உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாக்காளர் பட்டியல் விவகாரம்: நாளை பத்திரிகையாளர்களை சந்திக்கும் தேர்தல் கமிஷனர்கள்

வாக்காளர் பட்டியல் விவகாரம்: நாளை பத்திரிகையாளர்களை சந்திக்கும் தேர்தல் கமிஷனர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தேர்தல் கமிஷன் சார்பில் நாளை பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது காங்கிரஸ் எம்பி ராகுலின் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளிக்கப்படும்.கடந்த 2024 லோக்சபா தேர்தலில் ஓட்டுகள் திருடப்பட்டதாகவும், இதற்கு தேர்தல் கமிஷன் உடந்தையாக இருந்ததாகவும், காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், 'ஓட்டு திருட்டு' என்ற பெயரில் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகிறார். மஹாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநில தேர்தல் முடிவுகள் குறித்தும் ராகுல் குற்றம்சாட்டி வருகிறார்.இதை மறுத்த தேர்தல் கமிஷன், 'குற்றச்சாட்டுகள் மீது நம்பிக்கை இருந்தால் பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்டு அனுப்புங்கள்; விசாரிக்கிறோம். இல்லை எனில் மன்னிப்புக் கேளுங்கள் என, ராகுலுக்கு பதிலடி கொடுத்தது. எனினும் அவர் கையெழுத்திட மறுக்கிறார். ராகுல் மீதும் பாஜ தலைவர்கள் விமர்சனங்களை செய்து வருகின்றனர்.இந்நிலையில், டில்லியில் உள்ள தேசிய மீடியா சென்டரில் நாளை பிற்பகல் 3 மணியளவில் தேர்தல் கமிஷன் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில், ராகுல் தெரிவித்த குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பீஹாரில் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்புப் பணிகளுக்கு பிறகு முதல்முறையாக தேர்தல் கமிஷன் சார்பில் முதல்முறையாக பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ உள்ளது. பீஹாரில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்கள் உள்ள நிலையில், நடந்த வாக்காளர் திருத்தப் பட்டியல் திருத்த சிறப்புப் பணிகள் எதிர்க்கட்சிகள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பின. இதனை வைத்து பார்லிமென்டிலும் அமளி உண்டாகி உள்ளது.இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் , வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

J.Isaac
ஆக 17, 2025 11:50

தேர்தல் ஆணையம், பொது மக்களை சந்திக்க வேண்டும். பெரும்பாலான பத்திரிக்கையாளர்கள், ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில்


vivek
ஆக 17, 2025 13:09

ராகுல் கூட தொடை நடுங்காமல் வரலாம் ......வருவாரா


visu
ஆக 16, 2025 22:29

உச்ச நீதிமன்றம் அனைத்து அரசியல் சாசன அமைப்புகளை விட அதிகாரமிக்கதா யார் இத்தேர்தலுக்கு கடிவாளம் போடவேண்டும் தெரியவில்லை தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியலை சீர்திருத்த நினைக்கிறது அதுவும் ஒரு சுயாட்சி அமைப்பு. தவறு செய்தால் கேட்கலாம் அனால் எப்படி செய்யவேண்டும் என்று உத்தரவிடுவது சரியா.இப்படித்தான் ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயிக்கிறார்கள் அதற்கு அதிகாரம் உள்ளதா தெரியவில்லை . நீதிபதி நியமனங்களை அவர்களே நியமித்து கொள்கிறார்கள்.ஒண்ணுமே புரியல...


சிட்டுக்குருவி
ஆக 16, 2025 21:36

ஏதோ அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் பொய்யான போராட்டங்களுக்காக முன்னெடுத்துச்செல்லும் வழக்குகளுக்காக உச்சநீதிமன்றம் எலேச்டின் கோமிஸ்ஸினுக்கு எதிராக 65 லட்சம் வாக்காளர் தரவுகளை டிஜிட்டல் வடிவில் ,டிஜிட்டல் பிரைவசி சட்டத்திற்கு எதிரான வெளியிட உத்திரவுபிறப்பித்து இருப்பது வேடிக்கையாக உள்ளது .65 லட்சம் பெயர்களை பிறப்பு தேதியிலிட்டு ,விலாசத்துடன் டிஜிட்டலில் பதிவிட தகுந்த மனிதவளம் கோமிஸ்ஸியனிடமுள்ளதா ? எவ்வளவு காலமாகும் .அதுவரை மாநிலத்தேர்தலை நிறுத்திவைக்கவேண்டும்மா ?இவ்வளவையும் செய்யும் உரிமை சட்டத்தில் உள்ளதா ? வாக்காளர் பட்டியல் தயாரிப்பதே மற்ற அரசு சார்ந்த ஊழியர்களின் பங்களிப்புதானே.விடுபட்டவர்களை அவர்களிடம் மனுபெற்று அறிந்து இணைப்பதுதான் நடைமுறை சட்டம் ...இதையேயெல்லாம் கருத்தில் கொள்ளாமல் உச்சநீதிமன்றமே ஒரு பார்லிமென்டுக்கு இணையாக சட்டம் இயற்றும் அங்கமாக இயங்குவது மக்களாட்சிக்குவந்த சோதனையே .


J.Isaac
ஆக 16, 2025 19:44

தேர்தல் ஆணையத்தின் நாணயம் காற்றில்...


சிட்டுக்குருவி
ஆக 16, 2025 18:40

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு டிஜிட்டல் பிரைவசி ஆக்ட் 2023 ஐ மீறுவதாக உள்ளது .இதை பத்திரிகையாளர்கள் எழு ப்பவேண்டும் .தேர்தல் கமிஷன் மறுபரிசீலனைக்கு மனுஅளிக்கவேண்டும் இது அரசியலமைப்பு சட்டமாக இருப்பதால் இதை 5 நீதிபதிகள் கொண்ட கான்ஸ்டிடியூஷனல் பெஞ்ச் விசாரிக்கவேண்டும் .அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள உரிமைகளைமட்டுமே எலேச்டின் கமிஷன் கையாளமுடியும். இந்த உத்திரவு எலேச்டின் கமிஷன் உரிமைகளுக்கு அப்பாற்பட்டு ,இன்னொரு சட்டத்தை மீறுவதாகும் .


GMM
ஆக 16, 2025 18:37

வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பலர் வாக்குரிமையை தவறாக பயன்படுத்தி இருந்தால், நடந்த தேர்தல் செல்லாது என்று சிலர் வழக்கு போடுவர். இணையதளத்தில் வெளியிட டிஜிட்டல் சட்டம் அனுமதிக்குமா? நிர்வாக முறை வழங்கினால் சிதைக்க பட்டு வருகிறது. சிக்கலான பிரச்சனையை நீதிமன்றம் உருவாக்கி வருகிறது.?


GMM
ஆக 16, 2025 18:35

கடந்த 2024 லோக்சபா தேர்தலில் ஓட்டுகள் திருடப்பட்டதாகவும், இதற்கு தேர்தல் கமிஷன் உடந்தையாக இருந்ததாகவும், காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், ஓட்டு திருட்டு என்றால், காங்கிரஸ் கட்சி முதலில் தேர்தல் ஆணையம் வழங்கிய பதவியை ஏன் ராஜினாமா செய்ய விரும்பவில்லை?


SUBBU,MADURAI
ஆக 16, 2025 18:17

No tariffs on Russian partners for now, Tariffs on Russian oil buyers not needed for now, says the US President Trump after meet with Putin. I dont have to think about that right now. I may have to think about it in 2 or 3 weeks. Meeting went well!


SUBBU,MADURAI
ஆக 16, 2025 18:13

கர்நாடகாவில் தேர்தல் கமிஷன் மீது இதே போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்திய ராகுல்காந்தியை பெங்களூரில் உள்ள தேர்தல் ஆணையம் ஆகஸ்டு 10 ம் தேதி நேரில் வந்து குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை நிரூபிக்கும் படி கூறியது. சரியென்று கூறிய ராகுல்காந்தி கடைசி நேரத்தில் அங்கு போகாமல் நாங்கள் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனரிடம் எங்கள் விளக்கத்தை அளிக்கிறோம் என்று ஜகா வாங்கி விட்டார். பிறகு டெல்லியில் உள்ள எலக்ஷன் கமிஷனிடம் நேரம் கேட்டார் அவர்களும் ஒரு தேதி குறிப்பிட்டு ராகுல்காந்தியை நேரில் வரச் சொன்னார்கள். அதற்கு ராகுல்காந்தி நாங்கள் எதிர்க்கட்சி எம்.பிக்கள் மொத்தமாக 200 பேர் சேர்ந்து வருவோம் என்று கூறினார் அதற்கு டெல்லி தேர்தல் ஆணையம் இங்கு அத்தனை பேர் அமரும் அளவிற்கு பெரிய கான்ஃபிரன்ஸ் ஹால் கிடையாது ஆகையால் உங்கள் இண்டிக் கூட்டணியில் உள்ள கட்சிகளில் இருந்து ஒரு முப்பது பேர் வாருங்கள் என்று கூறியது. அதற்கு ராகுல்காந்தி வந்தால் நாங்கள் எல்லோரும்தான் வருவோம் என்றார். அதாவது தேதி கிடைத்து நேரில் வரச் சொன்னதும் அங்கு போகாமல் இருக்க இப்படிபட்ட நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கிறார் ஆனால் இவர் இப்படி செய்வது காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவர்களுக்கே பிடிக்கவில்லை. எனவே இந்த ராகுல்காந்தி எவ்வளவு ஆபத்தானவர் என்பதை மக்கள் குறிப்பாக தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


Saravanan
ஆக 16, 2025 20:37

இந்த வெளிநாட்டுகாரரை நாட்டை விட்டு துரத்தினால்தான் இந்தியா உருப்படும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை