உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாணவியருக்கு பாலியல் தொல்லை அளித்த சாமியார் ஆக்ராவில் கைது

மாணவியருக்கு பாலியல் தொல்லை அளித்த சாமியார் ஆக்ராவில் கைது

ஆக்ரா: 17 மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக எழுந்த புகாரில், சாமியார் சைதன்யானந்தாவை ஆக்ராவில் கைது செய்யப்பட்டார் என டில்லி போலீசார் தெரிவித்தனர்.புதுடில்லி வசந்த் கஞ்ச்சில், 'ஸ்ரீ சாரதா இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மேனேஜ்மென்ட்' என்ற உயர்கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. கர்நாடக மாநிலம் சிருங்கேரி சாரதா பீடத்தின் தலைமையில் இயங்கும் இந்த நிறுவனத்தில், டில்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவியர் படிக்கின்றனர்.டில்லி கிளையின் மேலாளராக இருந்த பார்த்தசாரதி என்ற சைதன்யானந்த சரஸ்வதி சாமியார், 17 மாணவியரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அவர் மீது பாலியல் துன்புறுத்தல் உட்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே தலைமறைவான பார்த்தசாரதி என்ற சைதன்யானந்தாவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை சாமியார் சைதன்யானந்தாவை ஆக்ராவில் கைது செய்யப்பட்டார் என டில்லி போலீசார் தெரிவித்தனர். முன்னதாக, சைதன்யானந்த சரஸ்வதி தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Nathansamwi
செப் 28, 2025 17:21

உண்மையாக இருப்பின் வெட்டி விட்ருங்க ....


Indian
செப் 28, 2025 14:08

பாதிக்க பட்ட மாணவிகளே புகார் அளித்தாலும்


NALAM VIRUMBI
செப் 28, 2025 11:42

சிருங்கேரி சாரதா பீடம் சார்ந்த கல்லூரி என்பதால், அப்படி இருக்க வாய்ப்பில்லை. இதில் ஏதோ சதி இருப்பது போல் தெரிகிறது. உரிய விசாரணை அவசியம்.


Selva
செப் 28, 2025 11:27

Whoever is doing such kind of crimes must be punished regardless of the religion and religious connections


Mecca Shivan
செப் 28, 2025 10:36

இஸ்லாமிய காங்கிரஸின் வேலையா இல்லை உண்மையா என்று விசாரித்தால் தெரியும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை