உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாலக்காட்டில் பிரதமர் மோடி ‛ரோடு ஷோ: ஏராளமானோர் பங்கேற்பு

பாலக்காட்டில் பிரதமர் மோடி ‛ரோடு ஷோ: ஏராளமானோர் பங்கேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாலக்காடு: பாலக்காட்டில் நடந்த ‛ரோடு ஷோ'வில் பங்கேற்ற பிரதமர் மோடியை சாலையின் இரு புறங்களிலும் திரளான மக்கள், தொண்டர்கள் ஒன்று கூடி மலர் தூவி வரவேற்றனர்.லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, நேற்று கோவையில் நடந்த ‛ரோடு ஷோ'வில் பங்கேற்ற பிரதமர் மோடியை சாலையின் இரு புறமும் திரளான மக்கள் மற்றும் தொண்டர்கள் வரவேற்றனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திறந்தவெளி காரில், 2.5 கி.மீ., தூரம் மோடி பயணித்தார். இதனை முடித்துக் கொண்டு இரண்டாம் கட்டமாக ஏப்.,26ல் லோக்சபா தேர்தல் நடக்கும் கேரள மாநிலத்திற்கு இன்று(மார்ச் 19) பிரதமர் மோடி சென்றார். பாலக்காட்டில் நடந்த ‛ரோடு ஷோ'வில் அவர் பங்கேற்றார். திறந்தவெளி காரில் பயணித்த பிரதமரை, சாலையின் இரு புறங்களிலும் கூடிய பொது மக்கள் மற்றும் பா.ஜ.,வினர் ஏராளமானோர் மலர்களை தூவி வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி