மேலும் செய்திகள்
தியாகராஜ பாகவதரின் நினைவு நாள் அனுசரிப்பு
02-Nov-2024
ஜே.பி., நகர் ; 'தாம்ப்ராஸ்' எனும் தமிழ்நாடு பிராமண சங்கத்தின் பெங்களூரு ஜே.பி., நகர் கிளை சார்பில், ராதா கல்யாண மகோத்சவம், இரு நாட்கள் நடந்தது.ஜெயநகர் 9வது பிளாக்கில் உள்ள ஸ்ரீராம மண்டலியில் நடந்த கல்யாண மகோற்சவத்தில், ஓசூர் ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி பாகவதர், ஈரோடு பாலாஜி பாகவதர், அவரது சிஷ்யர்கள், தோடமங்களம், குரு கீர்த்தனைகள், ஜெயதேவ அஷ்டபதி, பஞ்சபதி, திவ்யநாமங்கள் பாடினர்.இவ்விரண்டு நாட்களும் மூன்று வேளையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஜே.பி., நகர் கிளை பொறுப்பாளர் அருண்குமார், தலைவர் புவனேஸ்வரன், பொதுச் செயலர் புஷ்கலா ராஜன், சுப்பிரமணியன், ரவிசந்திரன், வித்யா, அரவிந்த் ஸ்ரீராம், பொருளாளர் முரளி மற்றும் வாழ்நாள் உறுப்பினர்கள், அவரது குடும்பத்தினர் பங்கேற்றனர்.
02-Nov-2024