உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டசபை தேர்தலில் தில்லுமுல்லு என்று ராகுல் கூறுவது அபத்தம்

சட்டசபை தேர்தலில் தில்லுமுல்லு என்று ராகுல் கூறுவது அபத்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'மஹாராஷ்டிராவில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தில்லுமுல்லு நடந்ததாக காங்., - எம்.பி., ராகுல் புகார் கூறுவது, முற்றிலும் அபத்தமானது' என கூறிய தலைமை தேர்தல் கமிஷன், 'வாக்காளர் பட்டியல்களுக்கு எதிராக எழுப்பப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், சட்டத்தின் ஆட்சிக்கு அவமானம்' என்றும் கூறியது.மஹாராஷ்டிராவில் 2024 நவம்பரில், 288 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில், பா.ஜ., - ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா - அஜித் பவாரின் தேசியவாத காங்., அடங்கிய மஹாயுதி கூட்டணி, 235 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dw27qrw2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பா.ஜ., 132 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததை அடுத்து, அக்கட்சியின் மூத்த தலைவர் தேவேந்திர பட்னவிஸ், முதல்வராக பதவியேற்றார். ஷிண்டே, அஜித் பவார் துணை முதல்வர்களாகினர்.

கட்டுரை

காங்., - உத்தவ் தாக்கரேயின் சிவசேனா - சரத் பவாரின் தேசியவாத காங்., அடங்கிய மஹா விகாஸ் அகாடி கூட்டணி, 50க்கும் குறைவான இடங்களையே கைப்பற்றி, எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெறவில்லை. இந்த தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதலே, தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகிறார். இதை, தலைமை தேர்தல் கமிஷன் மறுத்துள்ளது. இந்நிலையில், மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் குறித்து, 'மேட்ச் பிக்சிங் மஹாராஷ்டிரா' என்ற பெயரில், ஆங்கில நாளிதழில் ராகுல் கட்டுரை ஒன்றை எழுதி உள்ளார். அதில், மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், மேட்ச் பிக்சிங் செய்து பா.ஜ., வெற்றி பெற்றதாகவும், தேர்தல்களில் எப்படி முறைகேடு செய்ய வேண்டும் என்ற வரைபடம் அக்கட்சியிடம் இருப்பதாகவும், பீஹாரில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலிலும் இதே பாணியை பா.ஜ., பின்பற்ற உள்ளதாகவும் ராகுல் குற்றஞ்சாட்டி உள்ளார். மேலும், தேர்தலில் பா.ஜ., எப்படி முறைகேடு செய்கிறது என்பது குறித்த விபரங்களையும் அவர் வெளியிட்டு உள்ளார். தேர்தல் கமிஷனின் நியமன குழுவை திருத்த வேண்டும் வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களை சேர்க்க வேண்டும் ஓட்டுப்பதிவை அதிகரித்தல் பா.ஜ., வெற்றி பெற வேண்டிய இடங்களில் போலி ஓட்டுகளை பதிவு செய்து ஆதாரங்களை மறைப்பது.

கேள்வி

இது தான் தேர்தல் மோசடியின் படிநிலைகள் என ராகுல் குறிப்பிட்டு உள்ளார்.''தேர்தல் கமிஷனர்களை நியமிக்கும் குழுவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக மத்திய அமைச்சர் சேர்க்கப்பட்டுள்ளார். ''நடுநிலை நடுவரை நீக்கி, தங்களுக்கு சாதகமாக ஒருவரை பா.ஜ., நியமித்துள்ளது. நிலைமை இப்படி இருக்கையில், எப்படி தேர்தல்கள் நியாயமாக நடக்கும்?'' என, ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, தலைமை தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்ட அறிக்கை:மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தொடர்பாக ஏற்கனவே பல முறை விளக்கம் அளித்து விட்டோம். பாதகமான தீர்ப்புக்கு பின், தேர்தல் கமிஷனை அவதுாறு செய்வது முற்றிலும் அபத்தமானது. தவறான தகவல்களை பரப்புவது, தேர்தல்களின் போது அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்கு சமம். மேலும், அயராது பணியாற்றிய தேர்தல் கமிஷன் ஊழியர்களையும் அவமதிப்பதாகும்.மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின் போது, காங்., வேட்பாளர்களோ அல்லது அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களோ, எந்தவொரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. தேர்தலுக்கு முன், வாக்காளர் பட்டியல் தொடர்பாக காங்., உள்ளிட்ட எந்த கட்சிக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை.தோல்வி அடைந்த பின், அவதுாறு பரப்புவதை எப்படி ஏற்க முடியும்? மஹாராஷ்டிராவின் வாக்காளர் பட்டியலுக்கு எதிராக எழுப்பப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், சட்டத்தின் ஆட்சிக்கு அவமானம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.போலி கதைகள்!தொடர்ச்சியாக சட்டசபை தேர்தல்களில் தோல்வி அடைந்ததால் ஏற்பட்ட சோகம் மற்றும் விரக்தியால், போலி கதைகளை உருவாக்கி, ராகுல் கட்டுரை எழுதி உள்ளார். தோல்விக்கான காரணங்களை அறியாமல், வாய்க்கு வந்தபடி அவர் உளறி வருகிறார். பீஹார் சட்டசபை தேர்தலிலும் தோற்று விடுவோம் என்பதை அவர் உணர்ந்துள்ளார். அதனாலேயே, எந்த ஆதாரமுமின்றி அவர் பேசி வருகிறார்.- நட்டா,மத்திய அமைச்சர், பா.ஜ.,

குற்றச்சாட்டு என்ன?

மஹாராஷ்டிராவில் 2019 சட்டசபை தேர்தலில், வாக்காளர்களின் எண்ணிக்கை 8.98 கோடி. இது, 2024 லோக்சபா தேர்தலில் 9.29 கோடியாக அதிகரித்தது. அதாவது, ஐந்து ஆண்டுகளில் 31 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், 2024 நவம்பரில் நடந்த சட்டசபை தேர்தலின் போது, வாக்காளர்கள் எண்ணிக்கை 9.70 கோடியாக உயர்ந்தது. ஐந்து மாதங்களில், 41 லட்சம் புதிய வாக்காளர்கள் எங்கிருந்து வந்தனர் என்பதே ராகுலின் கேள்வியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

V Venkatachalam
ஜூன் 08, 2025 20:38

குழாயடி பேச்சுக்கும் பப்பு பேச்சுக்கும் வித்தியாசமே இல்லை.


V.Mohan
ஜூன் 08, 2025 19:04

இது என்ன அடாவடித்தனம்?. பள்ளிப்படிப்பையே பாதியில் விட்ட அறிவாளி இவர். பெரோஸ்கான் ராஜீவ் காந்தியின் புள்ளையான இவர் எந்த முறையான பயிற்சியோ அனுபவப் பட்டறிவோ இல்லாதவர். குடும்ப வாரிசு அரசியலால் காங்கிரஸ் தலைமையில் வந்து உட்கார்ந்து புரிதல் இல்லாமல் தேர்தல் கமிஷனை திட்டுகிறார். தேர்தல் கமிஷன் அறிவிப்புகளை கவனித்து நோக்காமல் அர்த்தம் கெட்ட பாணியில் தவறாக தேர்தல் கமிஷனையே குற்றவாளியாக்கி பேசுகிறார். அதை இங்கே தமிழ்நாட்டில் உள்ள அவரது நேரடி வாரிசுகளான, திருமா, செல்வப் பெருந்தகை, மனோ தங்கராஜ் போன்றவர்கள் அடியொற்றி, படியெடுத்து பேசி வருகிறார்கள்.என்னே கயமை??


SUBBU,MADURAI
ஜூன் 08, 2025 19:44

ராகுல் தன் தேசத்திற்கு ஒரு போதும் விசுவாசமாக இருக்க மாட்டார் என்பதை நிரூபித்து கொண்டு இருக்கிறார்


M S RAGHUNATHAN
ஜூன் 08, 2025 14:47

It is time the election commission calls the bluff of Rahul. It should file a case if needed that the Congress leader is ing malafide remarks on the EC and bringing disrepute to the Constitutional Authority. Or in the contrary, the EC should warn the Congress that if the LOP continues to abuse and s aspersions on the conduct of EC, the party will be derecognised and banned from electoral arena.


Rajah
ஜூன் 08, 2025 10:50

தாய்லாந்து அல்லது வியட்நாம் சென்று வந்தால் கொஞ்சம் தெளிவு வரலாம்.


Chandru
ஜூன் 08, 2025 10:46

BJP will certainly face the consequences if the party is not going to put an end to the blabberings of Rahul Gandhi. In this context as a a strong supporter of BJP I feel that Modi does a lot of talking but not ACTING as a strong Prime Minister. Indira Gandhi as a PM had this quality of crushing those who resorted to talking nonsense. Bharath Mata Ki Jai


பேசும் தமிழன்
ஜூன் 08, 2025 10:04

பப்பு... அப்போ நீங்கள் பாராளுமன்ற தேர்தலில் 99 தொகுதியில்...... தில்லுமுல்லு செய்து தான் வெற்றி பெற்றீர்களா ???..... அப்போ நீங்கள் மக்கள் ஓட்டு போட்டு ஜெயிக்க வில்லையா ???


ManiK
ஜூன் 08, 2025 09:10

படையப்பா சினிமாவின் நீலாம்பரியோட மறு அவதாரம் தான் இந்த ராவுல் வின்சி.


Narasimhan
ஜூன் 08, 2025 08:56

உன் மொகறக்கட்டய பார்த்தாலே யாருக்கும் வோட்டு போடும் எண்ணம் வரவே வராது. நீ 110 வயது ஆனாலும் திருந்தமாட்டாய். அதேபோல்தான் உனக்கு சொம்பு தூக்குபவர்கள் நிலையும்


VENKATASUBRAMANIAN
ஜூன் 08, 2025 08:10

தோற்றால் ஈவிஎம் மேல் பழி போடுவது. வென்றால் வாயை மூடிக்கொண்டு இருப்பது இதுதான் எதிர்கட்சிகளின் லட்சணம்


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 08, 2025 08:08

தேர்தல் நடக்கும் தினத்தன்று மாலை பதிவான வாக்குகள் என்று தேர்தல் ஆணையம் வெளியிடும் கணக்கு, வாக்கு எண்ணிக்கை அன்று பல தொகுதிகளில் மாறுபடுகிறதே. அதற்கு ஆணையம் இன்றுவரை மழுப்பலான பதிலைத்தான் கொடுக்கிறது.


சமீபத்திய செய்தி