார் இருந்தார்களாம்? தமிழ்க்குடி மூத்த குடி. அப்ப இங்குள்ள பழங்குடியினர் இளைய குடியா? இங்குள்ள பழங்குடியினர் பேசும் மொழிகள் அழிந்து போனது. அவர்கள் எண்ணிக்கையும் குறைந்து போனது ...பஸ் வசதி இல்லாத நீலகிரி மலை கிராமங்களில் கூட டாஸ்மாக் ....இதுதான் திராவிட மாடல் ..


R. SUKUMAR CHEZHIAN
மார் 30, 2025 13:12

நுற்றாண்டு காணும் ஆர்.எஸ். எஸ் பேர் இயக்கத்தின் ஸ்தாபகர் பூஜ்ன்ய கேசவ பலிராம் ஹேட்கேவார் பிறந்த தினம் இன்று யுகாதி அன்று பிறந்தார். அவர் பொற்பாதங்களை வணங்கி இந்த இயக்கத்தின் லட்சியமான நமது ராஷ்ரம் பரம் வைபவமான நிலையை அடைய நாம் தொடர்ந்து தேச பணியாற்றிட எல்லாம் வல்ல இறைவன் ஆசியை வேண்டுகிறேன். பாரத் மாதா கீ ஜெய்.


Amar Akbar Antony
மார் 30, 2025 12:38

"தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும்" எல்லா புகழும் இறைவனுக்கே இங்கே இறைவன் என் தாய் நாடான பரததேசம். தலைமகனே உன் நேர்ச்செயலால் அகிலமெங்கிலும் எம் பாரததேசம் நற்பெயர் எடுத்து வீறுநடையிடுகிறது. தமிழகத்திலிருந்து ஒரு எம் பி யும் இல்லையென்றாலும் தாயை எம் பரதத்தாயை பாதுகாத்து உலகின் முக்கியானதாக கொணர்ந்துள்ளாய். தாங்கள் அதிக வருடங்கள் ஆரோக்கியத்துடன் வாழ்கவேண்டும்.


இந்தியன்
மார் 30, 2025 11:59

இப்போ வெறுப்பு கருத்துக்களை விதைக்க 200rs விடியல் உபி ஒவ்வொருத்தனா வருவான் பாரு...


Venkataraman
மார் 30, 2025 11:54

ஆர். எஸ்.எஸ் வாழ்க .நாட்டு மக்களுக்கான அதன் சேவைகள் வளர்க. நாட்டுப்பற்று ஓங்குக.


கிஜன்
மார் 30, 2025 10:23

மதசார்பற்ற இண்டி கூட்டணிக்கட்சி தலைவர்கள் என்றால்.. அவுரங்கசீப் நினைவிடத்திற்கும் சென்று மரியாதை செலுத்தி இருப்பர் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை