உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சியாச்சினில் ராணுவ உடையில் ஜனாதிபதி முர்மு :

சியாச்சினில் ராணுவ உடையில் ஜனாதிபதி முர்மு :

சியாச்சின்: உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள சியாச்சின் ராணுவ முகாமிற்கு ராணுவ உடையில் சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு அங்கு, ராணுவ வீரர்களை சந்தித்து பேசினார்.உலகின் மிக உயர்ந்த மற்றும் அதிக குளிர் நிறைந்த போர் முனையாக சியாச்சின் பனிமலை 23 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. இங்கு நம் தேசம் காக்கும் ராணுவ வீரர்களின் முகாம் உள்ளது.இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு , சியாச்சின் ராணுவ முகாமிற்கு வருகை தந்தார். அப்போது ராணுவ உடை அணிந்திருந்தார். அவரை ராணுவ உயரதிகாரிகள் வரவேற்றனர். அங்குள்ள போர் நினைவிடத்தில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய பின் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியது, கடினமான இச்சூழலில், தாய்நாட்டை பாதுகாக்க முழு அர்ப்பணிப்புடனும், விழிப்புடனும் செயல்படும் உங்களின் தியாகத்திற்கு நான் தலை வணங்குகிறேன் என்றார்.இதற்கு முன் சியாச்சின் ராணுவ முகாமிற்கு கடந்த 2004-ம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாமும், 2018-ம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த ராம்நாத் கோவிந்தும் வருகை தந்துள்ளனர். இதையடுத்து சியாச்சின் ராணுவ முகாமிற்க வந்த மூன்றாவது ஜனாதிபதி திரவுபதி முர்மு என்ற பெருமை பெறுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

kulandai kannan
செப் 27, 2024 12:50

நாட்டிலுள்ள பஸ் ஸ்டாண்டு, அரசு மருத்துவமனை போன்றவற்றிற்கு அந்தந்த ஊர்களைப் சேர்ந்த முன்னாள்/ இந்நாள் ராணுவ வீரர்களின் பெயர்களைச் சூட்டலாம்.


Kanns
செப் 27, 2024 08:46

Firstly Real Service to Nation& CommonPeople is Most Required by Top Servants of Nation instead of being Dummy. Good Service Can be Done in Own Personality incl her saree dress Instead of Gimmicries.


சிவா அருவங்காடு
செப் 26, 2024 22:51

வணக்கம் ஜனாதிபதி.


Ramesh Sargam
செப் 26, 2024 20:24

ஜனாதிபதி முர்முவுக்கு நன்றி. ராணுவ வீரர்களை ஜனாதிபதி சந்திக்கிறார். பிரதமர் சந்திக்கிறார். மற்ற மத்திய அமைச்சர்கள் சந்திக்கிறார்கள். ஏன் மாநில முதல்வர்கள், மாநில அமைச்சர்கள் அவர்களை என்றும் சந்தித்ததில்லை. சந்திக்கக்கூடாது என்று ஏதாவது ரூல் சட்டம் சொல்கிறதா? மாநில முதல்வர்களும், மாநில அமைச்சர்களும் கூட அவர்களை அவர்கள் இடத்திற்கு சென்று சந்தித்து, அவர்களை ஊக்குவிக்கவேண்டும். அப்படி சந்திப்பதால் ராணுவவீரர்கள் ஊக்கம் பெறுவார்கள். இவர்களுக்கும் அவர்களின் கடுமையான வாழ்க்கை புரியும். ஓரளவு நாட்டுப்பற்று வரும்.


Narayanan Muthu
செப் 26, 2024 20:06

இந்த மாதிரி ஸ்டண்ட் அடிக்கிறதுலே முர்மு மோடியையே மிஞ்சிடுவார் போலெ.


Sathyanarayanan Sathyasekaren
செப் 26, 2024 22:30

அதுதானே, கொத்தடிமை நாரயணனன் முத்து ஊழல் பண்ணி ஜெயிலில் இருந்து வந்தவர்களை வரவேற்க போகும் தலைகள், வெட்கமேயில்லாமல்...


hari
செப் 26, 2024 22:54

இவர் தான் தலைசிறந்த 200 ரூபாய் முத்து சொம்பு.... நாராயண முத்து சொம்பு...


Prasanna Krishnan R
செப் 27, 2024 06:18

Mr. நாராயண மூர்த்தி, சொம்பு அடிக்கலாம். அதுக்கு ????. புரிந்தவன் பிஸ்தா.


Iyer
செப் 27, 2024 11:18

ஐயா புரியாமல் பிதற்ற வேண்டாம். இரவு பகலாக குடும்பத்துடன் பிரிந்து கண்காணா இடத்தில - CLIMATE க்கும் எதிரிக்கும் பயந்து வாழ்ந்து வரும் நம் வீரர்களை ராஷ்டபதியோ பிரதமரோ அல்லது வேறு தலைவரோ சந்தித்தால் அவர்கள் மனம் எவ்வளவு குதூகலம் அடையும் என்பது உமக்கு தெரியாது. நம் வீரர்கள் எவ்வளவு உற்சாகமும் INSPIRATION ம் பெறுவார்கள் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்கள்


Barakat Ali
செப் 26, 2024 19:29

எதிரிகளுக்கு நல்ல மெஸேஜ் ...... எங்கள் உறுதியைக் குலைக்க முடியாது என்று ..........


அப்பாவி
செப் 26, 2024 19:27

ஜீ தான் போவாரு. இப்போ இவிங்களும்.


N Sasikumar Yadhav
செப் 26, 2024 19:49

ஆனால் உங்க திராவிட மாடல் மொதல்வரு வேங்கைவயலுக்கும் , கள்ளகுறிச்சிக்கும் போகமாட்டாரு


RAMAKRISHNAN NATESAN
செப் 26, 2024 21:43

அது சரி ..... செபா வை வரவேற்க போயிருப்பீரே ???? மாலை எடுத்துக்கிட்டு போனீரா ???? சரக்கு கிடைச்சிருக்குமே ???? சரக்குக்கும், இருநூறு ஓவா க்கும் விலை போகிறவர் ஜீ பத்தி பேசவே கூடாது ....


hari
செப் 26, 2024 22:52

பாவம் அப்பாவி. வளர்ப்பு அப்படி என்ன பண்றது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை