உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மீண்டும் சொதப்பியது சென்னை அணி; பஞ்சாப்பிடம் 18 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது

மீண்டும் சொதப்பியது சென்னை அணி; பஞ்சாப்பிடம் 18 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது

முல்லான்பூர்: பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் சென்னை அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.பிரிமீயர் லீக் -2025 தொடரின் 22-வது லீக் போட்டியில் சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதின. பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி,பேட்டிங் தேர்வு செய்தது.முதலில் விளையாடிய பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். இதில் பிரப்சிம்ரன் சிங் 2 பந்துகளை எதிர்கொண்ட நிலையில், முகேஷ் சவுத்ரி பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறினார்.மற்றொரு துவக்க ஆட்டக்காரரான பிரியான்ஷ் ஆர்யா அதிரடியாக விளையாடினார். 39 பந்துகளில் 9 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் விளாசி சதம் அடித்தார். இறுதியில் 42 பந்துகளில் 103 ரன்களில் நுார் அஹ்மத் பந்தில் அவுட் ஆனார்.அடுத்து வந்த ஸ்ரேயஸ், அஹ்மத் பந்தில் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மார்கஸ் ஸ்டோனிஸ் 4 ரன்களும், வதேரா 9 ரன்களும், மேக்ஸ்வல் 1 ரன்னும் எடுத்து வந்த வேகத்தில் அவுட் ஆகி வெளியேறினர்.ஷஷாங் சிங், 36 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 52 (அரைசதம்) ரன்களும் மார்கோ ஜான்சன் ஆட்டமிழக்காமல் 34 எடுத்து அணியின் ரன்களை உயர்த்தினர். இறுதியில் பஞ்சாப் அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் எடுத்தது.சென்னை அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின், கலீல் அஹ்மத் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அஸ்வின் ஒரே ஓவரில் வதேரா, மேக்ஸ்வெல் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.220 ரன்களை வெற்றி இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணியில், ரச்சின் ரவீந்திரா 36 ரன்களிலும், ருதுராஜ் கெய்க்வாட் 1 ரன்களிலும் , சிவம் துபே 40 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். மெதுவாக ஆடிய டேவன் கான்வே 69 ரன்களுடன் ரிட்டையர்ட் ஹர்ட் வெளியேறினார் , 3 சிக்சர்கள் விளாசிய தோனி 27 ரன்களில் ஆட்டமிழந்தார். சென்னை அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

vijai hindu
ஏப் 09, 2025 09:21

எவன் தோத்தாலும் ஜெயித்தால் என்ன அவன் ஜெயிச்சா வாங்க கல்லா கட்டிக்கிட்டு போகப்போறான் நமக்கு தேவையில்லாத வேலை பணத்தை கொடுத்து டிக்கெட் வாங்குவதை விட வேறு தர்ம காரியங்களுக்கு செய்தால் புண்ணியமா போகும் கிரிக்கெட் என்பது இரண்டு நாடுகள் விளையாடும் போட்டியா இருந்தது இப்போது பல நாட்டு வீரர்கள் பிரிந்து விளையாடும் போது எப்படி நம் நாட்டு வீரர்கள் விளையாடுகிறார்கள் என்று நாம் ஆதரிக்க வேண்டும் ஐபிஎல்-லை தடை செய்ய வேண்டும் இது ஒரு சூதாட்ட விளையாட்டு


நிக்கோல்தாம்சன்
ஏப் 09, 2025 06:44

மும்பை இந்தியன்ஸ் , சென்னை சூப்பர் கிங்ஸ், ஹைதராபாத் சூப்பர் எல்லாம் பெரிய ஆளுங்க


Andumani
ஏப் 09, 2025 05:44

Chennsi சூப்பர் Kings இல்ல Chennai Senior Citizen Kings


ramani
ஏப் 09, 2025 05:32

தோற்பதற்கென்றே உள்ள அணி என்றால் அது சிஎஸ்கே தான். தோற்றாலும் ஆளை மாற்றாமல் ரசிகர்கள் நேரத்தை பணத்தை வீணடிக்கும் அணி சிஎஸ்கே


தமிழன்
ஏப் 09, 2025 03:07

இந்த பாகவதர் காலத்து டிரெண்ட் கொண்ட அணி இனி தேறாது எனவே இனி சென்னை விளையாடும் அனைத்து போட்டிகளிலும் மழை வந்து "விளையாடினாலாவது" 1 புள்ளியாவது கிடைக்கும் மானமும் மிஞ்சும்


Raj
ஏப் 09, 2025 01:55

CSK நாட்ரிக் அடித்து விட்டது.


kusu
ஏப் 08, 2025 22:20

இன்றும் சென்னை படுதோல்வி அடையும்.


முக்கிய வீடியோ